search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூழ்கி"

    • குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
    • தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பொன் நாடார். இவரது மனைவி ஆர்தர் செல்வி (வயது 72). இவர் குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தக்கலை அருகே குன்னத்துகோணம் பகுதியில் இருக்கும் மகள் டெய்சி வீட்டில் வசித்து வருகிறார். ஆர்தர் செல்வி தினமும் அருகில் உள்ள குன்னத்துகுளத்தில் குளிப்பது வழக்கம்.

    வழக்கம்போல நேற்று அதிகாலை 5 மணிக்கு குளத்தில் குழிப்பதற்கு சென்றவர் நிலை தடுமாறி குளத்தில் விழுந்தார். மழை நேரம் என்பதால் குளத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமானதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் இவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஏற்கனவே ஆர்தர் செல்வி இறந்துவிட்டதாக கூறினார்.

    இதுசம்பந்தமாக உறவினர் டெய்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜ வாய்க்காலில் குளிக்கும்போது காவிரி ஆற்றில் மூழ்கி பலியான கல்லூரி மாணவன் உடல் மீட்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பெங்களூர் சிங்காபுரம் லேஅவுட்டை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.

    சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவில் அதே ஊரைச் சேர்ந்த 11 பேர்களுடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் வந்துள்ளார். அப்போது படுகை அணை காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்தார்.

    திடீரென ஸ்ரீதர் மட்டும் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் ஸ்ரீதரை தேடியனர்.

    நேற்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தேடும் பணியில் ‌‌ ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஸ்ரீ தர்‌ உடலை ராஜா வாய்க்காலின் படித்துறைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல் வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்துஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×