என் மலர்
நீங்கள் தேடியது "திருமணம் நிறுத்தம்"
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
சூலூர்:
கோவை சூலூர் அருகே காசிகவுண்டன்புதூர் பகுதி உள்ளது. வடமாநில பெண் இங்குள்ள தனியார் உணவு நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.
இங்கு ஒடிசாவை சேர்ந்த லம்போதர் மகிந்தா என்பவர் தனது 4 பிள்ளைகளுடன் வேலை செய்கிறார். இவரது 3-வது மகள் மீத்து மகிந்தா(வயது18).
இந்த நிலையில் ஒடிசாவை சேர்ந்த அஜித் (20) என்ற வாலிபருடன் மீத்து மகிந்தாவுக்கு நிச்சயமானது. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் திருமண ஏற்பாடுகள் விறு, விறுப்பாக நடந்து வந்தன.
இந்த நிலையில் மீத்து மகிந்தா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீத்து மகிந்தாவை மீட்டு பார்த்தனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மீத்து மகிந்தாவும், இதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒடிசாவை சேர்ந்த பப்லு(20) என்ப வரும் காதலித்து வந்தனர். கடந்த ஒராண்டுக்கு முன்பு பப்லு தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் தான் மீத்துவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. இதனை ஊருக்கு சென்ற முன்னாள் காதலன் பப்லு அறிந்து கொண்டார். அவர், கடந்த 15-ந் தேதி மீத்துவை திருமணம் செய்ய இருந்த அஜித்தின் செல்போனுக்கு, புதுப்பெண் மீத்துவுடன் தான் இருந்த புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அஜித், தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறி திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால் மீத்துவுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. வீட்டில் இருந்த நீத்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
- முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகள் வீட்டார், உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.
- மணமகன் வீட்டார் சம்பவம் பற்றி ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஹாசன்:
தாலிக்கட்டும் நேரத்தில் காதலனிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பால் திருமணத்தை மணமகள் நிறுத்திவிட்டார். இதனால் மணமகனான அரசு பள்ளி ஆசிரியர், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் அரங்கேறிய இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூரை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர். இவருக்கு பெற்றோர் ஹாசன் அருகே பூவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த முதுகலைப்பட்டம் பெற்ற பெண்ணை திருமணம் பேசி நிச்சயம் செய்திருந்தனர். இவர்களது திருமணம் நேற்று காலை நடத்த திட்டமிட்டு இருந்தது.
இதனால் நேற்று முன்தினம் இரவே மணமகள், மணமகன் வீட்டார் ஹாசனில் உள்ள ஆதிசுஞ்சனகிரி திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டனர். இல்லற வாழ்வில் இணையப்போகும் சந்தோஷத்தில் மணமகன் மகிழ்ச்சியில் திளைத்தப்படி இருந்தார். ஆனால் மணமகளோ அமைதியாக இருந்துள்ளார்.
நேற்று காலை முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகள் வீட்டார், உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர். முதலில் மணமகன் திருமண மேடையில் அமர்ந்தார். அதைத்தொடர்ந்து மணமகள் பட்டுப்புடவை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து மணக்கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதையடுத்து புரோகிதர் மந்திரங்கள் ஓத கெட்டிமேளம் ஒலிக்க மணமகன் தனது கைகளில் தாலியை எடுத்து, மணமகளின் கழுத்தில் தாலிக்கட்ட முயன்றார். இதற்கிடையே முகூர்த்த நேரத்திற்கு சற்று முன் மணமகளுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது.
அந்த செல்போன் அழைப்பை ஏற்று பேசி முடித்தார். உடனே மணமகன் தாலிக்கட்ட நெருங்கியபோது, திடீரென்று மணப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறி அணுகுண்டு வார்த்தையை வீசினார். இதனால் திருமண மண்டபம் களேபரமானது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகன், மணமகளிடம் என்னை திருமணம் செய்ய ஏன் மறுக்கிறாய்? என கேள்வி கேட்டார். அதற்கு அவர், நான் ஒருவரை காதலித்து வருகிறேன். ஆனால் அவரை எனது வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.
