காங்கயம் அருகே பிளஸ் -1 மாணவி தற்கொலை

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.சுவேதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே நிழலி எஸ்.வி.புரம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ்குமாா் மகள் சுவேதா (வயது 17). இவா் கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். சுவேதா வயிற்று வலியால் அடிக்கடி அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவரது குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினா் உடனடியாக சுவேதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சுவேதா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இந்த சம்பவம் குறித்து ஊதியூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com