என் மலர்

    நீங்கள் தேடியது "cheating"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திரும்பி வந்த கணவர் வாழ அழைத்த போது தாக்குதல் நடத்தினர்.
    • இளம்பெண்ணின் கணவர் 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு இளம்பெண்ணின் கணவர் அவருக்கு திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்தார். இது குறித்து மாணவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    தனியாக குழந்தைகளுடன் வசித்த இளம்பெண்ணுக்கு அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வரும் 27 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் ஜெயிலில் இருந்ததால் இளம்பெண் வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கணவர், தனது மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். கள்ளக்காதலனும் அவரை அனுப்பி வைக்கவில்லை.

    சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த இளம்பெண்ணின் கணவர் அவரது மனைவியின் கள்ளக்காதலன் நடத்தி வரும் செல்போன் கடைக்கு சென்றார். அங்கு இருந்த வாலிபரிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார்சைக்கிள் சாவியை எடுத்து இளம்பெண்ணின் கணவரின் வலது கை, தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்போன் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீசியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.
    • போலீசார் மாயமான ரஷீதாவின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின் ஐ.டி.யில் இருந்து குறும் தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து மூர்த்தி அந்த பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார்.

    பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலித்தனர். பின்பு கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் மூர்த்தி தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீசியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

    3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5-ந்தேதி காலையில் இருந்து அவரை காணவில்லை. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

    அதன்பேரில், போலீசார் மாயமான ரஷீதாவின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர். அதில், ரஷீதா பற்றி திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு வசதியான ஆண்களை வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    பல ஆண்களுடன் ஆபாச சாட்டிங் செய்து அவர்களை மயக்கி உள்ளார். சொகுசு கார், மோட்டார்சைக்கிளில் பியூட்டியாக போஸ் கொடுத்து அவரை வலையில் வீழ்த்தியிருக்கிறார். மூர்த்தியும், அவரது அழகில் விழுந்தே காதல் திருமணத்தை உறவினர்கள் இல்லாமல், தனியாக நடத்தியிருக்கிறார்.

    ரஷீதாவுடன் பழகியதும் மூர்த்தி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மேலும் பணத்தை அவருக்கு வாரி வழங்கி உள்ளார். பணத்தை சுருட்டிக் கொண்டு ரஷீதா ஓட்டம் பிடித்து விட்டார்.

    இதற்கிடையே கடந்த மாதம் 20-ந்தேதி கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில், 33 வயது இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில், எது கணவர் சத்ய கணேஷ், ரஷீதாவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்கிறார் என கூறியுள்ளார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தொளசம்பட்டி போலீசாருக்கு தெரியவந்தது.

    பைனான்சியர் மூர்த்தியை ஏமாற்றி திருமணம் செய்து, நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த ரஷீதா, இதுவரை 8 திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    மூர்த்தியின் வீட்டில் இருந்து மாயமான ரஷீதாவின் போன் சுவிட்ச்-ஆப் ஆகியுள்ளது. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் ? என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்யாண மன்னன்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக கல்யாண ராணிகளின் அட்ட காசம் அதிகரித்து வருகிறது. 8 கல்யா ணம் செய்துநகை, பணத்துடன் இன்ஸ்டா கிராம் அழகி தலைமறைவாகி உள்ளார்.

    இதுகுறித்து தொளசம்பட்டி போலீசாரிடம் கேட்டபோது, புகார் கொடுத்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அவரது அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை விசாரித்தபோது அது போன்று எந்த ஒரு பெண்ணும் வந்து இங்கு தங்கவில்லை என கூறியுள்ளனர். முழுமையாக விசாரித்து தான் வழக்கு பதிவு செய்வோம். புகார் கொடுத்ததற்கான ரசீது மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை எப்.ஐ. ஆர். பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்ற பெண் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளி ப்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் உள்பட 6 ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமிருந்து பணம், நகை என அனைத்தையும் திருடிஏமாற்றினார் குறிப்பிடத்தக்கது.

