search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nandhi"

    • இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.
    • முருகன், இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார்.

    சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி அவரது பக்தியை இகழ்ந்தான்.

    அருணகிரியார் முருகனை வேண்டவே அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார்.

    இதனால் இவர், "கம்பத்திளையானார்" என்று பெயர் பெற்றார்.

    இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது.

    இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் "கோபுரத்திளையனார்" என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார்.

    அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார்.

    அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர்.

    இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

    • மாட்டுப் பொங்கல் அன்று நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.
    • கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும்.

    மாட்டுப் பொங்கல் அன்று திருவண்ணாமலை கோவிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.

    அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர்.

    அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.

    தனது வாகனத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

    கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும்.

    முழு முதற்கடவுள் என்பதால் இவரை வணங்கி விட்டு சன்னதிக்குள் செல்வர்.

    ஆனால் இங்கு முருகன் சன்னதி இருக்கிறது.

    பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள்.

    • இங்கு லவனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு கோவிலும் உள்ளது.
    • நந்தி மனிதவடிவில் உள்ள இந்த நந்தீஸ்வரர் கோவில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    திருவொற்றியூரில் பிரதோஷக் காலம் மிகவும் போற்றி வணங்கத்தக்கதாக இருந்ததை திருவொற்றியூர் தலபுராணம் சிறப்பாக பேசுகிறது.

    சிவபெருமான் நஞ்சு உண்ட பின் தேவர் தொழ ஆடியருளிய திருக்கூத்தினை தலபுராணம் விரிவாகக் கூறுகிறது.

    நாரத முனிவர், ராமன் மகன் லவனுக்கு திருவொற்றியூரின் பெருமைகளை கூறும்போது இங்கு வந்து படம்பக்க நாதரை பிரதோஷக் காலத்தில் தரிசித்தால் மிகபெரும் பயன்களை அடைவாய் என்று குறிப்பிட்டார்.

    இதையடுத்து அயோத்தியில் இருந்து கிளம்பி லவன் தொண்டை மண்டல நாட்டு திருவொற்றியூர் நோக்கி வந்தான்.

    லவன் பிரதோஷம் வழிபாடு செய்ய திருவொற்றியூர் வரும் வழியில் இடையே பெரும் மழை வந்தது.

    பயணம் தடைப்பட்டது. ஓற்றியூர் இறைவனை பிரதோஷ காலத்தில் தரிசிக்க தடையாக பெருமழை வந்ததே என வருந்தி, தன் உடலை மாய்த்து உயிர் விட லவன் துணிந்தான்.

    அப்போது காளை வாகனத்தில் ரிஷப ரூபாராய் ஓற்றியூரான் லவன் இருந்த இடத்திலேயே தரிசனம் தந்து அருளினார்.

    அந்த இடம் லவன் பேரூர் என பெயர் பெற்றது.

    தற்போது போரூர் என வழங்கப்படுகிறது.

    இங்கு லவனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு கோவிலும் உள்ளது.

    ஓற்றியூர் ஈசன் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்வோர்க்கும் இன்னும் வளங்கள் யாவும் வழங்குகிறார்.

    பிரதோஷ காலத்தில் நந்தியினை வழிபட்டும், ஆலகால விஷம் உண்டு ஆனந்த கூத்தாடிய பெருங் கருணைக்கடல் தியாகராஜாகிய சிவபெருமானை பக்தியுடன் திருவடிபணிந்து வழிபட்டால் எல்லா வளமும், நலமும் தேடி வரும்.

    திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீநந்திஸ்வரர் கோவிலுக்கு பிரதோஷ காலத்தில் சென்று வழிபட்டால் சிறந்த பயன்களை பெறலாம்.

    நந்தி மனிதவடிவில் உள்ள இந்த நந்தீஸ்வரர் கோவில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    • பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.
    • வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    பிரம்மா, விஷ்ணு, விஷ்ணு அவதார மூர்த்திகள், தருமன், காமன், அகத்தியர், கண்ணுவர், கவுடன்னியர், இலக்குமி, விசாலன், பார்க்கவி, கலைமகள் என பலர் பூசித்து முக்தி பெற்ற திருத்தலம், மயிலாடுதுறை.

    திலீபன், யோக வித்தமன், சிசன்மன், சயதுங்கன், தீர்த்த கங்கை, நாதசன்மன், அனவித்தை, கங்கை முதலியோரும் யானை, குதிரைகள், கரம், கழுகு, பாம்பு, நரி, குரங்கு, பூனை, கிளி என இவ்வுயிர்கள் அனைத்தும் மாயூரநாதேஸ்சுரரை வணங்கி வழிபட்டு முக்தி நிலை பெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.

