search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukkombu Dam"

    • திருச்சி முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது
    • காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததோடு, அவர்களுக்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து தங்கவும் அமைச்சர், கலெக்டர் ஏற்பாடுகள் செய்தனர்

    திருச்சி:

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதுமாக திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக 2 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடியது.

    இருகரைகளையும் தொட்டுச்சென்ற காவிரியுடன் மாயனூரில் பவானி, அமராவதி அணை தண்ணீரும் சேர்ந்து திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்தது.

    இதையடுத்து அங்கிருந்து கொள்ளிடத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியும், மீதமுள்ள தண்ணீர் காவிரி ஆற்றிலும் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு, கண்காணிப்பு அலுவலர், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அணையின் உறுதித்தன்மை குறித்தும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததோடு, அவர்களுக்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து தங்கவும் ஏற்பாடுகள் செய்தனர்.

    காவிரியில் வெள்ளம் குறையும் வரை அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காவிரியில் தண்ணீர் வரத்து சற்றே குறையத்தொடங்கி உள்ளது. அதாவது இன்று காலை 8 மணி நிலவரப்படி 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அதில் காவிரியில 50 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 31 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டது.

    காவிரியாற்றில் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும் அழகை காண விடுமுறை தினமான இன்று காலை முதல் திருச்சி காவிரி பாலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் குவிந்து வருகிறார்கள்.

    அங்கு பாதுகாப்புக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல் கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் தூண்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. 20-வது தூண் பகுதி சிறிது சிறிதாக தண்ணீருக்குள் மூழ்கி வருகிறது.

    கடந்த சில தினங்களாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே செல்லும் கல்லணை சாலையில் உத்தமர்சீலி பகுதியில் தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கியது. மேலும் 300 ஏக்கருக்கும் மேல் வாழையும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    இதனால் உத்தமர்சீலி பகுதியில் அந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையை கடக்க கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அந்த தரைப்பாலத்தை இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்று கடப்பதும், செல்போனில் புகைப்படம் எடுப்பதுமாக இருந்து வருகிறார்கள்.

    இன்னும் ஒரு சில தினங்களில் படிப்படியாக வெள்ளம் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா.பழூர் அருகே அணைக்குடி கிராமம் கொள்ளிடத்தை ஒட்டி அமைந்துள்ளது.

    நேற்றைய தண்ணீர் திறப்பின் அடிப்படையில் கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் சென்றதால் அந்த கிராமத்தை நீர் சூழ்ந்தது. சுமார் 70 குடும்பங்கள் வீட்டை காலி செய்து வெளியேறினர். இந்த கிராமத்தில் முகாம் இல்லாத காரணத்தினால் எங்கு செல்வது என தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    தங்களுக்கு நிரந்தர தீர்வாக கொள்ளிடத்தின் கரையை உயர்த்தி பலப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் சலவைத்தொழிலாளர்கள் துவைத்து உலர வைத்திருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
    • தற்போது 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் கரையோர பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருச்சி:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த மாதம் 30-ந்தேதி 31 ஆயிரம் கனஅடியாக இருந்து நீர்வரத்து மறுநாள் 42 ஆயிரமாக உயர்ந்தது. இதனால் மீண்டும் மேட்டூர் அணையில் 16 கண் மதகுகள் வழியாக காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஏற்கனவே டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. தற்போது அணைக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உபரிநீர் அப்படியே காவிரியாற்றில் திறக்கப்படுகிறது. இன்று காலை 9 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் நாமக்கல், கரூர் மாயனூர் வழியாக முக்கொம்பு மேலணைக்கு கரைபுரண்டு வருகிறது. இன்று காலை 4 மணி நிலவரப்படி திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அதில் 55 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றிலும், 85 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் சலவைத்தொழிலாளர்கள் துவைத்து உலர வைத்திருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

    ஆனால் தற்போது 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் கரையோர பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காவிரியில் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டபோது திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் வயல்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு சேதம் அடைந்தது. அதேபோல் பூக்கள் சாகுபடியும் பாதிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது காவிரியாற்றில் 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியான கல்லணை சாலையில் அமைந்துள்ள உத்தமர்சீலி பகுதியில் இன்று காலை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்து மூழ்கடித்து வருகிறது.

