search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்"

    • வேலை காரணமாக சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மணல்மேடு மகாராஜபு ரத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (வயது 27).

    இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில், இவர் கடந்த 11-ந்தேதி தீபாவளி பண்டி கைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்துள்ளார்.

    பின்னர், அவர் கடந்த 13-ந்தேதி வேலை காரணமாக சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    ஆனால் வீடு திரும்பவில்லை.

    இதைதொடர்ந்து, அசோக் ராஜின் பாட்டி பத்மினி சோழபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்ராஜை தேடி வந்தனர்.

    பின்னர் நடத்திய விசாரணையில் அசோக்ராஜ் கடைசியாக சோழபுரம் மணல்மேடு கீழத்தெருவை சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தி (47) என்பவர் வீட்டுக்கு சென்றது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து, கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர், கடந்த 13-ந் தேதி இரவு அசோக்ராஜ் தன்னை வீட்டில் வந்து பார்த்ததாகவும், தனக்கு ஆண்மை குறைவு உள்ளதால் வாழ பிடிக்கவில்லை எனக்கூறி அழுததாகவும் தெரிவித்தார்.

    இதனால் தஞ்சையில் உள்ள தனக்கு தெரிந்த டாக்டரை அணுகுமாறு அவரிடம்கூறி அனுப்பி வைத்ததாக போலீசாரிடம் கூறினார்.

    கடந்த 16-ந் தேதி அசோக்ராஜ் வீட்டிற்கு அவர் எழுதியதாக ஒரு கடிதம் வந்துள்ளது.

    அந்த கடிதத்தில், தனக்கு ஆண்மை குறைவு இருப்பதாகவும், இதனால் இந்த உலகத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.

    ஆனால் அந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து அசோக் ராஜின் கையழுத்து இல்லை என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும் அந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறினர்.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் போலீசாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று நான், அசோக் ராஜிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, அவருக்கு ஆண்மை வீரியத்திற்காக சித்த மருந்தை கொடுத்தேன்.

    அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்து அசோக்ராஜின் தலையை துண்டித்தேன். பின்னர் உடல் மற்றும் தலையை எரித்து தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்தேன் என்றார்.

    இதையடுத்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் போலீசார் நேற்று கேசவமூர்த்தியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு அவர் அசோக்ராஜை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்.

    இதை தொடர்ந்து கோட்டாட்சியர் பூர்ணிமா முன்னிலையில் அசோக்ராஜ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

    உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

    கேசவமூர்த்தியை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மணிமாறன் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் அவர் மீது மோதியது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யத்தை அடுத்த கொள்ளுதீவை சேர்ந்தவர் பாலு மகன் மணிமாறன் (வயது 21). மாற்றுத்திறனாளி.

    இவர் அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் மணிமாறன் மீது மோதியது.

    இதில் மணிமாறன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் வள்ளல் ஆனந்தபுரம் ஜே.ஜே. நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மாலினி (வயது 24). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் குடும்பப் பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசில் மாலினியின் தந்தை கருப்பையா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மிளகரணை நாகம்மாள் தெரு வடக்கு தெருவை சேர்ந்தவர் மணி (50). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கை அகதிகள் முகாமில் பீர் பாட்டிலால் குத்தி வாலிபர் உயிரிழந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜனின் மனைவி வனிதா கணவரிடம்  கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  இதனால் மனமுடைந்த ராஜன் கடந்த 1-ந் தேதி அதிக அளவில் மது அருந்திவிட்டு மது பாட்டிலை உடைத்து  கழுத்தில் குத்தி உள்ளார். 

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த  ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றிய சேலம் வாலிபர் மீது தாக்குதல் பெற்றோர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
    குமாரபாளையம்:

    சேலம் தாதகாபட்டி சண்முகா நகரை  சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 29). இவருக்கும், கனகா என்பவருக்கும் திருமணமாகி, கனகா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் சிரஞ்சீவி  குமாரபாளையத்தை சேர்ந்த வினோதா (19) என்ற  பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது சிரஞ்சீவியின் தாயார் மற்றும் சித்திக்கு தெரியும் என கூறப்படுகிறது.

