search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perumitham"

    • தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க. என்று ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் கொண்டார்.
    • தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத கார ணத்தால் மக்கள் மிகப் பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அரசம்பட்டி, வலையங்கு ளம், வீரபெருமாள்குளம் சின்ன உலகாணி, பெரிய உலகாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதய குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத் தலைவர் .முருகன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல் வன், மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி.கருப்பையா, கே.மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 3லட்சத்திற்கு மேற்பட்ட கழக உறுப்பினர் களை சேர்த்து சாதனை படைத்துள்ளோம். இன்றைக்கு அ.தி.மு.க.வில் 2 கோடியே 88 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி உள்ளார்.

    ஒவ்வொரு பூத்துகளில் பாசறையில் 50 நபர்களும், மகளிர் அணியில் 50 நபர்க ளையும் சேர்க்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பூத்துகளுக்கும் 19 நபர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் கழகத்தில் 5 நபர்க ளும், மகளிர் அணி பாசறை அணியில் தலா 5 நபர்களும், தகவல் தொழில்நுட்ப பிரி வில் 2 நபர்களும் தேர்ந் தெடுக்கப்பட உள்ளனர்.

    கொரோனா காலத்தில் கூட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தடை படுத்தாமல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றினார் என மக்கள் கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் காலகட்டத்தில் தி.மு.க. கூறிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்பதை செய்யவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத கார ணத்தால் மக்கள் மிகப் பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மகளிருக்கான இலவச பஸ் பயணம், உயர்கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன.
    • நஞ்சநாடு மற்றும் இளித்தொரை ஆகிய 2 இடங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    ஊட்டி,

    ஊட்டி ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு கிராம சமுதாய கூடத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா, மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1598 பெண்களுக்கு பணம் எடுக்கும் அட்டை மற்றும் தகவல் கையேடுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண் டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மகளிருக்கான இலவச பஸ் பயணம், உயர்கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன.

    மேலும் பெண்களுக்காக நடப்பு பட்ஜெட்டில் வெளி யான மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு, நாடெங்கும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்பெல்லாம் பெண்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். அவர்களுக்கு கல்வி அறிவு மறுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஆணுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப் பட்டு உள்ளது.

    ஒரு ஆணின் வெற்றிக் கும், குழந்தைகளின் கல்விக்காகவும், குடும் பத்திற்காகவும் தன்னலம் கருதாமல், உடல் நலம் பாராமல் பெண்கள் உழை த்து வருகின்றனர். இப்படி கணக்கில் அடங்காத அளவில் வேலை பார்க்கும் பெண்களின் உழைப்பினை அங்கீகரிக்கும் விதமாக "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இது சாதாரணமான திட்டம் அல்ல என்பதால் தமிழ்நாடு முதல்-அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று தொடங்கி வைத்துஉள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை தொடங்கி வைக்க உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் நஞ்சநாடு மற்றும் இளித்தொரை ஆகிய 2 இடங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாம கேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சி கள்) சாம்சாந்தகுமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன்,வட்டாட்சியர் சரவணன்குமார், நகர மன்ற தலைவர் வாணிஸ் வரி, நஞ்சநாடு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா, ஊட்டி நகர செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×