எனது காதலன் தான் தற்போது செல்போனில் பேசி திருமணத்தை நிறுத்திவிட்டு வா. நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். நான் காதலனை திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.
இதனால் மணமகன் மேற்கொண்டு பேச முடியாமல் வாயடைத்து போய் நின்றார். இதை கவனித்த மணப்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். உடனே மணமேடையில் இருந்து இறங்கி ஓடிய மணமகள், திருமண மண்டபத்தில் இருந்த மணமகள் அறைக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டார். இதன் காரணமாக மணமகனும் இனி நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.
இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் மணமகன் வீட்டார் சம்பவம் பற்றி ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருவீட்டாரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் மணமகள் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் காதலனை கரம்பிடிக்க போகிறேன். இந்த திருமணத்தை நிறுத்திவிடும்படி கூறினார். இதனால் அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இருப்பினும் மணமகள் திட்டவட்டமாக திருமணம் செய்ய சம்மதிக்காததால், அவரது விருப்பப்படி விடும்படி போலீசார் கூறினர். இந்த முடிவால் மணமகன் வீட்டார் ஏமாற்றம் அடைந்தனர். திருமணத்திற்கு செய்த செலவு தொகையை பெற்றுத்தர அவர்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாலும் திரைப்படங்களில் தான் தாலிகட்டும் நேரத்தில் மணமகளோ அல்லது மணமகனோ திருமணத்தை நிறுத்தும் பரபரப்பு காட்சிகள் வரும். ஆனால் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் ஹாசனில் காதலன் செல்போனில் அழைத்து பேசியதை தொடர்ந்து திருமணத்தை இளம்பெண் நிறுத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பேசுபொருளாகிவிட்டது.
- சின்னசாமிக்கு அவரது பெற்றோர், விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.
- திருமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது.
திருமங்கலம்:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் நாகபிரியா(வயது 30). இவர் பி.சி.ஏ. படித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நாகபிரியாவும், திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னசாமி(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். சின்னசாமி பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக நாகபிரியாவும், சின்னசாமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சின்னசாமி நாகபிரியாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் நாகபிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதற்கிடையே சின்னசாமிக்கு அவரது பெற்றோர், விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு திருமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகபிரியா, தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் சின்னசாமிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த திருமண மண்டபத்திற்கு இன்று காலை வந்தார். சின்னசாமி தன்னை காதலித்து கர்ப்பமாகிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக தெரிவித்தார்.
இதனால் சின்னசாமிக்கு நடைபெற இருந்த திருமணம் நடைபெறாமல் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணமக்கள் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நாகபிரியா மற்றும் சின்னசாமி குடும்பத்தினரிடம் போலீசார் பேசி திருமணத்தை நிறுத்தினர்.
பின்னர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் காஞ்சனா தேவி இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை ஆசிரியை தடுத்து நிறுத்திய சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் மணமகன் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதிய மணமகள் ஆவேசமடைந்து விழாவை நிறுத்தினார்.
- மணப்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணமகளை சமாதானப்படுத்த முயன்றனர்.
பரேலி:
உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் கடந்த 27-ந்தேதி இரவு விவேக் அக்னிகோத்ரி (வயது 26) என்ற வாலிபருக்கும், அப்பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மண்டபத்தில் குவிந்திருந்தனர். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக தொடங்கியது. மணமக்கள் மாலைகளை மாற்றிக்கொண்டனர்.
அப்போது திடீரென மணமகன் விவேக் அக்னிகோத்ரி, மணமகளை முத்தமிட்டார். இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.
விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதிய அவர் ஆவேசமடைந்து விழாவை நிறுத்தினார். இதனால் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணமகளை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால் அந்த பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வளவு பேர் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரின் குணாதிசயங்கள் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறிய மணப்பெண் திருமணத்தை நிறுத்திய கையோடு இதுபற்றி போலீஸ் நிலையத்திற்கு சென்றும் புகார் அளித்தார்.
