search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kollidam"

    • புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பலர் ஆற்றில் நீராடி தாலி பெருக்கி கட்டி தோச பரிகாரம் செய்து சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • காவிரி க்கரையோர மாவட்டங்க ளில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது

    திருமானூர்,  

    அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிட ஆற்றில் ஆடி18 முன்னிட்டு புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பலர் ஆற்றில் நீராடி தாலி பெருக்கி கட்டி தோச பரிகாரம் செய்து சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது

    18ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி.. வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம்

    மன்னர்கள் காலம் தொட்டே காவிரி க்கரையோர மாவட்டங்க ளில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    தென்மேற்குப் பருவமழை ஆனிமாதம் துவங்கியதும், குடகுமழையில் பெருக்கெடுக்கும் காவிரி வெள்ளம், ஆனி கடைசியில் கொங்கு, சோழமண்டலங்களைத் தொடும். சித்திரை, வைகாசி வெயிலில் காய்ந்து கிடந்த நிலங்களும், நீர்நிலைகளும் ஆடியில் வரும் புதுதண்ணீரால் நிரம்பும்.

    ஆடிப்பட்டத்தில் அந்தாண்டு முதன்முதலாக விவசாயிகள் தங்கள் நெல்சாகுபடியைத் துவங்குவார்கள். நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே "ஆடிப்பெருக்கு' விழாவில் திருமானூர் கொள்ளிட ஆற்றங்கரையில் போலீஸ் காவலர்கள் துணையோடு புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கொள்ளிட ஆற்றில் நீராடி சாமி தரிசனம் செய்தனர் பொதுமக்களுக்கு ஆற்றில் குளிக்க திருமானூர் போலீஸ் காவல்பணியில் ஈடுபட்டிருந்தது.



    • ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.
    • மொத்தமுள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டையில் கல்லணைக் கால்வாயில் சீரமைப்பு பணி, ஆலக்கு டியில் முதலை முத்துவாரி, திருச்சென்னம்பூ ண்டியில் கோவிலடி வாய்க்கால், மாரனேரி, விசலூா் படுகை ஆனந்தகா வேரி வாய்க்கால், கண்டமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூா்வாரும் பணி, கல்லணையில் புனரமைப்பு பணி, திருக்காட்டுப்பள்ளி காவிரியில் படுகை அணை கட்டுமானப் பணி ஆகியவற்றை கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தாா்.

    தொடர்ந்து கல்லணையில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னே ற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

    கொள்ளிடத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஷட்டர்களுக்கான மின்மோட்டார்கள், கொள்ளிடம் மணல் போக்கிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் தரைத்தள பணிகள் மற்றும் தடுப்பு சுவர் ஆகிய பணிகளையும், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னா் அவா் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள், ஏரிகள் ஆகியவற்றில் 1,068.45 கி.மீ. தொலைவுக்கு ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

    மொத்த முள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா்கள் இளங்கோ, மதனசுதாகா், பவழகண்ணன், உதவி செயற்பொறியாளா்கள் சிவக்குமாா், மலா்விழி, சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • இரும்பு ஷட்டர்கள் புதிதாக பொருத்தப்பட்டு அதன் மேலே உள்ள ஏற்றி இறக்கும் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
    • பாதுகாப்பாக குளிப்பதற்கு ஏற்ற வகையில் தொட்டி போன்ற அமைப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

     தஞ்சாவூர்:

     கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் மற்றும் பாலங்களில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கொள்ளிடம் ஆற்றில் இரும்பு ஷட்டர்கள் புதிதாக பொருத்தப்பட்டு அதன் மேலே உள்ள ஏற்றி இறக்கும் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன .

    அதேபோல காவிரி,வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் மின்மயமாக்கப்பட்ட ஏற்றி இறக்கும் கருவிகள் சீரமை க்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காவிரி ஆற்றில் சிறுவர் பூங்கா அருகில் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படும் சமயங்களில் பாதுகாப்பாக குளிப்பதற்கு ஏற்ற வகையில் தொட்டி போன்ற அமைப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    காவிரி ஆற்றின் உள்பகுதியில் நீரோட்டத்தை சீரமைக்கும் வகையில் தடுப்பு அமைப்புகள் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    தோகூர்பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள வடிகால் பாலத்தை அதன் மேற்பகுதியில் உள்ள சிமெண்ட் கான்கிரீட்டுகளை அகற்றி சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    நடைபெற்று வரும் பணிகளை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், ஆகியோர் பார்வையிட்டனர்.

    உதவி பொறியாளர்கள் திருமாறன், அன்பு செல்வன் ஆகியோர் செய்யப்படும் பணிகள் குறித்து விளக்கி கூறினர்.

    • சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
    • தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று மாலை வந்தனர்.

    பின்னர் மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சிறிது நேரத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர். இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ் ஆகிய 2 பேர் உடலை சடலமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரவீன்ராஜ், தாவீது, ஈசாக், தெர்மஸ் ஆகிய 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து திருக்காட்டுபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட கோரிக்கை விடப்பட்டுள்ளது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபபட்டது.

