என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீகாளஹஸ்தியில் திருப்பதி தேவஸ்தான நாதஸ்வர வித்வான்-மனைவி தற்கொலை
Byமாலை மலர்16 Oct 2018 3:58 AM GMT (Updated: 16 Oct 2018 3:58 AM GMT)
ஸ்ரீகாளஹஸ்தியில் வசித்து வந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான நாதஸ்வர வித்வான்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். #Suicide
ஸ்ரீகாளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தி கர்னால் தெருவைச் சேர்ந்தவர் முனிக்குமார் (வயது 40). இவர், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நாதஸ்வர வித்வானாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மாதவி (36). இருவருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சிராவனி (15) ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் முனிசாய் (12) அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாததால் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதவி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இரு மகள்களும் தூங்கி விட்டனர்.
வீட்டின் அறையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று காலை விடிந்ததும் இரு மகள்களும் பெற்றோர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுத இரு மகள்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும் தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி ஸ்ரீகாளஹஸ்தி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இரு பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Suicide
ஸ்ரீகாளஹஸ்தி கர்னால் தெருவைச் சேர்ந்தவர் முனிக்குமார் (வயது 40). இவர், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நாதஸ்வர வித்வானாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மாதவி (36). இருவருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சிராவனி (15) ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் முனிசாய் (12) அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாததால் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதவி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இரு மகள்களும் தூங்கி விட்டனர்.
வீட்டின் அறையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று காலை விடிந்ததும் இரு மகள்களும் பெற்றோர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுத இரு மகள்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும் தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி ஸ்ரீகாளஹஸ்தி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இரு பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Suicide
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X