    சைவப் பெருமக்களின் நாயகர்களாகிய திருஞான சம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசுப் பெருமானும் இத்தலத்திற்கு வந்து வாழ்த்தி வணங்கி பேறு பெற்றிருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தி.

    ஆயிரம் ஊரானாலும் மாயூரம் போலாகுமா? என்பார்கள். ஆக அந்த அளவிற்கு சிறப்பும் சீறும் பெற்ற திருத்தலம் மயிலாடுதுறை.

    பிரம்மா படைப்புத் தொழிலை துவக்க ஆணை பெற்று சென்ற திருத்தலம்.

    வேத நாயகன் விநாயகப் பெருமானும் இவனது இளவல் செவ்வேளும் வந்து பூசித்த தலம்.

    நந்திதேவர் சாபம் விலகிய தலம். திருமகளும் கலைமகளும் தொழுது நின்று பேறு பெற்ற திருத்தலம். கங்கை மகள் முத்தியடைந்த திருத்தலம்.

    ஐப்பசித் திங்கள் முதல் நாள் துலாக்காவேரி நீராடுவது தலை சிறந்தது.

    குடகின் குளத்திலே பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக அகன்று ஏறத்தாழ 17.60 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதைத் திருப்பாராய்ந்துறை என்ற திருத்தலத்திலே பார்க்க முடியும்.

    இத்தலத்தில் ஒவ்வொர் ஆண்டு ஐப்பசித் திங்கள் முதல் நாளன்று திருக்கோவிலிருந்து பராய்ந்துறை நாதரே அகண்ட காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது இன்றைக்கும் வழக்காற்றில் உள்ளது.

    என்றாலும் குடகுநாட்டின் தலைக்காவிரியலே குளிப்பதை விட, அரங்கத்து அரவணையாக கோவிலுக்கும் மேற்கே அகண்ட காவிரியிலே (திருப்பராய்ந்துறை) குளிப்பதைவிட மாயூரத்திலே குளிப்பது சிறப்பு எனச் சொல்லுவார்கள் சிலர்.

    • இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.
    • முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.

    திருவொற்றியூரில் பட்டினத்தார் முக்தி

    "பட்டினத்தார் உலகையே துறந்தவர். அவரைபோல அனைத்தையும் துறந்தவர் பூவுலகில் யாரும் இல்லை" என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

    அத்தகைய பட்டினத்தார் முக்திபெற்ற இடம் திருவொற்றியூர்.

    இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.

    பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்.

    திருவொற்றியூரில் தெருவில் நடந்து போனேன் காலடி மண்ணை நெற்றியில் திருநீறாக பூசினால் பிறவி நோய்க்கும் அருமுருந்தாகும் என்று பட்டினத்தார் பாடலில் கூறியுள்ளார்.

    பட்டினத்தார் இந்த ஊரில் மீனவச் சிறுவர்களுடன் விளையாடினார்.

    மணலைத் தோண்டி அதில் தன்னை புதைக்கச் செய்தார்.

    வேறு இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.

    இதுபோல 2 முறை செய்தார். 3வது முறையும் புதைத்த போது அவர் வெளியே வரவில்லை.

    தோண்டி பார்க்கும் போது இறைவனடி சேர்ந்து லிங்கமாக காட்சி தந்தார்.

    திருவொற்றியூர் இறைவனை பாடி அர்ச்சனை செய்ய ஏதுவாக 28 போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

    முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.

    இவரது சமாதிக் கோவில் திருவொற்றியூர் கடற்கரை சாலை அருகே இன்றும் உள்ளது.

    • சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.
    • முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    ஒற்றியூரில் கம்பர் ராமாயணம் எழுதினார்

    சான்றோருடையது தொண்டை நன்னாடு என்பதால் கல்வியில் சிறந்த கம்பன், வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழிபெயர்த்து எழுத சோழ நாட்டிலிருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார்.

    கவி சக்கரவர்த்தி உவச்சர் குலத்தைச் சேர்ந்தவர். இக்குலத்தை சேர்ந்தவர்களே ஸ்ரீ வட்டபாறை அம்மனை பூசித்து வந்தனர்.

    சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.

    திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.

    இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை கற்க கம்பர் திருவொற்றியூர் வந்தார்.

    திருவொற்றியூர் சதுரானை பண்டிதர் என்பவர் மடம் ஒன்றை நிறுவினார்.

    இவர் கேரள நாட்டினர்.

    பல கலைகளையும் பயின்றவர் என்று தமிழக வரலாற்றில் (பக்கம் 356) கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு கூறுகிறது.

    இவரிடம் தான் பகல் எல்லாம் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கம்பர் கேட்டு, இரவு முழுவதும் அதைத் தமிழில் எழுதினார்.

    கம்பர் உவச்சர் குலத்தவர், காளி பக்தர், எனவே தினமும் வட்டபாறை காளியம்மனை வணங்கிய பிறகே ராமாயணத்தை எழுதுவார்.

