search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalahasti"

    • ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளினார்.
    • வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச, சேஷ வாகனங்களில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் ஆண்களும், பெண்களும் கோலாட்டம் ஆடினர். பக்தர்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியவாறு சென்றனர். மாடவீதிகளில் திரண்ட பக்தர்கள் தேங்காய், உடைத்தும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் ஹர..ஹர.. மகா தேவா சம்போ சங்கரா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

    அன்னப்பறவை தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சி குடித்து விடும், நீரை விட்டு விடும். அதுபோல அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளிய தன்னை வழிபடும் பக்தர்களிடம் இருக்கும் தீய குணங்கள், தீய சக்தியை நீக்கி, முக்தியின் பாதையில் செல்ல நல்வழிப்படுத்துவேன் என்பதை உணர்த்தவே உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் `ஹம்சம்' என்ற அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளினார்.

    அதேபோல் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளினார். பொதுவாக கிளி வாகனம் அம்பாளுக்கு உகந்ததாகவே கருதப்படுகிறது. இலக்கியத்தில் கிளி காதல் தூதுவனாகக் கூறப்படுகிறது. கிளி எளிதில் மனிதர்களிடம் பழகி தோழமை கொள்ளும் இயல்புடையது.

    பெண்கள் கிளியை பழக்கி தனக்கு துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். கிளி சுகத்தின் அடையாளம். ஆகவே கிளி மேல் எழுந்தருளி உலா வரும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இனிய சுகங்களை வழங்கி எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வைப்பேன் என்பதை உணர்த்தவே தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • வாயுத் தலமாக விளங்குவது காளஹஸ்தி.
    • புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு.

    பஞ்சபூதத் தளங்களில் வாயுத் தலமாக விளங்குவது காளஹஸ்தி. உத்தரவாகினியாகப் பொன்முகலி ஆறு பாயும் ஊர், ராகு, கேது ஆகிய சாயா கிரகங்கள் நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு.

    சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன் கொடியேற்றம் வெகுசிறப்பாக நடந்தது.

    பக்த கண்ணப்பர் கோயிலில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து காளத்திநாதர் கோயில் முன் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேதங்கள் முழங்க, உற்சவர்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காலை, வெள்ளி சப்பரத்தில் ஞானபூங்கோதை சமேதமாய் உற்சவர் காளத்திநாதர், விநாயகர், முருகர் ஆகியோரின் திருவீதி உலா நடந்தது. இன்றும் வாகன உலா நடைபெறும்.

    • நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள்.
    • ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு பூஜைகள்.

    ஸ்ரீ காளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன்கோவில் சார்பில் நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணை கோவில்களான நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர் கோவிலுக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு, கோவில் நிர்வாகி கே.வி.சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர் கோவிலுக்கு, சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை வழங்கினார்கள்.

    முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முறைப்படி பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை கோவிலில் இருந்து தலைமீது சுமந்து மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று நவசந்தி விநாயகர் கோவில்களுக்கு வழங்கப்பட்டது.

    இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு கூறுகையில், விநாயகர் சதுர்த்தி புனித தினத்தை யொட்டி ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் முதன்மை கடவுளாக விளங்கும் கணபதிக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜைப் பொருட்கள் சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.

    • பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார்.
    • அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும்.

    இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் இந்த நாயன்பார்கள். அந்த வகையில் இன்றைக்கு நாம் கண்ணப்பநாயனார் பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.

    பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார். இவர் முற்பிறவியில் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். மகாபாரதபோரில் தன்னுடைய மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு உணவும் உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் கண்ணபிரான் கூட கயிலாயத்திற்கு சென்றார்.

    சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக செல்கிறார். அங்கு சென்றபோது ஒரு பன்றியின் காரணமாக அர்ஜுனனுக்கும் வேடன் வடிவில் இருந்த சிவபெருமானுக்கும் இடையே சண்டை நடக்கிறது. வேடன் வடிவில் இருப்பது சிவபெருமான் என்று அறியாமல் வேடன் தானே என்று வேடன் குலத்தை திட்டினான். உடனே தன்னுடைய திருவுருவத்தை அர்ஜுனனிடம் காட்டி அர்ஜுனா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார் சிவபெருமான்.