    அதேபோல் சாலையையும் மூடியவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறு, வயல், சாலை அனைத்தும் ஒரே இடமாக காட்சி அளிப்பது போல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் சில மணி நேரங்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உத்தமர்சீலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு உள்ளேயும் வெள்ளநீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி உத்தமர்சீலி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், ஏற்கனவே காவிரியாற்றில் திடீரென்று கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வாழை பயிர்கள் சேதமடைந்தன.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 200 ஏக்கர் வாழை தண்ணீரில் மூழ்கிவருகிறது. இதனை எந்தவொரு அதிகாரியும் பார்வையிட வரவில்லை. இதேபோல் தண்ணீர் வந்து கொண்டிருந்தால் உத்தமர்சீலி பஞ்சாயத்து குடியிருப்புகளும் பாதிக்கப்படும் என்றார்.

    இதற்கிடையே நேற்று நள்ளிரவில் திருச்சி மாவட்ட கலெக்டர் முக்கொம்பு மேலணைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதிக அளவில் தண்ணீர் செல்வதை பார்வையிட்ட அவர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விழிப்புணர்வுடன் பணியாற்றிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து காவிரியாற்றில் கூடுதல் தண்ணீர் வெளியேற்றத்தால் திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள கங்காரு மனநல காப்பகத்திற்கு சென்றார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டு அதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

    முக்கொம்பு அணையில் 19-வது மதகின் மேல் பகுதியில் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்த மதகு பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #MukkombuDam
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் அணை கடந்த 22-ந் தேதி இரவு உடைந்தது. 45 மதகுகளில் 6 முதல் 14 வரை உள்ள 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட் டன. இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் வீணாக வெளியேறியது.

    இதை தடுக்க ரூ.95 லட்சம் மதிப்பில் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. தண்ணீரின் வேகம் காரணமாக சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. முதற்கட்டமாக மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி முடிந்துள்ளது.

    மதகுகள் உடைந்த இடத்தில் 125 மீட்டர் இடைவெளியில் பாறாங்கற்கள் கொண்டு அடைக்கப்பட்டது. தற்போது பாறாங்கற்கள் மீது கிராவல் மண் நிரப்பப்பட்டது. ஆனாலும் பெரிய மற்றும் சிறிய பாறாங்கற்களுக்கிடையே உள்ள இடைவெளி வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.

    இதனை தடுப்பதற்காக அணையின் மேற்குப்பகுதியில் மணல் மூட்டைகள், வாழை சருகுகள், கரும்பு சக்கைகள், வைக்கோல் கொண்டு வரப்பட்டு துளைகளுக்குள் செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் தண்ணீர் கசிந்து வருவதால் பிளாஸ்டிக் தார்ப்பாய்களை கொண்டு அடைக்கும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    மதகு உடைந்த பகுதி 20 அடி ஆழமானது. 260 மீட்டர் நீளத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்புகள் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இன்னும் 75 முதல் 80 மீட்டர் வரை மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வடகரை மதகு பகுதியிலிருந்து 19-வது மதகிலிருந்து தெற்கு நோக்கி மணல் முட்டைகளை அடுக்கும் பணி நடந்து வந்தது. தண்ணீரின் வேகத்தால் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது வடகரை பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. 19-வது மதகின் மேல் பகுதியில் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    அந்த மதகு உடையும் அபாயத்தில் உள்ளது. அப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அசம்பாவிதத்தை தவிர்க்க 19-வது மதகு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அணையின் மற்ற மதகுகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். 19-வது மதகில் விரிசல் இல்லை. அப்படி எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் வகையில் அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தினமும் அணையை பராமரித்து வருகிறோம்.

    உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்தாலும் சிறிய இடைவெளி வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கரும்பு சக்கை, கிராவல் மண் கொண்டும் அடைத்து வருகிறோம். தொடர்ச்சியாக பாறையின் இடுக்குகளில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க கான்கிரீட் வைத்து பூச்சுகள் பூசப்பட உள்ளது.

    தண்ணீர் வெளியேறுவதை நிறுத்திவிட்டாலே 99 சதவீத பணிகள் நிறைவடைந்து விடும். புதிய பாலம் கட்ட தேர்வு செய்த இடத்தில் ஆய்வு பணிகள் முடிந்துவிட்டது. திட்ட மதிப்பீடு அரசுக்கு விரைவில் அனுப்பப்படும். விவசாய காலம் முடியும் வரை கண்காணிக்கப்படும். பின்னர் அரசு அனுமதி கிடைத்து நிதி ஒதுக்கப்பட்டதும் டெண்டர் விடப்பட்டு 2 அல்லது 3 மாதத்தில் புதிய பாலம் கட்டுமான பணிகள் துவங்கும்.

    அதுவரை டெல்டா மாவட்டங்களுக்கு பாசனம் பாதிக்காத வகையில் கண்காணித்து வருகிறோம். தற்போது காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து கொள்ளிடத்துக்கு தண்ணீர் பாய்வது 3 நாட்களுக்கு முன்பே தடுக்கப்பட்டு விட்டது. தற்போது கொள்ளிடத்தில் ஆயிரம் கனஅடி நீரே திறக்கப்பட்டுள்ளது என்றனர்.  #MukkombuDam


    ராணுவம் மூலம் தற்காலிக கதவணை அமைக்க கோரி திருச்சி முக்கொம்பில் 8-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #PRPandian #MukkombuDam
    மன்னார்குடி:

    தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் காவிரி டெல்டாவில் திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை பாசன பகுதிகளுக்கு சென்றடையவில்லை. நாற்று விடுவதற்கு நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கிறது. நேரடி விதைப்பு செய்யப்பட்ட பயிர்கள் கருக தொடங்கி விட்டது.

    திருச்சி முக்கொம்பில் உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் கதவணையில் மண்மூட்டை போட்டு தடுத்து காவிரி வழியாக நாங்கள் பாசனத்தை கொண்டு வருவோம் என்று அரசு சொல்வது தவறான நடவடிக்கை. இதனை ஏற்க இயலாது. உடனடியாக ராணுவத்தை கொண்டு தற்காலிக கதவணைகள் அமைக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீரை விடுவிக்க வேண்டும்.

    ராசி மணலில் அணையை கட்டி உபரி நீரை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி முக்கொம்பில் விசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #MukkombuDam
    முக்கொம்பு கொள்ளிடத்தில் இன்று இரவுக்குள் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #MukkombuDam #MRVijayabaskar
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் உடைந்ததையடுத்து அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு உடைந்த பகுதியில் அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அணையில் 1 முதல் 5-வது மதகுகள் வரை மணல் மூட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    மணல் மூட்டைகளை தாங்கும் அளவிற்கு பக்கவாட்டில் சவுக்கு கம்புகள் நடப்பட்டுள்ளன. இதேபோல வடகரை பகுதியில் 13-வது மதகில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் மணல் மூட்டைகளை ஆற்றில் ஓடும் தண்ணீருக்குள் அடுக்கி நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, சவாலாகவும் அமைந்துள்ளது. மேலும் 6 முதல் 13-வது மதகு வரை உடைந்த பகுதியில் ஆற்றில் ஆழம் அதிகமாக இருப்பதால் அங்கு சவுக்கு கம்புகள் நடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    முக்கொம்பில் மதகுகள் உடைந்த பகுதியில் ஆற்றில் சவுக்கு கட்டைகளை ஊன்றி, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும் காட்சி.

