search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puthiyambuthur"

    • புதியம்புத்தூர் அருகே உள்ள பச்சை பெருமாள் புரத்தை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவரது மனைவி சரஸ்வதி(வயது 57).
    • நிலத் தகராறு சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுப்படி சரஸ்வதி தன் நிலத்தை சர்வேயர் மூலம் அளவீடு செய்துள்ளார்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள பச்சை பெருமாள் புரத்தை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவரது மனைவி சரஸ்வதி(வயது 57).

    அதே ஊரை சேர்ந்த அந்தோணிசாமி மகன்கள் ஞான ராஜ் என்ற பிரபாகரன் (48), சந்திரசேகர் (43) ஆகியோருக்கும் சரஸ்வதிக்கும் நிலத் தகராறு சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவுப்படி சரஸ்வதி தன் நிலத்தை சர்வேயர் மூலம் அளவீடு செய்துள்ளார். இதனால் ஞானராஜ் என்ற பிரபாகரன், சந்திரசேகர் ஆகியோர் சரஸ்வதி வீட்டிற்கு சென்று சரஸ்வதி, செல்வராஜ் இருவரையும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் காயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதியம்புத்தூர் அருகே உள்ள சாமி நத்தம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது.
    • சிலை திருட்டு குறித்து புதிய முத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள சாமி நத்தம் கிராமத்தில் ஊருக்கு தென்புறம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    இக்கோவிலில் வழிபடு பவர்கள் காலையில் சென்று பார்த்த போது கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருடப்பட்டது தெரிய வந்தது .

    சிலை திருட்டு குறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் சங்கர், புதியம் புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புதிய முத்தூர் போலீசார் சிலை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

    ×