சம்பவத்தை கேட்டறிந்த போலீசார் மணமகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த பெண் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் போலீசாரிடம் கூறுகையில்,
நாங்கள் மேடையில் இருந்த போது அவர் என்னை தகாதமுறையில் தொட்டார்.
உடனே நான் அதை தடுத்தேன். பின்னர் அவர் எதிர்பாராமல் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்தேன் மற்றும் அவமானப்படுத்தப்பட்டேன். அவர் என் சுயமரியாதையை பற்றி கவலைப்படாமல் பல விருந்தினர்கள் முன்னிலையில் மோசமாக நடந்து கொண்டார்.
எதிர்காலத்தில் அவர் எப்படி நடந்து கொள்வார்? என பயமாக இருக்கிறது. எனவே அவருடன் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் என்றார்.
மணமகளின் தாயார் கூறுகையில், எனது மருமகனின் நண்பர்கள் தூண்டுதலின் பேரிலேயே அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இப்போது என் மகள் அவருடன் செல்ல விரும்பவில்லை.
நாங்கள் சமாதானப்படுத்தியும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே நாங்கள் சில நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
ஆனால் தன்மீதான குற்றச்சாட்டை விவேக் அக்னிகோத்ரி மறுத்துள்ளார். மணமகளுடன் பந்தயம் கட்டியதன் அடிப்படையிலேயே அவருக்கு மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். அனைவரும் முன்னிலையிலும் முத்தமிட்டால் ரூ.1,500 தருவதாகவும், இதை செய்ய முடியாவிட்டால் ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் பந்தயம் கட்டியிருந்ததாக அவர் கூறினார்.
ஆனால் இதுகுறித்து போலீசார் மணப்பெண்ணிடம் விசாரித்த போது அவ்வாறு எந்த பந்தயமும் கட்டவில்லை என கூறினார்.
இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பங்கஜ் லாவணியா கூறுகையில், முறைப்படி தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் தற்போது விவேக் அக்னிகோத்ரியை மணமகள் நிராகரித்துள்ளார். எனவே 2 நாட்களுக்கு பிறகு அடுத்ததாக என்ன செய்வது என்று முடிவு செய்வோம் என்றார்.
- நிச்சயம் செய்யப்பட்ட பெண், சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்பட பாணியில் அரவிந்த்துடன் செல்போனை மாற்றிக்கொண்டுள்ளார்.
- நிர்வாண முறையில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் அரவிந்த் இருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட பெண், சமீபத்தில் வெளியான 'லவ் டுடே' திரைப்பட பாணியில் அரவிந்த்துடன் செல்போனை மாற்றிக்கொண்டுள்ளார்.
அப்போது, நிர்வாண முறையில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் அரவிந்த் இருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் திருமண நிச்சயிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அரவிந்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
- முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மறுநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரம்:
கடலூர் அருகே உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். அவரது மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் அருகே வரகூர் பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி சிதம்பரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் பெண் அழைப்பு விழாவிற்கு மணமகன் வீட்டார் அவர்களின் உறவினர்களுடன் நேற்று வந்தனர். பெண் அழைப்பு முடிந்த நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்தனர். மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திலேயே தங்கினர்.
இன்று காலையில் வெகுநேரமாகியும் அறையை விட்டு மணமகன் வெளியில் வரவில்லை. இதையடுத்து அறைக்குள் சென்று பார்த்த போது மணமகனை காணவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்து வந்தனர். முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மறுநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நீண்ட நேரம் ஆகியும் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை.
- மணப்பெண்ணின் தந்தை மணமகன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை மற்றும் உறவினர்களை திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது.
மணமகனின் வீட்டார் பெண்ணின் வீட்டாரிடம் கட்டில், மெத்தை, பீரோ, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக கேட்டு இருந்தனர்.
அதன்படி மணப்பெண்ணின் வீட்டார் அவர்கள் கேட்டதை விட குறைவான பொருட்களை திருமணத்திற்கு முந்தின நாள் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் அவர்கள் கொண்டு வந்த கட்டில் உள்ளிட்ட பர்னீச்சர்கள் பழைய பொருட்களாக இருந்தது.