    திருமானூரில் நடைபெற்ற அக்கட்சியின் கோரிக்கை மாநாடு, நிதியளிப்பு பொது கூட்டத்தில். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    திருமானூர், திருமழப்பாடி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை குறைக்க வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். இந்த திட்டத்தை நகர்புறங்களிலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுக் கூட்டத்துக்கு அக்கட்சியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் டில்லிபாபு தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், கே.கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏசுதாஸ், சுப்பு, கார்த்திக், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.கணேசன், ஆரோக்கியநாதன், லட்சுமணன், கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    • கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், கரையோரம் சாகுபடி செய்த பயிர்கள் சேமதடைந்தன.
    • கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்லும் நிலையில், அப்பகுதியிலுள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராம மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஒரு கோரிக்கை அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது..

    கொள்ளிடம் கரையோரமுள்ள வாழ்க்கை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்களாவும், கீரை, வாழை உள்ளிட்ட தானியப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், கரையோரம் சாகுபடி செய்த பயிர்கள் சேமதடைந்தன.

    இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்லும் நிலையில், அப்பகுதியிலுள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் கசிந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியினர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாழ்க்கை கிராமத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர் வாரி, கசிவு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

    கொள்ளிடம் அருகே 7 ஏக்கர் முந்திரி தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சி கேவரோடை கிராமத்தில் தபல ஏக்கரில் முந்திரி தோப்புகள் உள்ளன.இந்த முந்திரி காட்டில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது. கடும் வெயிலால் தீ மளமளவென பரவியது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று சுமார் 3மணிநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.இந்த தீவிபத்தில் சுமார் 7ஏக்கரில் முந்திரி தோட்டமும், 160பனை மரங்களும் எரிந்து சாம்பலாயின. புதுப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    கொள்ளிடம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த மகேந்திரபள்ளி ஊராட்சி வெட்டாற்றங்கரையில் காத்தாயி அம்மன்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வழக்கம் போல் பூஜை முடிந்ததும், இரவு பூஜாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நள்ளிரவு மர்மநபர்கள் கோவில் மதில் சுவர் வழியாக ஏறிகுதித்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலிலும் மர்ம நபர்கள் புகுந்து நேற்று இரவு உண்டியல் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். இரண்டு கோவில்களிலும் ரூ.50 ஆயிரம் வரை பணம் திருட்டு போய் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரிலும் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவை சேர்ந்த குட்டார் என்பவரின் மகன் முருகேசன் (வயது45) கூடைப்பின்னும் தொழிலாளி.

    இவர் நேற்று மாலை முருகேசன் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற முருகேசன் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டு அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கிய முருகேசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் இரவு நேரமானதால் முருகேசனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக முருகேசன் உடலை தீயணைப்பு படையினர் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் தேடினர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் முருகேசன் உடல் கிடப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஆற்றில் மூழ்கி பலியான முருகேசனுக்கு அரசாயி (40) என்ற மனைவியும், கலைச்செல்வி (24) என்ற மகளும், சதீஷ்(22) என்ற மகனும் உள்ளனர். 

    திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஓடும் அதிக தண்ணீரால் மேலணையில் உள்ள 8 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Cauvery #Mukkombu
    திருச்சி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில் உள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால், ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. மதகு உடைப்பை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அணைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் வந்து அணையை பார்வையிட்டார். 
    முக்கொம்பு அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. #Mukkombudam
    திருச்சி:

    கர்நாடகத்தில் தொடரும் கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியாறு மூலம் மேட்டூர் அணைக்கு வந்தடைந்த தண்ணீரால் அடுத்தடுத்து அணை 2 முறை நிரம்பியது.

    இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அகண்ட காவிரி என்று அழைக்கப்படும் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தண்ணீர் தொட்டு கரைபுரண்டு செல்கிறது.

    தொடர்ந்து அந்த தண்ணீர் நேற்று கரூர் மாவட்டத்தை வந்தடைந்தது. இதனால் ஆற்றில் உள்ள நீரேற்று நிலையங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் 1 லட்சத்து 56 ஆயிரம் கன அடி தண்ணீருடன், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் 50 ஆயிரம் கனஅடி நீர் ஈரோடு அருகே காவிரியில் கலக்கிறது.

    அதேபோல் திருப்பூரில் உள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒன்று சேர்ந்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் கலக்கிறது. இதன்மூலம் மாயனூர் கதவணைக்கு 2 லட்சத்து 28 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வரத்து உள்ளது. அங்கிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களிலும் 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    முக்கொம்பு மேலணைக்கு தண்ணீர் வரத்து ஒரு லட்சத்து 97 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதில் காவிரி ஆற்றில் 50 ஆயிரத்து 146 கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. கிளை வாய்க்கால்களில் 2 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி காவிரி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்ற காட்சி

    2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை தடுப்பணை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கொள்ளிடத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் கனஅடியை தாண்டி தண்ணீர் செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அங்கிருந்து 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் முழுவதுமாக கடலில் சென்று கலக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு கீழணையில் இருந்த இவ்வளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும்.  #Mukkombudam
    ×