    அப்பாவி பெண்களை ஏமாற்றி ஆண்கள் திருமணம் செய்து மோசடி செய்த காலம் போய் ரஷிதா போன்ற கல்யாண ராணிகள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி மோசடியில் இறங்கியிருப்பது பெற்றோர்களுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்க தொடங்கி உள்ளது. கல்யாணம் செய்பெது கொடுக்கும்வரை பெண்ணை பெற்ற பெற்றோர் மட்டுமல்ல ஆண்பி ள்ளைகளை பெற்றவர்களும் அலாட் ஆக இருக்கணும்போல....

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதியமான்கோட்டை போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் மீட்டனர்.
    • விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் ஜோதியை போலீசார் கைது செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே வள்ளுவர் நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அந்த 2 பெண்களும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் தண்டுகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஜோதி (வயது40), நடராஜன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அதியமான்கோட்டை போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் மீட்டனர். அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் ஜோதியை கைது செய்தனர். நடராஜன் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தினேஷ் குமார் திடீரென தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
    • ஏமாற்றம் அடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

    போரூர்:

    சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் 'சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்' என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் தினேஷ்குமார்.

    இவர் பிரபல நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்தார். இதை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் பெண்கள் பலர் சான்றிதழ்களுடன் அலுவலகத்தில் வேலை கேட்டு குவிந்தனர்.

    அப்போது அவர்களிடம் முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலித்ததாக தெரிகிறது. அப்போது வேலை உறுதி ஆகிவிட்டது என்று ஆசை வார்த்தை கூறிய தினேஷ்குமார் ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரை வசூல் செய்ததாக தெரிகிறது.

    ஆனால் அவர் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணம் கட்டியவர்கள் வேலை குறித்து கேட்டபோது தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இதற்கிடையே தினேஷ் குமார் திடீரென தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏமாற்றம் அடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் நடத்திய விசாரணையில் தினேஷ் குமார் கோடம்பாக்கம் பகுதியில் மட்டும் 3 இடங்களில் அலுவலகம் நடத்தி வேலை தேடும் பட்டதாரிகளை குறி வைத்து நூதன முறையில் ரூ.17 லட்சம் வரை சுருட்டி தப்பியது தெரிந்தது. அதற்கு உடந்தையாக பெண் ஊழியர் ஈஸ்வரி என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

    இந்த நிலையில் தினேஷ்குமார் அரும்பாக்கம் பகுதியில் வேறு ஒரு பெயரில் அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விரைந்து சென்ற போலீசார் தினேஷ்குமார் மற்றும் ஈஸ்வரியை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட தினேஷ்குமார் திருமுல்லைவாயில் பகுதியில் புதிதாக சொகுசு வீடு கட்டி, கார் வாங்கி ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். ஏற்கனவே இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு உள்ளது.

    அவர் இதேபோல் மதுரவாயல், ஒரகடம், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் அலுவலகம் நடத்தி பல லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்து உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்கிரீன் ஷாட் அனுப்பிய சிறிது நேரத்திலேயே சேகர் வங்கி கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம், 63 ஆயிரத்து 900, 80 ஆயிரம், 90 ஆயிரம் என எடுக்கப்பட்டதாக சேகர் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வந்தது.
    • திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த வாரம் இவரது செல்போனிற்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில் உங்களுடைய கூகுள் பே அக்கவுண்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் உங்கள் எண்ணிற்கு கமிஷன் தருவதாக கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சேகர் தனது கூகுள் பே அக்கவுண்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மெசேஜ் வந்த எண்ணிற்கு அனுப்பினார். அதைத்தொடர்ந்து சேகர் கூகுள்பே எண்ணிற்கு ரூ.150 வந்தது.

    இதேபோல் சேகர் எண்ணிற்கு 3 எண்களில் இருந்து மெசேஜ் வந்தது. மெசேஜ் வந்த 3 எண்ணிற்கும் கூகுள் பே ஸ்கிரீன் ஷாட் அனுப்பினார்.