    கடந்த 27-ந்தேதி சிரஞ்சீவி தனது  கள்ளக்காதலி வினோதாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை, பாண்டிச்சேரி, நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் சுற்றி வந்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த  வினோதாவின் உறவினர்கள் அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம்  நம்பியூர் என்ற இடத்தில்  இருவரும் தங்கியிருந்தபோது, வினோதாவின் பெற்றோர், அண்ணன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் அங்கு சென்று 2 பேரையும்  குமாரபாளையத்துக்கு அழைத்து வந்தனர். 

    அப்போது வழியில்  சேலம்-கோவை புறவழிச்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரியில் டீ குடித்து விட்டு வினோதாவின் உறவினர்கள், சிரஞ்சீவியிடம் ஏற்கனவே உனக்கு திருமணம் ஆகி விட்டது. அப்படி இருக்கையில் எதற்கு வினோதாவை காதல் வலையில் மயக்கி அவருடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறாய்? என கேள்வி கேட்டு  சரமாரியாக தாக்கினர். 

    இதனால் உயிருக்கு  பயந்து சிரஞ்சீவி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது  புறவழிச்சாலையில் வாகனம் வருவதை கவனிக்காமல்  சாலையை  கடந்தபோது  அவர் மீது  வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சிரஞ்சீவி படுகாயம் அடைந்தார்.   ஈரோடு  அரசு ஆஸ்பத்திரியில்  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார், பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலத்தில் வாலிபர் திடீர் மாயமானார்.
    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி என்.மேட்டுத்தெரு   தடிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் கோபிசங்கர்(வயது30). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந்தேதி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 

    அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி கோபிசங்கரின் தந்தை சிவகுமார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து கோபிசங்கர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகிறார்கள். 

    கோபிசங்கர் காணாமல் போன அன்று சந்தன கலர் கோடு போட்ட அரை கை சட்டையும், புளூ கலர் டிராயரும் அணிந்திருந்தார். அவரது இடது கண் பார்வை இல்லை. வலபுறமாக சாய்ந்து நடக்கும் பழக்கம் கொண்டவர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பஸ்சை நிறுத்தி ரகளை செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆர்.எஸ்.மங்கலம்

    முதுகுளத்தூரில் இருந்து ஒரு அரசு பஸ் ராமநாதபுரம், தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சிதம்பரம் சென்றது. அந்த பஸ் அ.மணக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது குடி போதையில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ரோட்டின் குறுக்கே நின்று பஸ் டிரைவரிடம் ரகளையில் ஈடுபட்டார்.

    அதனை தட்டிக்கேட்ட பஸ் டிரைவர் ஜான்போஸ்கோ (வயது 40) என்பவரை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அ.மணக்குடியைச் சேர்ந்த கிராமத்தினர் பஸ் நிறுத்தம் அருகே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பஸ் டிரைவர் ஜான் போஸ்கோ கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறார். 

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலையில் நடந்தது. 

    அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த  தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
    திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலையில் நடந்தது. 

    அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த  தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
    லாரி மோதி வாலிபர் பலியானார்.
    மதுரை

    மதுரை பொன்மேனி நேரு நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 21). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் சம்மட்டிபுரம்- காளவாசல் பைபாஸ் சந்திப்பு பகுதியில் சென்ற போது பின்புறமாக வந்த லாரி மோதியது. 

    இதில் ஆரோக்கியராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் தலையில் ஏறியது. இதில் படுகாயமடைந்த ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான வாலிபர்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு   மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து  லாரி டிரைவர் பிரபு என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாரமங்கலம் அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியானார்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே கடந்த 26-ந்தேதி இரவு 2 மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்திரசேகரன் (40) என்பவர் பலியானார். 

    இந்த விபத்தில்  மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன்  மகன் சிவா (வயது21) என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×