    உடனே அர்ஜுனன் தன்னுடைய தவறை உணர்ந்து. அவரிடம் அய்யனே உன்னை என்றுமே மறவாத வரத்தை தரவேண்டும் என்று கேட்டார். ஆனால் வரம் வாங்க வந்ததே தன்னுடைய மகனை கொன்றவர்களை கொல்ல பாசுவதகனி வாங்க வந்தவர் அவ்வாறு கேட்காமல் அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும் என்று கேட்டுவிட்டார்.

    சிவபெருமான் மகனே அர்ஜுனா... நீ அபிமன்யூவை கொன்றவர்களை கொல்வதற்காக மனதிற்குள்ளேயே கேட்டாயே பாசுவத கனி அதனை நான் இப்போது உனக்கு தருகிறேன். ஆனால் நீ அடுத்த பிறவியில் இப்போது நீ கேட்டாயே ஒருவரம் இடையறாத பக்தியை தரவேண்டும் என்று அந்த வரத்தை நான் அடுத்த பிறவியில் உனக்கு தருவேன்.

    ஆனால் நீ என்னை திட்டினாயே வேடன் என்று, எனவே நீ அடுத்த பிறவியில் வேடர் குலத்தில் பிறந்து ஒரு பன்றியின் காரணமாக காளஹஸ்தியில் என்னை கண்டு முக்தி பெருவாய் என்று கூறினார் சிவபெருமான். இதுதான் கண்ணப்பநாயனாரின் முற்பிறப்பு வரலாறு.

    வேடர் குலத்தில் ஒரு தலைவர் இருந்தார். அவர் பெயர் நாகன். அவருடைய மனைவி பெயர் தத்தை. இந்த நாகனுக்கும் தத்தைக்கும் நீண்டகாலமாக குழந்தைப்பேறு இல்லை. இதனால் இவர்கள் இருவரும் முருகப்பெருமானை நோக்கி தவம் செய்தனர். முருகப்பெருமானின் திருவருளால் நாகனுக்கும் தத்தைக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தின்னன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

    தின்னன் சிறுவயதிலேயே காட்டிற்கு சென்று புலிக்குட்டியை பிடித்து வந்து வீட்டின் முற்றத்தில் கட்டிபோட்டு விடுவான். அந்த அளவிற்கு வீரமுடன் இருந்தான். தின்னன் 7 வயதிலேயே வில்விற்றையை கற்றுக்கொண்டு நல்ல தின்மையாகவும், வேடவர் குலத்திற்கு ஏற்ற தைரியசாலியாகவும் இருந்தார்.

    வேடவர் தலைவனாகிய நாகனுக்கு இப்போது வயதாகிவிட்டது. வேட்டைக்கு இவர்கள் செல்லாததால் மலைப் பகுதியில் விளையக்கூடிய பயிர்களை எல்லாம் விலங்குகள் அழிக்கத்தொடங்கின. இதனால் வேடர்கள் எல்லோரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனால் வேடவர்களின் தலைவனாகிய நாகன், தன்னுடைய வேடவ இன மக்களை எல்லாம் அழைத்து எனக்கு வயதாகிவிட்டது. என்னால் இனி வேட்டையாட முடியாது. எனவே என்னுடைய மகானான தின்னனை தலைவனாக அறிவிக்கிறேன் என்று கூறினார் நாகன்.