    ஸ்கிரீன் ஷாட் அனுப்பிய சிறிது நேரத்திலேயே சேகர் வங்கி கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம், 63 ஆயிரத்து 900, 80 ஆயிரம், 90 ஆயிரம் என எடுக்கப்பட்டதாக சேகர் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வந்தது. இதனைக் கண்டு அதிர்ந்து போன சேகர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். சேகர் எண்ணிற்கு மெசேஜ் வந்த செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது மதுரையை சேர்ந்தவர்கள் சேகர் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் மதுரைக்கு சென்று பண மோசடியில் ஈடுபட்ட மதுரை வாலிபர்கள் 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2. 63 லட்சத்தை பறிமுதல் செய்து சேகரிடம் ஒப்படைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை மாவட்டத்திலும் ஒரு வாலிபர் லோன் ஆசையில் ரூ.40 ஆயிரத்தை இழந்துள்ளார்.
    • அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.40 ஆயிரம் அனுப்பி உள்ளார்.

    நெல்லை:

    சமீபகாலமாக ஆன்ட்ராய்டு செல்போன்களில் உள்ள சில செயலிகள் (ஆப்) மூலம் கடன் வழங்குவதாக ஆசை காட்டி மோசடி நடைபெறும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி

    அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் ஒரு வாலிபர் லோன் ஆசையில் ரூ.40 ஆயிரத்தை இழந்துள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு:-

    வள்ளியூர் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கு அவரது செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

    ரூ.40 ஆயிரம் முன்பணம்

    அதை 'கிளிக்' செய்ததும் ஒரு செயலிக்கு சென்றது. அதில் உங்களுக்கு ரூ.1 லட்சம் லோன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ.40 ஆயிரம் முன் பணம் அனுப்பவும் என தகவல் காட்டியது. இதை நம்பிய அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.40 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் அவருக்கு லோன் தொகை எதுவும் வரவில்லை.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

    சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    இதுதொடர்பாக அந்த வாலிபர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் இச்சம்பவத்தில் வடமாநில வாலிபர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. மோசடி செய்த வங்கி கணக்கை முடக்கி உள்ளதாகவும், விரைவில் அந்த கணக்கில் இருந்து பணத்தை மீட்டு மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெட்ரோல் பங்க் வைப்பதற்காக இடம் தேவைப்படுவதாக சில புரோக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.
    • பின்னர் அந்த இடத்தை முடித்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    பாளை பெருமாள் புரத்தை சேர்ந்தவர் பெர்க்மான்ஸ் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக இடம் தேவைப்படுவதாக சில புரோக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவருக்கு மேலப்பாளையத்தை சேர்ந்த பரித் புகாரி (52), தாழையூத்தை சேர்ந்த துரை (48) ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

    இவர்கள் 2 பேரும் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை மற்றும் ஒரு கல்லூரி உள்ளிட்ட பகுதியை ஒட்டி அமைந்துள்ள சில இடங்களை தங்களுக்கு சொந்தமான இடம் என்று காட்டி முன் தவணை தொகையாக ரூ.1½ கோடி பெற்றுள்ளனர்.

    பின்னர் அந்த இடத்தை முடித்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த பெர்க்மான்ஸ் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் காட்டிய இடம் அவர்கள் 2 பேருக்கும் சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பண மோசடியில் ஈடுபட்ட புகாரி மற்றும் துரை ஆகியோரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த சிறுவன்-வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றதாகவும் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அக்பர்கான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.முகைதீன், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதாதேவி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் நகர் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அழகர்கோவிலுக்கு செல்லும் வழியில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் அதில் வந்த வாலிபர் மற்றும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி, வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் கொடைக்கா னலுக்கு சுற்றுலா சென்ற தாகவும் தெரிவித்தார்.

