என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பெண் ஊழியருக்கு சாதிய வன்கொடுமை
- புதுக்கோட்டையில் பட்டியலின அரசு பெண் ஊழியருக்கு சாதிய வன்கொடுமை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
- இளமுருகு முத்து கண்டனம்
புதுக்கோட்டை,
அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது,இந்த சூழலில் காவல்துறை நடவடிக்கையை துரித படுத்தாமல் மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.கடந்த அக்டோபர் மாதம் 20 -ந் தேதி புதுக்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தில் பணியாற்றும் சுகந்தி என்ற பட்டியலின அரசு ஊழியரை அதே அலுவலகத்தில் பணியாற்றும் ஆதிக்க சமுகத்தை சேர்ந்த நபர் அவருடைய ஜாதியை சொல்லி அருவருக்க தக்க வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.இதனால் மன உழைச்சளுக்கு ஆளான சுகந்தி புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திலும் மேலும் புதுக்கோட்டை துணை காக்காணிப்பாளரை நேரில் சந்தித்தும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் மனு அளித்துள்ளார்.இது நடந்து ஒரு மாத காலமாகியும் காவல் துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேங்கை வயல் சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும் இன்னும் ஒரு குற்றவாளிகள் கூட கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவங்களில் காவல் துறை பாரமுகம் காட்டுவது வேதனை அளிக்கிறது.இந்த விஷயத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை கையில் எடுக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்