search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே பிளஸ்-1 மாணவன் மீது தாக்குதல் - 2 மாணவர்கள் மீது வழக்கு
    X

    நெல்லை அருகே பிளஸ்-1 மாணவன் மீது தாக்குதல் - 2 மாணவர்கள் மீது வழக்கு

    • மானூர் அருகே உள்ள பல்லிக்கோட்டையை சேர்ந்த 15 வயது சிறுவன் பிளஸ்-1 படித்து வருகிறான். நேற்று இவன் பள்ளிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தான்.
    • இதைத்தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவனை மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள பல்லிக்கோட்டையை சேர்ந்த 15 வயது சிறுவன் பிளஸ்-1 படித்து வருகிறான். நேற்று இவன் பள்ளிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தான்.

    அப்போது பஸ் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்பாக அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிளஸ்-2 மாணவர், அவரது தம்பி 10-ம் வகுப்பு மாணவர் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து பிளஸ்-1 மாணவனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவனை மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 2 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×