என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devaram"

    • சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    நாமரு கேள்வியர் வேள்விஒவா

    நான்மறை யோர்வழி பாடுசெய்ய

    மாமரு வும்மணிக் கோயில்மேய

    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

    தேமரு பூம்பொழில் சேலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

    காமரு சீர்மகிழ்ந்து எல்லிஆடும்

    கணபதி ஈச்சரம் காமுறவே.

    - திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    நடுநிலை தவறாது கேள்வி ஞானத்தை உடையவர்களும், வேதங்களை கற்ற அந்தணர்களும் வழிபாடு செய்யும் பெருமை உடைய மணிக்கோவிலை கொண்டது திருமருகல். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே! நல்ல மணம் தரும் மலர் சோலைகள் சூழ்ந்த சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் நடனம் புரியும் காட்சியை கணபதி ஈச்சரத்தில் விருப்பத்துடன் செய்வதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!

    • சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்த செந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி

    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

    சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த

    சீர்கெள்செங் காட்டங் குடியதனுள்

    கால்புல்கு பைங்கழல் ஆர்க்க ஆடும்

    கணபதி ஈச்சரம் காமுறவே.

    -திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    வேதங்கள் உணர்ந்த அந்தணர்கள் எழுப்பும் வேள்வி தீயின் புகை வெளிப்படும் மாடங்களுடன் கூடிய வீதிகளை உடையது திருமருகல் திருத்தலம். இங்கு மான் தோலும், பூணூலும் மார்பில் அணிந்து வீற்றிருக்கும் இறைவனே, மீன்கள் நிறைந்த நீர்வளம் மிக்க வயல்களும், சோலைகளும் சூழ்ந்த செங்காட்டங்குடியில் திருவடி கழல்கள் ஒலிக்க ஆடும் திருநடனத்தை, கணபதி ஈச்சரத்தில் செய்ததற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!

    • ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
    • மேகம் தவழும் உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப் பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    நெய்தவழ் மூவெரி காவல்ஓம்பு

    நேர்புரி நூல்மறை யாளர்ஏத்த

    மைதவழ் மாடம் மலிந்தவீதி

    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

    செய்தவ நான்மறை யோர்கள்ஏத்தும்

    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

    கைதவழ் கூர்எரி ஏந்திஆடும்

    கணபதி ஈச்சரம் காமுறவே.

    -திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    நெய் சொரிந்து மூன்று வகையான வேள்வித் தீயை பேணி வளர்க்கும் அந்தணர்கள் போற்ற, மேகம் தவழும் உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம். இங்கு வீற்றிருக்கும் இறைவனே! வேள்வி செய்வதை தவமாக போற்றும் நான்மறையாளர்கள் பாராட்டி புகழும் செங்காட்டங்குடியில் திருக்கரத்தில் பெரிய தீயை ஏந்தி நடனம் புரிவதற்கு ஏற்ற இடமாக கணபதி ஈச்சரத்தை விருப்பம் கொள்ள என்ன காரணம்? சொல்வாயாக!

    • திருக்குறள், பன்னிரு திருமுறை வகுப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஓதி தொடங்கி வைத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் திருக்குறள், பன்னிரு திருமுறை வகுப்புகளுக்கான ஆனந்த குருகுலம் தொடக்க விழா மாடர்ன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தீபா ராணி அனைவரையும் வரவேற்றார். ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் செயலாளர் எடையூர் மணிமாறன் மாணவர்களுக்கு தேவார புத்தகம் வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக துரை ராயப்பன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் விஜயராஜ் வாழ்த்துரை வழங்கினார். ஓதுவார் வடுகநாதன், துணை ஓதுவார் கருணாநிதி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஓதி தொடங்கி வைத்தனர்.

    இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாடர்ன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் முருகானந்தம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சர்வாலய உழவாரப்பணி குழு அமைப்புடன் இணைந்து ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினர் செய்திருந்தனர்.

    • 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு தொடர்ந்து பாடி திருநெறிய தமிழரசி என்ற விருது பெற்றவர்.
    • தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாடு துறை சார்பில் கலை இளம்மணி விருது பெற்றுள்ளார்.

    உடுமலை :

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா புதுடெல்லியில் நடந்தது. இதில் உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் உமா நந்தினி என்ற மாணவி பங்கேற்றார். தேவார பண்ணிசை பாடுவதற்கு 6 ஓதுவார்களில் ஒருவராக திருவாடுதுறை ஆதீன குரு மகா சன்னிதானங்களில் வேண்டுகோளின்படி கலந்து கொண்டுள்ளார். இவர் தொடர்ந்து 665 நாட்களாக கொரோனா காலத்தில் 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு தொடர்ந்து பாடி நிறைவு செய்து திருநெறிய தமிழரசி என்ற விருது பெற்றவர்.

    முதல் ஏழு திருமுறைகளைகளான திருவாசகம், திருக்கோவையார் ஒன்பதாம் திருமுறை, பத்தாம் திருமுறை திருமூலரின் திருமந்திரம், 11-ம் திருமுறை போன்றவற்றின் எல்லா பாடல்களையும் பாடி நிறைவு செய்து 12-ம் திருமுறை சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் என மொத்தம் 18,326 பாடல்களையும் பாடி நிறைவு செய்துள்ளார்.