    தலைவனான தின்னன் வேட்டையாட வில்லும், வாளும் கொண்டு சென்றார். தின்னனுக்கு நானன், காடன் என்று இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருநாள் தின்னனும், நானனும், காடனும் காட்டுக்கு வேட்டையாட காட்டிற்கு சென்றனர். காட்டில் ஒரு பன்றி தின்னனாரின் அருகிலேயே ஓடி ஓடி வந்து கொண்டிருந்தது. உடனே தின்னனாரும் அந்த பன்றிக்கு பின்னாடி ஓடினார். தின்னனை தொடர்ந்து நாகனும், அவருக்கு பின்னால் காடனும் ஒருவர் பின் ஒருவராக ஓடிச்சென்றனர். கடைசியில் தின்னனார் அந்த பன்றியை தன்னுடைய ஈட்டியால் ஒரு குத்து குத்தி கொன்றுவிட்டார்.

    நெடுந்தூரம் ஓடி வந்ததால் இவர்கள் மூவருக்கும் பசி எடுக்கத்தோன்றியது. அப்போது தின்னன் தனது நண்பர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே அவருடைய நண்பர்களான நாணனும், காடனும் திருகாளத்தி மலைக்கு தின்னனை அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு நதிக்கரை தின்னனின் நண்பன் காடன் அந்த பன்றியை சாப்பிடுவதற்கு நெருப்புமூட்டிக்கொண்டு இருந்தார்.

    அப்போது திருக்காளத்தி மலை உச்சியில் உள்ள சிவபெருமான பார்க்க நாணன் தன்னுடைய நண்பனான தின்னனாரை அழைத்துக்கொண்டு சென்றார். திருக்காளத்தி மலையில் உள்ள சிவபெருமானை பார்த்த தின்னன், அவரை பார்த்து சிவபெருமானே இந்த கொடிய காட்டின் எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்று கூறி வருத்தப்பட்டார். அதன்பிறகு நான் உடனே உங்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன் என்று சொல்லி தன்னுடைய நண்பன் காடன் சுட்டு வைத்திருந்த பன்றி இறைச்சியை பார்த்தார்.

    அந்த இறைச்சியில் எந்த பகுதி சுவையாக இருக்கும் என்று நினைத்து அந்த பகுதியை சாப்பிட்டு பார்த்து அந்த எச்சில் இறைச்சியை ஒரு இலையில் சேர்த்து வைத்து அதனை சிவபெருமானுக்கு கொண்டுசெல்லலாம் என்று எடுத்துக்கொண்டு செல்ல, ஐயோ இறைச்சி சாப்பிட்டால் சிவபெருமானுக்கு தண்ணீர் தாகம் எடுக்கும். எனவே தண்ணீர் எப்படி கொண்டு செல்வது என்று எண்ணிக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய தண்ணீரை தன்னுடைய வாயில் முகர்ந்து வைத்துக்கொண்டு உடனே திருக்காளத்தில் இருக்கக்கூடிய சிவபேருமானின் ஆலயத்துக்கு சென்றார் தின்னன்.

    அதன்பிறகு தான் கொண்டுவந்த இறைச்சியையும் சிவபெருமானுக்கு படைத்தார் தின்னன். பின்னர் வாயில் முகர்ந்து கொண்டுவந்த நீரை மஞ்சன நீராக எண்ணி சிவபெருமான் மீது உமிழ்ந்துவிட்டார். பிறகு சிவபெருமானை பார்த்து சாப்பிடுங்கள் என்று தின்னனார் பவ்யமாக வேண்டிக்கொண்டார்.

    இவ்வாறு தொடர்ந்து தின்னனார் தான் சுவைத்து பார்த்து கொண்டுவந்த இறைச்சியையும், வாயில் உமிழ்ந்து கொண்டுவந்த நீரை மஞ்சன நீராகவும் சிவபெருமானுக்கு படைத்து வந்தார். திருகாளத்தி மல்லையில் தினமும் காலையில் சிவபெருமானுக்கு ஆகம முறைப்படி சிவகேசரியார் என்பவர் பூக்கள், மஞ்சன நீர், அமுது கொண்டு பணி செய்வது வழக்கம். அன்று மதியம் தான் தின்னனார், தான் சுவைத்துக்கொண்டுவந்த இறைச்சியையும், எலும்பையும் படைத்தார். மறுநாள் பூஜை செய்வதற்காக பூக்கள், மஞ்சனநீர், அமுது ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வந்தார்.

