என் மலர்
செய்திகள்

ராஜபாளையத்தில் பிளஸ்-1 மாணவி குறித்து அவதூறு கருத்து- கல்லூரி மாணவர் கைது
மாணவி குறித்து அவதூறு கருத்து பரப்பி கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மதுசூடியான். இவரது மகன் ரேனியல் (வயது19). இவர் நெல்லையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவிக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் ரேனியலின் பழக்க வழக்கம் பிடிக்காததால் அந்த மாணவி பேஸ்புக்கில் இருந்து அவரை நீக்கினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரேனியல் அந்த மாணவி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியும், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் தாய் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ரேனியலை கைது செய்தனர்.
Next Story