என் மலர்tooltip icon

    இந்தியா

    நாட்டின் முதல் புல்லட் ரெயில் எப்போது இயக்கப்படும்?: மத்திய மந்திரி பேச்சு
    X

    நாட்டின் முதல் புல்லட் ரெயில் எப்போது இயக்கப்படும்?: மத்திய மந்திரி பேச்சு

    • புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார்.
    • இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    அகமதாபாத்:

    மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே அதிவேகம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இவ்விரு நகரங்களுக்கு இடையேயான 508 கி.மீ. தூரத்திற்கு 12 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி.

    இந்நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரெயில் எப்போது இயக்கப்படும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் கண்பத் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கருத்தரங்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

    புல்லட் ரெயில் திட்டத்திற்கான அனைத்துப் பணிகளும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். குஜராத்தில் அதன் பணிகள் திறம்பட நடைபெற்று வருகின்றன.

    ரெயில் தண்டவாள பாதைகள் அமைப்பது, மின்சார வினியோகம் என அனைத்துப் பணிகளும் துரித வேகத்தில் நடக்கிறது.

    சமீபத்தில் ஜப்பான் மந்திரி நகானோ குஜராத்திற்கு வந்திருந்தார். இந்தத் திட்டத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆகஸ்ட், 2027-ம் ஆண்டு புல்லட் ரெயில் சேவையை தொடங்க வேண்டும். மக்கள் சேவைக்கு அதை அளிக்க வேண்டும் என்பது எங்களின் இலக்காக இருக்கிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×