    விசாரணையில் அந்த வாலிபரும், சிறுமியும் கேரள மாநிலம் கண்ணூர் சென்று அங்குள்ள ஒரு ேகாவிலில் திருமணம் செய்துள்ளனர் என்பதும், அதன் பிறகு இருவரும் சிறுமியின் தோழி வீட்டில் தங்க முயன்றபோது அவர்கள் அனுமதிக்காததால் அழகர்கோவில் வந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட வாலிபர் மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர். இவரும் 17 வயது சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறுவனிடமிருந்து இருந்து சிறுமியை மீட்ட முத்துப்பட்டி அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, வலுக்கட்டாயமாக திருமணம் செய்தது உள்பட பல்வேறு பிரிவுகளில் சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதேபோல் தனிப்படை போலீசார் கள்ளந்திரி பகுதியில் சோதனை செய்தபோது அந்த வழியாக ஜோடியாக வந்த ஒரு வாலிபரையும், சிறுமியையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

    விசாரணையில் அந்த வாலிபர் செல்லூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் யுவராஜ் (வயது 19) என்பதும், அவருடன் வந்தவர் 16 வயது சிறுமி என்பதும் தெரியவந்தது. சிறுமியை போலீசார் மீட்டனர்.

    போலீசார் நடத்திய விசாரணையின்போது அந்த சிறுமி கூறியதாவது:-

    நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தந்தை இறந்துவிட்டதால் தாய் மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நான் யுவராஜை காதலித்தேன். எங்களின் காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் நண்பர்களுடன் கொடைக்கானல் செல்ல திட்டமிட்டிருந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய யுவராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி முத்துப்பட்டி அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இணையதளத்தில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதனை வாங்குவதற்கு தங்களிடம் அணுகலாம் எனவும் வந்த விளம்பரத்தை பார்த்தார்.
    • கடந்த வாரம் செல்பேனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் செல்வநாயகம் (வயது 74). இவர் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி முதல்வர் ஆவார்.

    இவர் இணையதளத்தில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதனை வாங்குவதற்கு தங்களிடம் அணுகலாம் எனவும் வந்த விளம்பரத்தை பார்த்தார்.

    பின்னர் அதில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, நவீன காரை வாங்குவதற்கு முதலில் பணம் கட்ட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    அதன்பேரில் 7 தவணையாக ரூ.13 லட்சத்தை செல்வநாயகம் அனுப்பி உள்ளார். எனினும் அந்த நபர் காரை வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும், பதில் இல்லை.

    கடந்த வாரம் செல்பேனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வ நாயகம் நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றிய சேலம் வாலிபர் மீது தாக்குதல் பெற்றோர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
    குமாரபாளையம்:

    சேலம் தாதகாபட்டி சண்முகா நகரை  சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 29). இவருக்கும், கனகா என்பவருக்கும் திருமணமாகி, கனகா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் சிரஞ்சீவி  குமாரபாளையத்தை சேர்ந்த வினோதா (19) என்ற  பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது சிரஞ்சீவியின் தாயார் மற்றும் சித்திக்கு தெரியும் என கூறப்படுகிறது.

    கடந்த 27-ந்தேதி சிரஞ்சீவி தனது  கள்ளக்காதலி வினோதாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை, பாண்டிச்சேரி, நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் சுற்றி வந்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த  வினோதாவின் உறவினர்கள் அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம்  நம்பியூர் என்ற இடத்தில்  இருவரும் தங்கியிருந்தபோது, வினோதாவின் பெற்றோர், அண்ணன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் அங்கு சென்று 2 பேரையும்  குமாரபாளையத்துக்கு அழைத்து வந்தனர். 

    அப்போது வழியில்  சேலம்-கோவை புறவழிச்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரியில் டீ குடித்து விட்டு வினோதாவின் உறவினர்கள், சிரஞ்சீவியிடம் ஏற்கனவே உனக்கு திருமணம் ஆகி விட்டது. அப்படி இருக்கையில் எதற்கு வினோதாவை காதல் வலையில் மயக்கி அவருடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறாய்? என கேள்வி கேட்டு  சரமாரியாக தாக்கினர். 

    இதனால் உயிருக்கு  பயந்து சிரஞ்சீவி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது  புறவழிச்சாலையில் வாகனம் வருவதை கவனிக்காமல்  சாலையை  கடந்தபோது  அவர் மீது  வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சிரஞ்சீவி படுகாயம் அடைந்தார்.   ஈரோடு  அரசு ஆஸ்பத்திரியில்  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார், பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • Whatsapp
    • Telegram
    • </