என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலாற்று பாலத்தில் இருந்து இளம் பெண் குதித்து தற்கொலையா?
- போலீசார் தீவிர விசாரணை
- இரவில் பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக பொதுமக்கள் தகவல்
வேலூர்:
வேலூர் பாலாற்றில் தற்போது ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் காட்பாடியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் வரக்கூடிய பழைய பாலாற்றின் பாலத்தின் மேலிருந்து நேற்று இரவு பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக விருதம்ட்டு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் உடனடியாக விரைந்து சென்று பாலத்தின் மேலிருந்து பார்வையிட்டனர். மேலும் ஆற்றின் தண்ணீரில் பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இருள் சூழ்ந்து காணப்பட்டது. அங்கு எதுவும் தெரியவில்லை.
ஆற்றில் குதித்த பெண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாரா? அவரது கதி என்ன அல்லது வேண்டுமென்று யாராவது போலீசாரை அலைக்கழித்தார்களா என்பது தெரியவில்லை.
இன்று காலையில் மீண்டும் போலீசார் பாலாற்று பகுதியில் பார்வையிட்டனர். மேலும் விருதம்பட்டு பகுதியிலிருந்து பெண் யாராவது காணாமல் போனார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுவரை எந்த ஒரு பெண்ணும் காணாமல் போனதாக தகவல் வரவில்லை. ஆற்றில் பெண் உண்மையிலேயே குதித்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்