    இரவில் தமிழில் பாட்ல எழுதும் போது வட்டபாறை நாச்சியார்,பெயர் வடிவில் வந்து ராமாயணம் எழுதும் கம்பனுக்குத் தீபந்தம் ஏந்தி நின்றதைக் கம்பரே பாடியுள்ளார்.

    ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே

    வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை & பற்றியே

    நந்தாது எழுதற்கு நள்ளிரவில் மாணாக்கர்

    பிந்தாமல் பந்தம் பிடி

    தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத்தொண்டு செய்துள்ளதும், சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒருபெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.

    கம்பர், வான்மீகி ராமாயண வடமொழிகள் மூல படம் கேட்க ஒற்றியூர் சதுரானை மடம் வந்ததும், வட்டபாறையம்மன் அருளால் தமிழில் ராமாயணம் பாடியதும் தனிச்சிறப்புக்குரிய செய்தியாகும்.

    • இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.
    • அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?

    அண்ணி வடிவில் வந்து ராமலிங்க வள்ளலார் அடிகளுக்கு சாதம் பரிமாறிய அன்னை

    ராமலிங்க அடிகள் தனது 12வது வயதிலிருந்து 35வது வயது வரை 24 ஆண்டுகள் இடைவிடாமல் இந்த ஒற்றியூர் இறைவனை வந்து வணங்கினார்.

    இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.

    அவர் அருளிச் செய்த 6 திருமுறைகளில் 3 திருமுறைகள் முற்றிலும் திருவொற்றியூரின் மேன்மையை உணர்த்துகின்றன.

    ஆதிபுரிஸ்வரர் மீது எழுத்தறி பெருமான் மாலை என 31 பாடல்களையும், வடிவுடையம்மன் மீது ஸ்ரீ வடிவுடை மாணிக்க மாலை என 101 பாடல்களையும் பாடியுள்ளார்.

    ஸ்ரீ தியாகராஜ பெருமானது பவனி பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.

    திருவொற்றியூர் முருகன் கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

    "அருமருந்தே தணிகாசலம் மேவும் ஆருயிரே

    திருமருங்கார் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னதால்

    ஒருமருங்கு ஏற்ற என் செய்வேன்

    கற்பூர ஒளியினுக்கே" என்று வருந்தி பாடியுள்ளார்.

    அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?

    ஒருநாள் இரவு அன்னை ஸ்ரீ வடிவுடையாளை தரிசித்து கால்நோக நடந்து சென்று நள்ளிவு ஆனதால் வீட்டில் அண்ணியை எழுப்ப மனமின்றி பசியோடு வீட்டுத் திண்ணையில் ஸ்ரீ ராமலிங்க அடிகள் தூங்கச் சென்றார்.

    அண்ணி வடிவில் அன்னை ஸ்ரீ வடிவுடையாளே அவருக்கு சாதம் தந்து அருள் செய்தாள்.

    குழந்தையின் பசியை பொறுக்காது ஞானபால் தந்தவளாயிற்றே? அடியாரை பசிக்க விடுவாளோ? என்று ராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

    • “காதற்றஊசி வாராது காணும் கடை வழிக்கே” என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.
    • சிவனைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம்பெற்றார்.

    திருவொற்றியூரில் சித்துக்கள் செய்த பட்டினத்தார்

    பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார், திருவொற்றியூருக்கு வந்து திருவருள் பெற்று கடற்கரை ஓரத்தில் உயிரோடு ஜீவ சாமாதியான சித்தர்.

    காவிரிபூம்பட்டினத்தில் நகரத்துச் செட்டியார் மரபில் தோன்றியவர் திருவெகாடர், திருமணமான பின் மகப்பேறு இன்றி சிவனிடம் முறையிட்டதால் திருவிடைமருதூர் ஈசனே மருதவாணர் என்ற பெயரில் வளர்ப்பு மகனாக வந்தார், வளர்ந்தார், கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வந்தார்.

    வறட்டிகளோடு ஒரு கிழிந்த ஓலையையும் தந்து மறைந்தார்.

    "காதற்றஊசி வாராது காணும் கடை வழிக்கே" என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.

    சிவனைத் தவிர எல்லா செல்வமும் பொய் என்ற ஞானம்பெற்றார்.

    செல்வம், மனைவி, உறவு யாவற்றையும் துண்டித்துக் கொண்டு துணையோடு துறவு பூண்டார்.

    கோவில் தோறும் இறைவனை வழிபட்டு தான் பெற்ற ஞானத்தை பாடினார்.

    சுவையற்றபேய்க் கரும்பு இனித்த இடமாகிய திருவொற்றியூர் தனக்கு முக்தி தரும் இடம் என இங்கு வந்து கடற்கரை அருகே சித்துக்கள் செய்தார்.

    • மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.
    • தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

    மறைமலை அடிகளின் வயிற்றுவலியை தீர்த்த திருவொற்றியூர் முருகபெருமான்!

    தனித்தமிழ் அடிகளாய் விளங்கிய மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.

    சூலை நோயைத் தந்து திருநாவுக்கரசு ஆட்கொள்வது போல சிவன் இவருக்கு ஆற்றாத வயிற்று நோயைத் தந்தார்.

    தமக்கு உற்றநோய் நீங்குமாறு திருவொற்றியூரில் திருக்கோவில் கொண்டு, அருணகிரிக்கும், ராமலிங்கருக்கும் அருளிய முருகபெருமானை வேண்டி புதிருவொற்றி முருகர் மும்மணிக் கோவையை பாடினார்.

    தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

    இம்முருக பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன ஈந்து அருள்பாலித்து வருகிறார்.

    • நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர் என இருவர் உள்ளனர்.
    • நந்தி தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என இரண்டு தீர்த்த குளங்கள் உள்ளன.

    இரட்டை சிறப்பு பெற்ற திருவொற்றியூர் தலம்

    பிற கோவில்களில் ஒன்றாக இருக்கும் யாவும் இங்கு இரட்டை சிறப்புகளாக அமைந்திருக்கிறது.

    இங்குள்ள இரண்டு விருட்சம் அத்தி, மகிழம் , இரண்டு திருக்குளங்கள் நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இரண்டு பெருமான் படம்பக்கநாதர், தியாகராஜர் , இரண்டு அம்பிகை ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்ட பாறையம்மன்,

    இரண்டு விநாயகர், குணாலய விநாயகர், பிரதான விநாயகர், இரண்டு முருகர், அருட்ஜோதி பெருமான், பிரதானமுகர், இரண்டு நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர்,

    திருவீதி விழாவில் கூட சந்திரசேகர் வீதி வலம் வந்த பின் இரண்டாவதாக தியாகராஜரும் வீதி வலம் வருவார்.

    பிரம்ம உற்சவம், வசந்த உற்சவம் என சிவனுக்கு இரண்டு உற்சவமும், சிவராத்திரி உற்சவம் வட்ட பாறையம்மன் நவராத்திரி உற்சவம் என அம்பிகாவுக்கு இரண்டும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

    திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலி செய்வார். இரட்டைச் சிறப்புகள் இக்கோவிலின் தனிபெருமையன்றோ?

    • ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் சிறப்பு பெற்றது இக்கோவில்.
    • பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    திருவொற்றியூர் ஆலயம்-பஞ்சபூத லிங்கங்கள்

    மண்ணுக்கு சோமசுந்தர் கோவிலும், விண்ணுக்கு ஆகாசலிங்கமும், நெருப்புக்கு அண்ணாமலையார் கோவிலும், காற்றுக்கு காளத்தீஸ்வரரர் கோவிலும், வெளிச்சுற்று பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் பேறு இந்தத் திருக்கோவிலில் மட்டுமே வாய்த்துள்ளது.

    ஆஞ்சநேயர்

    கோவில் தூணிலே உள்ள ஆஞ்சநேயர் வேண்டியவருக்கு அருளை அள்ளி வழங்கும் வள்ளல் இவர், நினைத்த காரியம் இவரிடம் ஜெயமாகும்.

    • பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.
    • ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

    திருவொற்றியூர் ஆலயம்-பூவுலக சிவலோகம்

    படை வளம் செறிந்த பாடல் 274 திருக்கோவில்களில் தொண்டை நாட்டில் 32 திருத்தலங்கள் உள்ளன.

    அதில் பெரும் புகழ்பெற்று, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.

    பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.

    முக்தி தலம், ஞானத்தலம் என்றும் இதனை போற்றுவர்.

    ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

    மூன்று தனித்தனி கொடி மரங்கள், ராஜகோபுரம் 7 நிலையில் 120 அடி உயரத்துடன் நிற்கிறது.

    கோவிலில் நுழைந்ததும் உயர்ந்தோங்கிய கொடி மரத்தைக் காண்கிறோம்.

    இக்கோவிலில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்ட பாறையம்மன் என்ற மூவருக்கும் தனித்தனி திருவிழாக்கள் சிறப்புற நடப்பதால் மூன்று கொடி மரங்கள் தனித்தனியே உள்ளது.

    இதில் கொடியேறியதும் 10 நாள் திருவிழாக்கள் தனித்தனியே நடைபெறும்.

    உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த சன்னதியில் வரிசையாக சூரிய பகவான், தேவார மூவர், சுந்தரர், சங்கிலி நாச்சியார் 1008 கோடுகளை லிங்கங்களாக கொண்ட சரஸ்ரலிங்கம், ஏகாம்பரேஸ்வரர், ராமநாதர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.

    ×