மணப்பெண்ணின் உறவினர்கள் மண்டபத்தில் விருந்து சமைத்து தங்களது உறவினர்களுடன் மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்துக் கொண்டு இருந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதையடுத்து மணப்பெண்ணின் தந்தை மணமகன் வீட்டிற்கு சென்று மாப்பிள்ளை மற்றும் உறவினர்களை திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அப்போது மணமகனின் வீட்டார் நாங்கள் கேட்ட சீர்வரிசை பொருட்களை தரவில்லை. மேலும் நீங்கள் கொண்டு வந்துள்ள கட்டில், பீரோ உள்ளிட்ட பர்னீச்சர்கள் ஏற்கனவே பயன்படுத்தியது போல் பழையதாக உள்ளது.
இந்த திருமணத்தில் எங்களது மகனுக்கு விருப்பமில்லை என அநாகரிகமாக பேசி திருப்பி அனுப்பினர்.
அப்போது மணமகளின் தந்தை பர்னீச்சர் பொருட்கள் புதியதாக வாங்கி தருவதாகவும் தற்போது திருமணத்தை நிறுத்த வேண்டாம். இல்லை என்றால் உறவினர்கள் முன்னிலையில் அவமானம் ஆகிவிடும் என பலமுறை கெஞ்சி பார்த்தும் அவர்கள் மனம் இறங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந் மணப்பெண்ணின் தந்தை வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக மணமகன் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என பிடிவாதமாக மணமகள் தெரிவித்தார்.
- மணமகன் வீட்டார் மணமகளிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்கி வரவில்லை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த போச்சாரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அஸ்வரா பேட்டை பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் காலை மணமகன் வீட்டார் பத்ர்த்ரி குடேம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
பழங்குடியின வழக்கப்படி தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மணமகன் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர்.
நேற்று முன்தினம் மாலை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமண மண்டபத்திற்கு வந்தனர்.
திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தனர்.
நேற்று காலை மணமகன் திருமண உடையில் மணமேடைக்கு வந்தார். ஆனால் மணமகள் வீட்டார் யாரும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் மணமகள் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று திருமண மண்டபத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அப்போது மணப்பெண் மண்டபத்திற்கு வர மறுத்தார். கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என பிடிவாதமாக மணமகள் தெரிவித்தார்.
மணமகன் வீட்டார் மணமகளிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்கி வரவில்லை. மணமகளின் முடிவு குறித்து திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் திருமணம் நின்றது. களைகட்டி இருந்த திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளை இது குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து இரு தரப்பினரும் தாங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்துவது என முடிவு செய்தனர்.
பின்னர் மணமகளுக்கு வரதட்சணையாக கொடுத்திருந்த ரூ.2 லட்சத்தை மணமகன் வீட்டார் பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வைஷ்ணவ் பெற்றோர் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசியதால் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
- இளம்பெண்ணிற்கும் வைஷ்ணவுக்கும் இடையே ஹோட்டலில் தகராறு நடந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் வைஷ்ணவ் (வயது 28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவ்க்கு ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்.
சில மாதங்கள் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். இதையடுத்து ஒருவருக்கு ஒருவர் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு மணி கணக்கில் போனில் பேசி வந்தனர்.
வைஷ்ணவ் தங்களது பெற்றோரிடம் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அவரது பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வைஷ்ணவ் பெற்றோர் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசியதால் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வைஷ்ணவ்க்கும் இளம்பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்தது.
அப்போது வைஷ்ணவ் தனது வருங்கால மனைவிக்காக ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பில் வைர மோதிரம், ரூ.10 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள், ஓட்டல் மற்றும் உணவுக்காக ரூ.30 லட்சம் என ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார்.
வைஷ்ணவ் மிகுந்த உற்சாகத்தில் திருமண நாளை நோக்கி எதிர்பார்த்து காத்திருந்தார்.