    உடனே சிவபெருமானுக்கு முன்னாள் இறைச்சியும், எலும்புத்துண்டும் இருப்பதை பார்த்த சிவகேசரியார் நடுநடுங்கி போனார். இந்த கொடுஞ்செயலை செய்தவர் யாரோ என்று கூறிக்கொண்டு அதனை எடுத்து சுத்தம் செய்துவிட்டு, அருகில் இருந்த நதியில் குளித்துவிட்டு வந்து சிவபெருமானுக்கு பூஜை செய்தார். இப்படி 4 நாட்கள் சென்றது. இந்த 4 நாட்களும் சிவகேசரியார் பூக்களும், மஞ்சனநீரும், அமுதும் கொண்டு வந்து அபிஷேகம் செய்துவிட்டு செல்வார். மாலையில் தின்னனார் வந்து இறைச்சிகளும், எலும்புகளும் கொண்டுவந்து வழிபாடு செய்வார்.

    ௪ நாட்களும் தொடர்ந்து இந்த இறைச்சிகளை அப்புறப்படுத்திக்கொண்டே வந்தார். ஐந்தாவது நாள் ரொம்ப வருத்தப்பட்டு இறைவனிடம் நீ எப்படி பொருத்துக்கொண்டு இருக்கிறாய். இந்த கொடுமையை எப்படியாவது நீக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு மனம் வருந்தி வேண்டினார். அன்று இரவு சிவகேசரியார் கனவில் சிவபெருமான் வந்து, என்னிடம் வந்து பூஜை செய்பவனை சாதாரண வேடன் என்று நினைத்துவிடாதே. நீ அவன் செய்யும் பக்தியை நாளை நேரில் வந்து மறைந்திருந்து பார் என்று கூறினார்.

    சிவகேசரியார் காளஹஸ்தி மலைக்கு சென்று அங்கு ஒரு மரத்தின் பின்னால் மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதை கவனித்தார். வழக்கம்போல் அன்றும் தின்னனார் ரொம்ம மகிழ்ச்சியுர இலையில் இறைச்சியும், வாயில் நீரும் முகர்ந்து வந்தார். அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடிந்துகொண்டு இருந்தது. உடனே சிவபெருமான் அப்பா... என்று ஓடி வந்து அலறிவிட்டார். இதனால் வாயில் இருந்த மஞ்சனநீர் கீழே வடிந்தது. உடனே ஊனுக்கு ஊன் வினைதீர்க்கும் என்கிற பழமொழி தின்னனாருக்கு நினைவுக்கு வந்தது. சிவபெருமானே உங்களுடைய கண்களில் இருந்து ரத்தம் வடிகிறது என்று கவலைப்படவேண்டாம். என்னிடம் இரண்டு கண்கள் உள்ளன என்று கூறிவிட்டு தன்னுடைய ஒரு கண்ணை பிடுங்கி எடுத்து சிவபெருமானின் ஒரு கண்ணில் வைத்தார்.

    அப்போது ரத்தம் வடிவது நின்றுவிட்டது. தின்னனாருக்கு ஒரே சந்தோசம். சிவபெருமானுக்கு கண்களில் இருந்து வடியக்கூடிய ரத்தம் நின்றுவிடவே தின்னனாருக்கு ஒரே சந்தோசம். அந்த சந்தோசம் தீருவதற்குள், சிவபெருமானின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் வடிந்தது. இதை பார்த்ததும் சிவபெருமான் வருத்தப்படாதீர்கள். எனக்கு இன்னொரு கண்ணும் இருக்கிறது. அதையும் நான் உமக்கே தந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு மற்றொரு கண்ணையும் பிடுங்க சென்றார்.

