என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvananthapuram Airport"

    • ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும், 100 ராக்கெட் பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது.
    • ஒரு நாளைக்கு பட்டாசு வெடிக்க மட்டும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், அரபிக்கடலோரத்தில் அமைந்துள்ளது. பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரையில் உள்ள மீனவ கிராம பகுதியில் இந்த விமான நிலையம் உள்ளதால், இங்கு மீன்களை இரையாக தேடி வரும் பறவைகளின் தொல்லை அதிகம். இதன் காரணமாக விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும் போதும், விமானங்கள் வந்து இறங்கும் போதும் கூட்டம் கூட்டமாக பறந்து திரியும் பறவைகளால் தினமும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் பறவைகள் மோதி 10 விமானங்களுக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    பறவைகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில் விமான நிலையத்தின் நாலாபுறமும் சுமார் 12 இடங்களில், அவ்வப்போது அதி சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க செய்து பறவைகளை விரட்டியடித்து வருகிறார்கள். விமானங்கள், தரை இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் முன்பாக இந்த பட்டாசுகள் முழங்கும். சில நேரங்களில், வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும், 100 ராக்கெட் பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு பட்டாசு வெடிக்க மட்டும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது.

    அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ.12 கோடிக்கு பட்டாசுகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெடிக்கப்படுகிறது. இது தவிர பட்டாசு வெடிக்கும் பணிக்கு 30 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது மாத சம்பளம் ரூ.24 ஆயிரம் ஆகும். சம்பள வகையில் மட்டும் மாதம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் செலவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் பறவைகள் மோதியதால் பழுதான இண்டிகோ விமானம், பெங்களூருவுக்கு 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
    • கடந்த மாதம் மட்டும் 5 விமானங்களின் மீது பறவைகள் மோதிய சம்பவம் நடந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் சென்று வருகின்றன.

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களை கேரள மாநிலத்தினர் மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரக்கூடிய விமானங்களின் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கடி நடப்பதால் விமான பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

    சமீபத்தில் பறவைகள் மோதியதால் பழுதான இண்டிகோ விமானம், பெங்களூருவுக்கு 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. கடந்த மாதம் மட்டும் 5 விமானங்களின் மீது பறவைகள் மோதிய சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடு பாதையின் மீது பறவை கூட்டம் வட்டமிட்டபடியே இருப்பதால் அடிக்கடி இந்த சம்பவம் நடக்கிறது.

    நாட்டின் பெரும்பாலான விமான நிலையங்களில் பறவைகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், திருனந்தபுரம் விமான நிலையத்திற்கு அருகில் பறவைகளின் அடர்த்தி வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதாக விமானிகள் கூறுகின்றனர். பறவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் அது மிகப்பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று விமான நிலைய ஆணையம் பல முறை எச்சரித்துள்ளது.

    பறவைகள் விமானங்களின் மீது மோதுவதை தடுக்க பறவைகளை துரத்துபவர்களை விமானநிலையம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துகிறது. அவர்கள் விமானம் வரும் போது பறவைகளை பயமுறுத்துவதற்கு உரத்த ஒலிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த ஒலிகளுக்கு பறவைகள் பழகிவிட்டதால் அவை அஞ்சுவதில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    பறவைகள் அதிகளவில் வருவதற்கு காரணம் திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் குப்பை குவியல் இருப்பதே காரணம் என்றும், அதனை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் அரசுக்கு ஏறுகனவே கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.

    விமான நிலைய சுற்றுச்சுவர்களுக்கு அருகில் திறந்தவெளிகள் மற்றும் அதன் அருகில் செயல்படும் இறைச்சி கடை கழிவுகள் கொட்டப்படும் கிடங்குகள் ஆகியவையே பறவைகள் இந்த பகுதிக்கு அதிகமாக வருவதற்கு காரணமாக இருக்கின்றன.

    கழுகு, காகம், கொக்கு, புறா, ஆந்தை உள்ளிட்ட பறவைகள் இறைச்சி கழிவுகளை உண்பதற்காக விமான நிலைய பகுதிக்கு வருகின்றன. இவ்வாறு பறவைகள் அதிகளவில் வருவது விமானங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்குகிறது.

    விமான போக்குவரத்து விதிமுறைகளின் படி ஒவ்வொரு பத்தாயிரம் விமானங்களுக்கும் ஒரு பறவை மோதல் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 பறவை மோதல் சம்பவங்கள்நடக்கின்றன.

    இது பல நிலை விசாரணையை தூண்டுவதால், அதனை தவிர்க்க விமானிகள் பெரும்பாலும் பறவை மோதல்களை அதிகாரபூர்வமாக புகாரளிக்க முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விமானத்தின் மீது பறவை மோதல் என்பது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

    மேலும் இதன் காரணமாக விபத்து எதுவும் நடந்தால் பேரழிவுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் குழு கூட்டத்தில் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பறவைகள் மோதினால் விமானத்தின் இயந்திரம் செயலிழந்து தீவிபத்து ஏற்படலாம்.

