என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயமான பெண் ஆற்றங்கரையில் பிணமாக மீட்பு
- சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவில்லை.
- சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர்.
இவரது மனைவி கோமதி (வயது 45).
இந்த நிலையில் தீபாவளியன்று கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது குடித்து விட்டு குண்டையூர் செல்லும் பாலம் அருகே தூங்கியதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவி ல்லை. பல இடங்களில் தேடி பார்த்து ம் கண்டுபிடிக்க முடியவி ல்லை.
இந்த நிலையில் சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று கோமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுக் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






