அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியது - இண்டிகோ CEO அறிவிப்பு

தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம்.
அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியது - இண்டிகோ CEO அறிவிப்பு
Published on

கடந்த எட்டு நாட்களாக பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் பல விமானங்களை ரத்து செய்து இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் தந்தது.

இந்நிலையில் இப்போது அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 5 ஆம் தேதி, இண்டிகோ 700 விமானங்களை மட்டுமே இயக்க முடிந்தது. அதன் பின்னர், அது படிப்படியாக ஆனால் சீராக மேம்பட்டுள்ளது.

டிசம்பர் 6 ஆம் தேதி 1,500 விமானங்களும், டிசம்பர் 7 ஆம் தேதி 1,650 விமானங்களும், டிசம்பர் 8 ஆம் தேதி 1,800 விமானங்களும், இன்று(நேற்று) 1,800க்கும் மேற்பட்ட விமானங்களும் இயக்கப்பட்டன.

நேற்று(திங்கள்கிழமை) முதல், எங்கள் நெட்வொர்க்கில் உள்ள 138 நகரங்களுக்கும் நாங்கள் விமானங்களை இயக்குகிறோம், மேலும் எங்கள் நேரமின்மையும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம், அதற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதற்கும், மீண்டும் இண்டிகோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததற்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதை 10 சதவீதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com