    மேலும் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகளை சேதப்படுத்தும் என்பதால் விமானம் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். பறவைகள் மோதுவது பயணிகளுக்கு மட்டுமல்ல விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்களுக்கும் ஆபத்தானது. ஆகவே இந்த பிரச்சனையை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அந்த கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழா 23-ந்தேதி நடக்க இருக்கிறது
    • வருடத்திற்கு இரண்டு முறை குறிப்பிட்ட நேரத்தில் விமான சேவை நிறுத்தப்படும்

    இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தில் வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 9 வரை விமான சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழாவை முன்னிட்டு, இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    பாரம்பரிய நிகழ்ச்சியாக அல்பாசி ஆராட்டு விழாவின்போது சாமி சிலை, ஷண்முகம் கடற்கரை கொண்டு செல்லப்பட்டு புனித நீராடல் நடத்தப்படும். விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்படும்.

    விமான நிலையம் 1932-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதற்கு முன்னதாக பல நூற்றாண்டுகள் இந்த வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்பட்டது. இதனால் வருடத்தில் இரண்டு நாட்கள் இந்த வழியாக, சாமி சிலையை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் வருகிற 23-ந்தேதி மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விமான சேவை நிறத்தப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
    • திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. இதில் திருவனந்தபுரம் விமான நிலையம் பயணிகள் வருகை மற்றும் விமான சேவையில் புதிய சாதனையை படைத்துள்ளது.

    கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் (மார்ச்) வரையிலான கால கட்டங்களில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக 4.4 மில்லியன் (44 லட்சம்) பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    இதேபோல் விமான சேவையிலும் சாதனை படைத்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில் 24 ஆயிரத்து 213 விமானங்கள் இயக்கப்பட்டிருந்தன. தற்போது 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

    விமான பயணிகள் சர்வதேச அளவில் ஷார்ஜாவுக்கும், உள்நாட்டில் பெங்களூரூவுக்கும் அதிக அளவில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்க இலாகாவினர் சோதனை செய்தனர்.
    • உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் போன்றவை அடிக்கடி கடத்தி வரப்படுகின்றன. அவற்றை சுங்க இலாகாவினர் அவ்வப்போது மடக்கி பிடித்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவம் தொடர்ந்தே வருகிறது.

    இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்க இலாகாவினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை பரிசோதித்தபோது எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று உடல் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது. அவற்றை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் மற்றொரு பயணியும் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 தங்க பிஸ்கட்டுகள், ஒரு தங்க நாணயம் உள்பட ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • 1932-ல் விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த சடங்கு தொடர்கிறது.
    • ஆண்டுக்கு இரு முறை விமான இயக்கத்தை நிறுத்தி வைத்தும், அட்டவணையை மாற்றியமைத்தும் வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் அருகே அமைந்து உள்ளது. இந்த கோவில் புனித நிகழ்வுக்காக ஆண்டுக்கு 2 முறை இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படுகிறது.

    அதாவது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரும் 'ஐப்பசி ஆறாட்டு' மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வரும் பங்குனி விழாவுக்காக விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    அந்தவகையில் பத்மநாப சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி 'ஐப்பசி ஆறாட்டு' விழா நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து சாமி சிலைகளை சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று அங்கு ஆறாட்டு நிகழ்ச்சி (புனித குளியல்) நடத்தப்படுகிறது.

    இந்த சாமி ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையை கடந்து கடற்கரைக்கு செல்லும். எனவே அதற்காக விமான நிலையத்தில் விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம் ஆகும்.

    அதன்படி இந்த ஆண்டும் வருகிற 9-ந்தேதி 5 மணி நேரம் விமான இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக விமான நிலையம் அறிவித்து உள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விமான இயக்க நிறுத்தம் அமலில் இருக்கும் என கூறியுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பத்மநாப சுவாமி கோவில் ஊர்வலம் கடந்து செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஓடுபாதை ஆண்டுதோறும் 2 முறை மூடப்படுகிறது. சிலைகள் புனித நீராடுவதற்காக சங்குமுகம் கடற்கரையை அடைய தற்போதைய ஓடுபாதையில் ஊர்வலம் செல்லும் நடைமுறை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

    1932-ல் விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த சடங்கு தொடர்கிறது. இதற்காக ஆண்டுக்கு இரு முறை விமான இயக்கத்தை நிறுத்தி வைத்தும், அட்டவணையை மாற்றியமைத்தும் வருகிறது.

    இது இந்த பிராந்தியத்தின் கலாசாரம் மற்றும் மரபுகள் அப்படியே தொடர்வதை உறுதி செய்கிறது.

    இவ்வாறு விமான நிலையத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    முன்னதாக இந்த விமான நிலையம் கட்டப்பட்டபோது, இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 363 நாட்கள் மக்களுக்காகவும், 2 நாட்கள் பத்மநாப சுவாமிக்காகவும் திறந்திருக்கும் என அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் கூறியிருந்தார்.

    அதன்படி இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. மன்னர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறைகள் தற்போது அதானி குழுமம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஏற்றபிறகும் கூட தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இன்று வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கம் பிடிபட்டது.
    திருவனந்தபுரம்:

    வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் வரும் விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



    இதைதொடர்ந்து, ஓமன் நாட்டிலிருந்து இன்று காலை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் வெகு துல்லியமாக சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணியின் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்திவந்த நபரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    ×