    இதையடுத்து அங்கு இரும்பு குழாய்களை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரும்பு குழாய்கள் அணையின் மேற்கு பகுதியில் நிறுவப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் உடைந்த மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரை கட்டுப்படுத்த பாறாங்கற்களை அதிகளவில் கொட்டி, அடைப்புகள் ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அணையின் கிழக்கு பகுதியில் லாரிகள் இறங்கி செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    முக்கொம்பு அணையில் நடை பெற்று வரும் சீரமைப்பு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு பாலம் உடைந்த பகுதியில் 24 மணி நேரமும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாக கொள்ளிடத்துக்கு தண்ணீர் செல்லாத வகையில் மணல் திட்டு அமைக்கப்படுகிறது.

    மேலணை உடைந்த இடத்தில் மணல் மூட்டைகள் மற்றும் பெரிய பாறாங்கற்களை கொண்டும் தடுப்பு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென 160 லாரிகள் மூலம் கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பாறாங்கற்கள் கொண்டு வரப்படுகின்றன.

    உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 15 அடிக்கு மேல் ஆழம் உள்ளது. தண்ணீரின் வேகமும் அதிகமாக உள்ளது. இன்று இரவுக்குள் கொள்ளிடத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என்றார். #MukkombuDam #MRVijayabaskar
    முக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். #TNMinister #Udhayakumar #Mukkombu
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஜெயலலிதா பேரவையினர் மற்றும் இளைஞர்கள் சைக்கிள் பேரணி நடத்தி வருகிறார்கள்.

    அருப்புக்கோட்டையில் நிறைவு பெற்ற சைக்கிள் பேரணியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் 214 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    ஏழை-எளிய மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவர் மக்களுக்காக சிந்தித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு தொடர்ந்து கொண்டு செல்லும் பணியினை சிறப்பாக செய்து வருகிறார்.

    காவிரி உரிமை, எய்ம்ஸ் மருத்துவமனை, ஜல்லிக்கட்டு போன்ற முக்கிய உரிமைகளை அ.தி.மு.க. அரசு சட்டப்போராட்டம் நடத்தி பெற்று தந்துள்ளது.

    தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உழைக்கும் பெண்கள் பணிச்சுமை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயியின் மகன் என்பதால் எளிதில் அணுகக்கூடிய சாமானிய முதல்வராக இருந்து வருகிறார். திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் முக்கிய அணையான மேட்டூர் அணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வறண்டு கிடந்தது. இந்த அணை நிரம்புமா? விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்றெல்லாம் விவசாயிகள் ஏங்கினர்.

    ஆனால் கடந்த மாதத்தில் மட்டும் 4 முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்துள்ளது. மேட்டூர் அணை மட்டுமல்ல, கன்னியாகுமரி பக்கம் சென்றாலும் பேச்சிப்பாறை நிரம்பி வழிகிறது. அதுபோல வைகை, பவானி சாகர், பெருஞ்சாணி உள்ளிட்ட அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன.

    பக்கத்து மாநிலங்களில் நாம் தண்ணீர் கேட்காமலேயே அவர்களே திறந்து விடுறார்கள். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திறந்து விடுங்கள் நாங்கள் அதை பெற்றுக்கொள்கிறோம் என்ற அளவிலே தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள், நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.

    முதல்-அமைச்சருக்கு தண்ணீர் ராசி என்று நினைக்கிறேன். இங்கே பேசிய அமைச்சர் மற்றும் நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.

    முக்கொம்பு அணை உடைப்புக்குக்கூட கண்திருஷ்டியே காரணமாக இருக்கலாம். அந்த அளவுக்கு மக்கள் நலப்பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவுபடுத்தி சிறப்பாக செய்து வருகிறார்.

    ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசுக்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் மற்றும் அ.தி. மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். #TNMinister #Udhayakumar  #Mukkombu
    முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #EdappadiPalaniswami #MukkombuDam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு அணையை ஆய்வு செய்யாமல் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிட்டதே பாதிப்புக்கு காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் மதகு உடைந்துள்ளது. முன்கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து தண்ணீர் திறந்து விட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. மதகுகளை சீரமைக்கும் பணியானது, 40 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.



    மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #EdappadiPalaniswami #MukkombuDam

    முக்கொம்பு அணையை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை 2-ந்தேதி மாலை திருச்சி வருகிறார். #mukkombudam

    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை மதகு உடைந்ததை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடைந்த அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு புதிய அணை கட்ட உத்தரவிட்டு சென்றுள்ள நிலையில் தற்போது தற்காலிக அணை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் முக்கொம்பு அணையை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை 2-ந்தேதி மாலை திருச்சி வருகிறார். இரவில் திருச்சியில் தங்கும் அவர் மறுநாள் திங்கட்கிழமை காலை முக்கொம்பு கொள்ளிடம் அணையை பார்வையிட செல்கிறார்.

    அவருடன் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகன், திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மற்றும் எம்.எல்.ஏக்கள் செல்கின்றனர்.  #mukkombudam

    உடைந்த முக்கொம்பு அணை மதகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 2 பேர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். #kollidam #kollidambridge #mukkombudam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் அதிகம் செல்வதால் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அங்கு தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை கட்டுமான பொருட்கள் படகில் ஏற்றி செல்லப்பட்டு, பணிகள் நடந்து வரும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆற்றின் நடுவே செல்லும் போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்தது. அதில் இருந்த 2பேர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  #kollidam #kollidambridge #mukkombudam
    முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் மேலும் சில மதகுகளில் விரிசல் மற்றும் அணையின் அடித்தளம் பிளாட்பாரத்தில் விரிசல் இருப்பதாக நீரில் மூழ்கி ஆய்வு செய்த நீச்சல் வீரர்கள் தெரிவித்துள்ளனர். #kollidam #kollidambridge #mukkombudam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மதகுகளை அடைக்க 2½ லட்சம் மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டன. அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை, 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது இதுவரை 1.25 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அணையில் இடிந்த 9 மதகுகள் மட்டுமின்றி மீதமுள்ள 36 மதகுகளும் நல்ல நிலையில் உள்ளதா? என்றும், கொள்ளிடம் அணையின் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

    இதற்காக, தண்ணீருக்கு அடியில் சென்று அணையின் மதகுகளில் விரிசல் உள்ளதா? அணையின் பிளாட்பாரம் விரிசல் விடாமல் இருக்கிறதா? என கண்டறிவதற்காக ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள ‘ஹைடெக்’ சிவில் என்ஜினீயர்ஸ் ஏஜென்சியினர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

    அவர்களில், ஆழ்கடலில் மூழ்கி முத்து மற்றும் சிப்பிகளை சேகரிக்கும் அனுபவம் உள்ள நீச்சல் பயிற்சியாளர்கள் பாலு (வயது56), சிவா (40), சந்தனகுமார் (40) ஆகிய 3 பேரும் முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு வந்தனர்.

    அவர்கள் தண்ணீரில் மூழ்கி அணையின் ஒவ்வொரு மதகையும் ஆய்வு செய்தனர். தூண்கள், மதகுகள் மற்றும் அணையின் உறுதித்தன்மை குறித்து உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீரில் மூழ்கி ஆய்வு நடத்தினர். அப்போது, கொள்ளிடம் அணையில் உள்ள எஞ்சிய மதகுகள் சிலவற்றில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அணையின் அடித்தள பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.


    இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய அணைப் பகுதியும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இதனிடையே காவிரி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிப்பு, திருச்சியில் பெய்த மழை ஆகியவற்றால் கொள்ளிடம் அணையில் தற்காலிக சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டது. இதையறிந்த பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார்.

    கொள்ளிடம் அணைப்பகுதிக்கு சென்று சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்படாமல் விரைவாக முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதையும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். தற்காலிக சீரமைப்பு பணியை விரைந்து முடிப்பது தொடர்பாகவும், மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    தற்காலிக பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் ராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதமடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாக பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடைபெற இருக்கிறது. பொதுப்பணித்துறை மூலம் 260 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்படும். தற்போது முதல் கட்டமாக 60 சதவீத சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. கொள்ளிடத்துக்கு வரும் தண்ணீரை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவுபெறும். அதன் பின்னர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தாலும் கொள்ளிடம் அணைக்கு பாதிப்பு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கடந்த மாதம் அதிக அளவு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக அணையின் மதகுகள் உடைந்தன. தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் மேலும் சில மதகுகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள், விவசாயிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கர்நாடகாவில் மழை குறைந்ததன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.

