திருச்சி முக்கொம்பில் 8-ந்தேதி முற்றுகை போராட்டம்: பிஆர் பாண்டியன்

ராணுவம் மூலம் தற்காலிக கதவணை அமைக்க கோரி திருச்சி முக்கொம்பில் 8-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #PRPandian #MukkombuDam
திருச்சி முக்கொம்பில் 8-ந்தேதி முற்றுகை போராட்டம்: பிஆர் பாண்டியன்
Published on

மன்னார்குடி:

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் காவிரி டெல்டாவில் திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை பாசன பகுதிகளுக்கு சென்றடையவில்லை. நாற்று விடுவதற்கு நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கிறது. நேரடி விதைப்பு செய்யப்பட்ட பயிர்கள் கருக தொடங்கி விட்டது.

திருச்சி முக்கொம்பில் உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் கதவணையில் மண்மூட்டை போட்டு தடுத்து காவிரி வழியாக நாங்கள் பாசனத்தை கொண்டு வருவோம் என்று அரசு சொல்வது தவறான நடவடிக்கை. இதனை ஏற்க இயலாது. உடனடியாக ராணுவத்தை கொண்டு தற்காலிக கதவணைகள் அமைக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீரை விடுவிக்க வேண்டும்.

ராசி மணலில் அணையை கட்டி உபரி நீரை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி முக்கொம்பில் விசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #MukkombuDam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com