    தொடர்ந்து அருணகிரிநாதரின் திருப்புகழ், திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா பாடல்களையும் யூடியூப் இணையதளத்தில் பாடி வருகிறார். இந்திய சாதனை புத்தகம், இளம் வயதில் அதிகமான ஆன்மிக பாடல்களை பாடியவர் என்று இவரது சாதனையை பதிவு செய்தது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாடு துறை சார்பில் கலை இளம்மணி விருது பெற்றுள்ளார். திருவாடுதுறை ஆதீன பண்ணிசை வகுப்பு மாணவியான இவர் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 24 வது குரு மகா சன்னிதானங்களின் திருக்கரங்களால் சிறப்பு விருதும் ரூபாய் ஐந்தாயிரத்திற்கான பொற் காசுகளையும் பெற்றுள்ளார்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனிடம் திருநெறிய அருள் செல்வி விருது அளித்து மாணவி உமா நந்தினியை கவுரவித்துள்ளார். உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை சார்பில் தூண்டில் சிறந்த தூயோர் விருதும், அரிமா சங்கம் சார்பில் பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார்.

    இதுகுறித்து கல்லூரி மாணவி உமா நந்தினி கூறியதாவது:-

    உடுமலையிலுள்ள ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது மழலைப் பருவம் முதலே கா்நாடக இசையை முறைப்படி கற்றறிந்துள்ளேன். நான் 6ம் வகுப்பு பயிலும்போது பன்னிசைப் பயிற்சியை உடுமலையிலுள்ள திருவாவடுதுறை ஆதீனம் பண்ணிசை பயிற்சி மையத்தில் அமைப்பாளா் ராணி கோபால்சாமியின் வழிகாட்டுதலின்படி, ஓதுவாா் சற்குருநாதனிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதைத்தொடா்ந்து, கரூா், ஈரோடு மற்றும் உடுமலை பகுதிகளுக்கு பொறுப்பாளரான, திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பேராசிரியரான ஜெய்சிங் லிங்க வாசகத்திடம் பண்ணிசை பாடல்களையும், திருநெறி முறைகளையும் கற்றுக்கொண்டேன். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் தேவாரப்பண்ணிசை பாடுவதற்கு 6 ஓதுவாா்களில் ஒருவராக திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானங்களின் அருளாணையின்படி கலந்து கொண்டேன். இந்த சரித்திர நிகழ்வு எனக்கு பெரும் பேறாகவும், பெருமையாகவும் உள்ளது என்றாா்.

    • முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்
    • தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள சைவ சமயத்தை சார்ந்த தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும்.

    முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு (சுப்பிரமணியன் அல்லது கார்த்திகேயன்) எடுக்கப்படும் விழாவாகும்.

    நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

    முருகன் தமிழ்க்கடவுள் ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

    சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

    சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

    வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

    தைப்பூச விரத முறை

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

    • இக்கோயில் பல யுகங்களை தாண்டிய தேவார பாடல் பெற்ற தலம் ஆகும்.
    • அம்மன் சன்னதிக்கு அருகே உள்ள எமனை வழிபட்ட பின்னர் தான் ஏனையகடவுள்களை வழிபட தொடங்குவார்கள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் கோவில் மிகப் பிரபல மான கோவிலாகும். இவ்கோ விலில் இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து சாமி தரிசனத்திற்காக வும், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களில் இருந்து, விடுபடவும் வழிபாடு செய்ய பக்தர்கள் பலர் வருகை தருகின்றனர்.

    இவ்வாலயத்தில் இந்தியாவிலேயே எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான குளம், குப்தகங்கை என அழைக்க–ப்படுகிறது. இக்குளத்தில் திருமகள் 64 கலைகள் ஓடு வாசம் செய்வதாக ஐதீகம். இக்கோயில் பல யுகங்களை தாண்டிய கோயில் என வரலாற்று புராணங்கள் சொல்லுகின்றன. இத்திரு–க்கோயிலை தேவாரம் பாடிய மூவர் பாடிய திருத்தலம் ஆகும்.

    திருவாஞ்சியம் கிராமம் சோழ மன்னர்கள் காலத்தில் துணை தலைநகரமாகவும் இருந்ததாக வரலாறு கூறுகின்றன. கோவிலை காண்பதற்கும், இக்கோ–யிலில் வழிபடுவதற்கும், குளத்தில் குளிப்பது, காசியில் உள்ள கங்கை யில் நீராடுவதற்கு சமம், தங்களின் பாவங்கள் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது. பக்தர்கள் பலர் இங்கு வருகை தந்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு பரிகாரம் செய்யும் திருத்தலமாக விளங்குகிறது. வாஞ்சிநாதர் மற்றும் மங்களாம்பிகையை வழிபடுவதற்கு முன்பு இங்குள்ள அம்மன்சன்ன தியில் எமனை வழிபட்ட பின்னர் ஏனையகடவு ள்களை வழிபட தொடங்கு வார்கள்.

    அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாஞ்சியம் வாஞ்சிநாத ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கான விடுதி, வாகனம் நிறுத்துவதற்கான இருப்பிட வசதி, கழிப்பிட வசதிகள், கோயிலின் தல வரலாறு அறிந்து கொள்ளக்கூடிய வகையில், அருங்காட்சியகம், திருவாஞ்சியம் நகரத்தில் பெருமையை உணர கூடிய வகையில், கலை அரங்கம் அமைக்கப்பட வேண்டுமென பொதும–க்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பக்தர்களின் கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்றுமா என எதிர்பார்க்கின்றனர்.

    ×