என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

கொள்ளிடம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை

சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த மகேந்திரபள்ளி ஊராட்சி வெட்டாற்றங்கரையில் காத்தாயி அம்மன்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வழக்கம் போல் பூஜை முடிந்ததும், இரவு பூஜாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவு மர்மநபர்கள் கோவில் மதில் சுவர் வழியாக ஏறிகுதித்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலிலும் மர்ம நபர்கள் புகுந்து நேற்று இரவு உண்டியல் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். இரண்டு கோவில்களிலும் ரூ.50 ஆயிரம் வரை பணம் திருட்டு போய் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரிலும் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
