search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாங்கி தருவதாக கூறி 2 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது
    X

    வேலை வாங்கி தருவதாக கூறி 2 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது

    • அதியமான்கோட்டை போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் மீட்டனர்.
    • விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் ஜோதியை போலீசார் கைது செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே வள்ளுவர் நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அந்த 2 பெண்களும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் தண்டுகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஜோதி (வயது40), நடராஜன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அதியமான்கோட்டை போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் மீட்டனர். அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் ஜோதியை கைது செய்தனர். நடராஜன் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×