    அப்போது சிபெருமானுக்கு வைக்கும் போது அடையாளம் தெரிவதற்காக தன்னுடைய காலின் பெருவிரலை அடையாளத்திற்கு சிவபெருமானின் ரத்தம் வடியக்கூடிய மற்றொரு கண்ணில் வைத்து ஊன்றி வைத்துவிட்டு அம்பை எடுத்து மற்றொரு கண்ணையும் குத்தும்போது சிவபெருமான் திகைத்து நின்று பொறு கண்ணப்பா பொறு என்று அசரிரீயாக தடுத்து நிறுத்தினார். என்னுடைய கண்ணில் ரத்தம் வடிவதை பார்த்தவுடன் உன்னுடைய கண்ணை பிடுங்கி நீ வைத்ததால் நீ கண்ணப்பர் என்று அழைக்கப்படுவாய்.

    அதுமட்டுமில்லாமல் நீ எப்போதும் என்னுடனேயே இருப்பாய் என்று கூறி திருக்காளத்தி மலையில் வைத்து முக்தியும் கொடுத்தார் சிவபெருமான். இந்த கண்ணப்பநாயனாரின் வரலாற்றில் இருந்து தெரிவது என்னவென்றால் இறைவனிடம் நாம் எப்போதும் அன்போடும், பக்தியோடும் இருந்தால் முக்தி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் பிறவிப்பிணிகூட நீங்கும் இதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது. பக்தியோடு இருப்போம். முக்தி பெறுவோம்.

    • பிக்னிக் செல்வது போல் செல்லாமல், பக்தி யாத்திரையாக மேற்கொள்ள வேண்டும்.
    • தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

    பரிகாரத் தலங்களில் செய்யும் வழிபாடுகள் மூலமாக ராகு, கேது தோஷங்கள் நம்மை விட்டு விலகுகின்றன. சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். பிக்னிக் செல்வது போல் செல்லாமல், பக்தி யாத்திரையாக மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

    * காளஹஸ்தி

    திருப்பதிக்கு மிக அருகில் உள்ளது. சென்னை-திருப்பதி சாலையில் உள்ளது. ரேணிகுண்டா ரெயில் நிலையத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் காளஹஸ்தி செல்லலாம்.

    * திருநாகேஸ்வரம்

    கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு நாகருக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

    * திருமணஞ்சேரி

    இது கும்பகோணத்திலிருந்து குத்தாலம் சென்று, அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.

    * திருப்பாம்புரம்

    கும்பகோணத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம் - காரைக்கால் சாலையில் உள்ளது.

    * வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்

    திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் மங்கலம் கிராமத்துக்கு அருகில் உள்ளது. அங்குள்ள புற்றுமண் சர்வரோக நிவாரணியாகும்.

    * கீழ்பெரும்பள்ளம்

    கேது சேஷத்திரம் - இங்கும் பரிகாரம் செய்து வைக்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது.

    * மன்னார்சாலா - கேரளா

    எர்ணாகுளம் அடுத்த ஆலப்புழையிலிருந்து ஒரு மணி நேரம் பயணத்தில், திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் ஹரிபாடு என்னுமிடத்தில், 5 கி.மீ தொலைவில் மன்னார்சாலா உள்ளது.

    * பாம்பு மெய்காட்டு அம்பலம்

    திருச்சூரிலிருந்து மாலா என்னும் ஊரில் உள்ளது.

    • காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
    • மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.

    சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.

    அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

    ரயில் நிலையம் : திட்டை

    பஸ் வசதி : உண்டு

    தங்கும் வசதி : இல்லை

    உணவு வசதி : இல்லை

    ஸ்ரீகாளஹஸ்தியில் வசித்து வந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான நாதஸ்வர வித்வான்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். #Suicide
    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி கர்னால் தெருவைச் சேர்ந்தவர் முனிக்குமார் (வயது 40). இவர், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நாதஸ்வர வித்வானாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மாதவி (36). இருவருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சிராவனி (15) ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் முனிசாய் (12) அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாததால் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதவி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இரு மகள்களும் தூங்கி விட்டனர்.

    வீட்டின் அறையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    நேற்று காலை விடிந்ததும் இரு மகள்களும் பெற்றோர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுத இரு மகள்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும் தகவல் தெரிவித்தனர்.

    இதுபற்றி ஸ்ரீகாளஹஸ்தி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இரு பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Suicide

    ×