search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அக்டோபர் 23-ந்தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தை பயன்படுத்த இருக்கிறீர்களா?
    X

    கோப்புப்படம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அக்டோபர் 23-ந்தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தை பயன்படுத்த இருக்கிறீர்களா?

    • ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழா 23-ந்தேதி நடக்க இருக்கிறது
    • வருடத்திற்கு இரண்டு முறை குறிப்பிட்ட நேரத்தில் விமான சேவை நிறுத்தப்படும்

    இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தில் வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 9 வரை விமான சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழாவை முன்னிட்டு, இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    பாரம்பரிய நிகழ்ச்சியாக அல்பாசி ஆராட்டு விழாவின்போது சாமி சிலை, ஷண்முகம் கடற்கரை கொண்டு செல்லப்பட்டு புனித நீராடல் நடத்தப்படும். விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்படும்.

    விமான நிலையம் 1932-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதற்கு முன்னதாக பல நூற்றாண்டுகள் இந்த வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்பட்டது. இதனால் வருடத்தில் இரண்டு நாட்கள் இந்த வழியாக, சாமி சிலையை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் வருகிற 23-ந்தேதி மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விமான சேவை நிறத்தப்படுகிறது.

    Next Story
    ×