என் மலர்
நீங்கள் தேடியது "பிரியங்கா சதுர்வேதி"
- அவர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்கும் கோழைகள்.
- 'விளையாட்டிலிருந்து அரசியலை விலக்கி வைக்க வேண்டும்' என்பது அரசை ஆதரிப்பவர்கள் எளிதில் பயன்படுத்தும் சொற்றொடர்.
நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) எடுத்த நடவடிக்கையும் இந்தியாவில் பேசுபொருளாகி உள்ளது.
நவம்பர் மாதம் பாகிஸ்தானுடனான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட போதும் இந்திய அணி துபாயில் பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடியிருந்தது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனா அணி மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ஆபிகானிஸ்தானிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்திய அரசும் விளையாட்டை விட நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாகிஸ்தான் அப்பாவிகளின் இரத்தத்தை குடித்து வளர்ந்து வருகிறது. அவர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்கும் கோழைகள். பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்ய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு சிறப்பானது. பிசிசிஐ மற்றும் இந்திய அரசு விளையாட்டுகளை விட நாட்டை முன்னுரிமைப்படுத்துவது குறித்து அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்தார்.
மற்றொரு பதிவில், பிரியங்கா சதுர்வேதி, ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒற்றுமையாக இலங்கை அணியும் தொடரிலிருந்து விலகும் என்று நம்புகிறேன். 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. பிசிசிஐ போலல்லாமல், மற்ற ஆசிய நாட்டு கிரிக்கட் வாரியங்கள் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் நிற்கும் என்று நம்புகிறேன்.
எனது கருத்துக்கள் அரசியலைப் பற்றியது அல்ல, இழந்த உயிர்களைப் பற்றியது. 'விளையாட்டிலிருந்து அரசியலை விலக்கி வைக்க வேண்டும்' என்பது அரசாங்கத்தையும் பிசிசிஐயையும் ஆதரிப்பவர்கள் எளிதில் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர். ஆனால் அரசியலை விலக்கி வைப்பது பற்றியது அல்ல, பயங்கரவாதத்தை விலக்கி வைப்பது பற்றியது" என்று சுட்டிக்காட்டினார்.
- ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசினார்.
ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு மற்றும் மறுசீரமைப்பு (திருத்தம்) 2023 மசோதாக்கள் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா "ஜம்முவில் 37 இடங்கள் இருந்தன. தற்போது 43 இடங்களாக அதிகரித்துள்ளன. முன்னதாக காஷ்மீரில் 46 இடங்கள் இருந்தன. தற்போது 47 இடங்களாக அதிகரித்துள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது என்பதால் 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன" எனக் கூறியதாக செய்திகள் வெளியானது.
இதற்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும். அவர்களை யார் தடுத்து வைத்துள்ளார்கள்?. நம்முடைய ராணுவம் பலம் வாய்ந்தது. பாகிஸ்தான் சூழ்நிலை தற்போது பலவீனமாக உள்ளது. தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற வேண்டும். அதன்பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் நிலவ அனுமதிக்க வேண்டும்" என்றார்.
- இந்தியா கூட்டணியில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் நிலவும்.
- பா.ஜனதா கூட்டணியில் பிரதமர், அமித் ஷா முன் எதுவும் பேச முடியாது.
உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் எம்.பி.யான பிரியங்கா திரிவேதி, பா.ஜனதாவின் கூட்டணி கட்டாயப் படுத்தப்பட்ட மற்றும் சரணடைந்த கூட்டணி என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா சதுர்வேதி கூறுகையில் "அவர்களுடைய கூட்டணி (பா.ஜனதா உடைய) கட்டாயப் படுத்தப்பட்ட கூட்டணி. ஏனென்றால் கொடுங்கோன்மையை ஆதரித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என எல்லோருக்கும் தெரியும். அவர்கள் (பா.ஜனதா) நாடு, ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றை புறந்தள்ளியுள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா முன்னிலையில், அவர்களால் ஏதும் பேச முடியாது. எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க முடியாது. அவர்களுடைய எந்த திட்டத்தையும் முன்வைக்க முடியாது என்று அவர்களுக்கு தெரியும். இதுதான் சரணடைந்த கூட்டணி.
இந்தியா கூட்டணி 26 கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி. அங்கே பல்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், இதுதான் ஜனநாயத்தின் அழகு. பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும். முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு, நாட்டின் அரசியலமைப்புக்காக, மக்களுக்காக மிகவும் வலிமையாக போராடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.






