search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சி
    X

    இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சி

    • காளீஸ்வரன் தனது மனைவி மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார்.
    • இதில் மைவிழிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு வெண்டிபாளையம் அடுத்த காந்திபுரம் பாபு தோட்டத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன் (26). டிரைவர். இவரது மனைவி மைவிழி (22). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    காதல் திருமணம் செய்து கொண்டதால் 2 வீட்டு பெற்றோர்களிடமும் எதிர்ப்பு இருந்து வந்தது.இந்த நிலையில் காளீஸ்வரனுக்கும், அவரது மனைவி மைவிழிக்கும் கருத்து வேறுபாடுகாரணமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து கடந்த 2மாதங்களுக்கு முன்பு மைவிழி கணவரை விட்டு பிரிந்து சென்று ஈரோடுஅக்ரகாரம் பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்று விட்டார்.

    மேலும் அவரது கணவர் காளீஸ்வரன் குழந்தையை பார்க்க வரக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனால் மைவிழி கணவர்வீட்டிற்கு வராமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இவர்களது குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் மைவிழி இரவு 9 மணியளவில் தனது குழந்தையை பார்க்க தனது கணவர் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த காளீஸ்வரன் தனது மனைவி மைவிழியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.

    மேலும் நீ உயிரோடு இருந்தால் தான் எனக்கு பிரச்சினை, உன்னைகொன்றால் தான் நானும்எனது மகளும் நன்றாகஇருக்க முடியும்என்று கூறி மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார்.

    இதில் மைவிழிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

    இதனைப்பார்த்த உறவினர்கள் மைவிழியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இது குறித்து மைவிழி மொடக்குறிச்சி போலீசில் புகார்செய்தார். போலீசார் காளீஸ்வரன்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம்அந்த பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×