என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து திருமணத்துக்கு மறுப்பு: யூடியூப்பர் கைது
- சந்தேகம் அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தமிழழகனிடம் கேட்டுள்ளார்.
- யூடியூப்பர் 2 வருடங்களாக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கைவண்டுர் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் 'தமிழ் உங்களில் ஒருவன்' என்ற யூடியூப் சேனலை அடிக்கடி பார்ப்பது வழக்கம். இதையடுத்து அந்த யூடியூப் சேனலைஅதை நடத்தி வரும் தமிழழகன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 வருடங்களாக தமிழழகனும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். தமிழழகன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை விடுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து விட்டதாகவும் தங்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் சற்று விலகி இருக்குமாறும், பிரச்சனை முடிந்தவுடன் வீட்டில் பேசி உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி அந்த இளம்பெண்ணை சமாதானப்படுத்தி உள்ளார்.
ஒரு கட்டத்தில் தமிழழகன் சொல்வது பொய் என தெரிந்த அந்த பெண் தமிழழகனிடம் கேட்டபோது அவரை அழைத்து சென்று மீண்டும் உல்லாசமாக இருந்து விட்டு இனி தான் சொல்லும் வரை என்னை வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தமிழழகனிடம் கேட்டுள்ளார். ஆனால் திருமணத்துக்கு தமிழழகன் மறுத்து உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவள்ளூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முகப்பேர் பகுதியை சேர்ந்த யூடியூப்பர் தமிழழகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தமிழழகன் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து யூடியூப்பர் தமிழழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யூடியூப்பில் பெண்ணுரிமை, பெண்களின் நன்மை, பெண்களை அழ வைக்கக் கூடாது, பெண் பாவம் பொல்லாதது என்பது போன்ற வீடியோக்களை பதிவு செய்து வந்த யூடியூப்பர், 2 வருடங்களாக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மேலும் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்