கடந்த மாதம் பிப்ரவரி 8ஆம் தேதி வைஷ்ணவுக்கு போன் செய்த இளம் பெண் அவசரமாக ரூ.7 லட்சம் தேவைப்படுவதாக கூறினார். தன்னிடம் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் தனது தந்தையிடமிருந்து ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார்.
அப்போது இளம் பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மது அருந்திவிட்டு இளம் பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.
இதனால் இளம்பெண்ணிற்கும் வைஷ்ணவுக்கும் இடையே ஹோட்டலில் தகராறு நடந்தது.அப்போது வைஷ்ணவ் இளம்பெண்ணை தாக்கி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் வீட்டிற்கு வேகமாக சென்றார் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் வைஷ்ணவ் பெற்றோரை அழைத்து உங்கள் குடும்பம் எங்களது அந்தஸ்திற்கு ஏற்றது இல்லை. மேலும் வைஷ்ணவ் தங்களது மகளை தாக்கியதால் திருமணத்திற்கு விருப்பம் இல்லை. என தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவ் மணமகள் வீட்டாரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்.
அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை மேலும் வைஷ்ணவ் தங்களது மகளை குடிபோதையில் தாக்கியதாக வைஷ்ணவி மற்றும் அவரது பெற்றோர் மீது ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விடுமுறை முடிந்து வெளிநாடு சென்ற பின்னர் லெனின் கிராஸ், ரிமோலின் விண்ணரசிக்கு செலவுக்கு பணம் அனுப்பினார்.
- காதலன் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என்று ரிமோலின் விண்ணரசி நம்பிக்கொண்டிருந்தார்.
குளச்சல்:
மணவாளக்குறிச்சியை அடுத்த பிள்ளைதோப்பு பகுதியை சேர்ந்தவர் லெனின் கிராஸ் (வயது 29).
என்ஜினீயரிங் படித்துள்ள லெனின் கிராஸ், வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வருகிறார், அவர் ஒரு வாட்ஸ் அப் குழுவும் நடத்தி வந்தார்.
இந்த குழுவில் நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த ரிமோலின் விண்ணரசி (24) என்ற பெண்ணும் இடம் பெற்றிருந்தார். குழுவில் கருத்துக்களை பதிவு செய்வதன் மூலம் லெனின் கிராசுக்கும், ரிமோலின் விண்ணரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன்பின்பு வெளிநாட்டில் இருந்து லெனின் கிராஸ் ஊருக்கு வந்ததும், அவர் ரிமோலின் விண்ணரசியை நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்றனர்.
அப்போது ரிமோலின் விண்ணரசியை திருமணம் செய்தவதாக கூறி அவருடன் உல்லாசமாக இருந்தார். விடுமுறை முடிந்து வெளிநாடு சென்ற பின்னர், ரிமோலின் விண்ணரசிக்கு அங்கிருந்து செலவுக்கு பணமும் அனுப்பி கொடுத்தார்.
இதனால் காதலன் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என்று ரிமோலின் விண்ணரசி நம்பிக்கொண்டிருந்தார். லெனின் கிராஸ் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் என்ற தகவல், அவரது பெற்றோருக்கு தெரியாது.
இதனால் அவர்கள் லெனின் கிராசுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். இந்த தகவல் லெனின் கிராசுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கடந்த வாரம் இவர்களின் திருமணம் ஆலயத்தில் நடக்க இருந்தது. இதற்காக லெனின் கிராஸ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது திருமண அழைப்பிதழை கொடுத்தார். அவர்கள் மூலம் இந்த தகவல் பணக்குடியில் இருந்த ரிமோலின் விண்ணரசிக்கு தெரியவந்தது.
பதறிபோன அவர் அங்கிருந்து காதலனின் திருமணம் நடக்க இருந்த ஆலயத்திற்கு விரைந்து வந்தார். திருமண சடங்குகள் தொடங்கும் முன்பு ஆலய பாதிரியாரை சந்தித்து தானும், லெனின் கிராசும் காதலிக்கும் விபரத்தை தெரிவித்தார்.