    அங்கு கூடுதலாக மழை பெய்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் திருச்சி கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடைந்து, அணையின் எஞ்சிய பகுதியும் உடைய விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அங்கு புதிய அணை கட்டுவதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளனர். அதற்கான ஆய்வில் நிபுணர்கள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நில அளவீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. #kollidam #kollidambridge #mukkombudam
    தண்ணீரின் வேகம் மற்றும் மழையால் திருச்சி முக்கொம்பு அணை சீரமைப்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. உடைந்த பகுதி மட்டுமல்லாமல் அதோடு கூடுதலாக 220 மீட்டர் தூரம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    அணையில் தென்கரை பகுதியில் முதலாவது மதகில் இருந்து 5-வது மதகு வரை தற்போது மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மணல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் 1 லட்சம் மணல் மூட்டைகளை கொண்டு மதகுகளில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் சீரமைப்பு பணியில் ஈடுபட்டி ருந்த தொழிலாளர்கள் அனைவரும் கரைக்கு திரும்பினர். தொடர்ந்து மழை தூறியபடி இருந்ததால் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உடைமைகளுடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.


    இன்று காலை முதல் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அணையில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக நாட்டு படகு ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஆற்றின் நடுவே நடைபெற்று வரும் பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் மேலும் ஒரு படகும் கொண்டு வரப்பட உள்ளது.

    இதனிடையே புதிய அணை கட்டுவதற்கான பணிகளில் நிபுணர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் அணைப்பகுதிக்கு வரக்கூடிய தண்ணீரை காவிரி ஆற்றில் திருப்பிவிடும் பணி மிதவை பொக்லைன் எந்திரம் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    முக்கொம்பு அணையில் உடைந்த பகுதியை பார்வையிட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 நாட்களுக்குள் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தண்ணீரின் வேகம் மற்றும் மழை ஆகியவற்றால் முக்கொம்பு அணையில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி இரு வாரங்களுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு 29,000 கனஅடி தண்ணீர் வந்தது. இதில் காவிரி ஆற்றில் 13,000 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 16,000 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு 26,000 கனஅடி தண்ணீர் வந்தது. அங்கிருந்து 24,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    முக்கொம்பு அணை உடைந்து விழுந்தது ஏன்? என்று டிடிவி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDinakaran #ADMK #Cauvery #MukkombuDam

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்களுக்கு கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

    கே: அ.தி.மு.க. பற்றி பேசுவதற்கு தகுதியில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளாரே?

    ப: அ.தி.மு.க.வில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர். போட்டி தி.மு.க.வில் இருந்து கொண்டு அம்மாவின் போட்டோவை எரித்தவருக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. யாருக்கு அருகதை உள்ளது என்பதை தேர்தலின் போது மக்கள் நிரூபிப்பார்கள்.

    கே :அ.தி.மு.க.வை பலப்படுத்த தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஓ.பி.எஸ்.கூறியுள்ளாரே?


    ப :மீண்டும் தர்மயுத்தம் நடத்தியது போல ஏதாவது செய்யப்போகிறாரா?, போகாத ஊருக்கு வழி சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.

    கே: முக்கொம்பு அணை உடைப்பு பற்றி முதல்வர் கூறியது பற்றி?

    ப:அணைகளை முறையாக பராமரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வெறும் பெயிண்ட் மட்டும் அடித்து விட்டு அதற்கு உண்டான நிதியை சுவாகா செய்ததால்தான் முக்கொம்பு மேலணை இடிந்து விழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகிய இருவரில் சிறந்த தலைமையை முடிவு செய்ய வேண்டியது தி.மு.க. தொண்டர்கள்தான் என்றார்.

    ×