என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண்ணை"
- பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது.
- கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக மாநகராட்சியின் குப்பை லாரியை நிறுத்துவது வழக்கம். அதேபோல சம்பவத்தன்று இரவும் குப்பை லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சென்று விட்டார். அதிகாலையில் ஒரு நபர் குப்பையை போடுவதற்காக அங்கு வந்தார். அப்போது குப்பை லாரியின் பின்புற பகுதியில் ஒரு சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் தலை தெரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி உடனடியாக அவர் சி.கே.அச்சுக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து குப்பை லாரியில் கிடந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது, ஒரு பெண்ணை கொன்று, அவரது கை, கால் கட்டப்பட்டு, உடல் சாக்கு மூட்டைக்குள் திணித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் பற்றி தெரிய வந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. இதனால் அந்த பெண் கழுத்தை நெரித்தோ அல்லது மூச்சை திணறடித்தோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான டி-சர்ட், பேண்ட் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில் இருந்த நிறுவனத்தின் பெயர் மூலமாக போலீசார் விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பெண் உளிமாவு அருகே வசித்து வந்த புஷ்பா என்ற ஆஷா என்பது தெரியவந்தது. மேலும் அவர் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட இளம்பெண் புஷ்பா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவரை வேறு இடத்தில் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் திணித்து குப்பை லாரியில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.
எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட புஷ்பாவின் கணவரிடமும் விசாரணை நடத்த போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காளீஸ்வரன் தனது மனைவி மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார்.
- இதில் மைவிழிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
மொடக்குறிச்சி:
ஈரோடு வெண்டிபாளையம் அடுத்த காந்திபுரம் பாபு தோட்டத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன் (26). டிரைவர். இவரது மனைவி மைவிழி (22). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்டதால் 2 வீட்டு பெற்றோர்களிடமும் எதிர்ப்பு இருந்து வந்தது.இந்த நிலையில் காளீஸ்வரனுக்கும், அவரது மனைவி மைவிழிக்கும் கருத்து வேறுபாடுகாரணமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து கடந்த 2மாதங்களுக்கு முன்பு மைவிழி கணவரை விட்டு பிரிந்து சென்று ஈரோடுஅக்ரகாரம் பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்று விட்டார்.
மேலும் அவரது கணவர் காளீஸ்வரன் குழந்தையை பார்க்க வரக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனால் மைவிழி கணவர்வீட்டிற்கு வராமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இவர்களது குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் மைவிழி இரவு 9 மணியளவில் தனது குழந்தையை பார்க்க தனது கணவர் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டில் இருந்த காளீஸ்வரன் தனது மனைவி மைவிழியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.
மேலும் நீ உயிரோடு இருந்தால் தான் எனக்கு பிரச்சினை, உன்னைகொன்றால் தான் நானும்எனது மகளும் நன்றாகஇருக்க முடியும்என்று கூறி மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார்.
இதில் மைவிழிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
இதனைப்பார்த்த உறவினர்கள் மைவிழியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இது குறித்து மைவிழி மொடக்குறிச்சி போலீசில் புகார்செய்தார். போலீசார் காளீஸ்வரன்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம்அந்த பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