லெனின் கிராஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றதையும், அங்கு இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களையும் காட்டினார். இதனை பார்த்ததும், ஆலய பாதிரியார், லெனின் கிராசுக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்.
இதையடுத்து ரிமோலின் விண்ணரசி குளச்சல் போலீஸ் நிலையம் சென்று அங்கும் புகார் கொடுத்தார். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தனர்.
இதற்கிடையே லெனின் கிராஸ், காதலி ரிமோலின் விண்ணரசியை அருகில் அழைத்து அவரது செல்போனை வாங்கி கொண்டார். பின்னர் அதில் அவர்கள் இருவரும் இணைந்த எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் அழித்து விட்டார்.
அதன்பின்பு அந்த செல்போனை ரிமோலின் விண்ணரசியிடம் கொடுத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் நின்று கொண்டார்.
அதன்பின்பு போலீசார், ரிமோலின் விண்ணரசியிடம் இருவரும் சேர்ந்திருக்கும் படங்களை காட்டுமாறு கூறியபோதுதான், அதில் இருந்த படங்கள் அழிக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.
உடனே இடிந்து போகாமல் அவர் போட்டோ ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் அழிக்கப்பட்ட படங்களை மீண்டும் மீட்டெடுத்தார். அதனை போலீசாரிடம் காட்டியபோது, லெனின் கிராஸ் அதிர்ந்து போனார். உடனே அவர் ரிமோலின் விண்ணரசியை காதலித்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அதன்பின்பு அவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஆலயம் முன்பிருந்த குருசடியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். காதலித்து ஏமாற்றிய காதலனை போராடி கரம் பிடித்த ரிமோலின் விண்ணரசியின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.
- போலீசார் விரைந்து சென்ற , திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம் விசாரித்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுவேதா (வயது 21), பி.காம். பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.
இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்தனர்.
அதன்படி சுவேதாவுக்கும், வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா மகன் எம்.பி.ஏ. பட்டதாரி லோகநாதன் (27) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் பேசி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இருவருடைய திருமணம் நேற்று காலை நடைபெறவிருந்த நிலையில், காதலன் கவியரசனுக்கு சுவேதா செல்போனில் தொடர்பு கொண்டு, எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.
உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.
இதனால் காவல் துறையின் உதவி எண் 100-க்கு கவியரசன் தொடர்பு கொண்டு, தனது காதலிக்கு சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க உள்ளனர். எனவே உடனடியாக தடுத்து நிறுத்தி என்னையும், காதலியையும் சேர்த்து வையுங்கள் என தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து காவல் துறை கட்டுப்பாடு அறை மூலமாக வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம், விசாரித்தனர். இதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாழப்பாடி மகளிர் போலீசார், சுவேதாவை மீட்டு காதலன் கவியரசனுடன் சேர்த்து வைத்தனர். மேலும் பாதுகாப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதே சமயம் பாதிக்கப்பட்ட மணமகன் தரப்பினர், திருமணம் நிறுத்தப்பட்டதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். திருமணத்துக்கு நிறைய செலவு செய்துள்ளோம், என புகார் கொடுத்தனர். இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயித்தனர்.
- திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.
பல்லடம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் தரணிதரன்(வயது 29). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
அப்போது அங்கு பணிபுரிந்த இளம்பெண்ணுக்கும் தரணிதரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்தநிலையில் பழகிய சில நாட்களில் தரணிதரனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் தரணிதரனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.
மேலும் அந்த பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயித்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.
இதையறிந்த தரணிதரன், தனது காதலியை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இல்லாவிட்டால் 2பேரும் சேர்ந்து இருந்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டியதுடன், அந்த புகைப்படங்களை காதலிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டது.
மேலும் காதலியை தொடர்பு கொண்ட தரணிதரன் ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் இருவரும் சேர்ந்திருந்த படங்களை இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்தப்பெண் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
உடனே இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தரணிதரனை கைது செய்தனர். தொடர்ந்து அவர் இது போல் வேறு பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






