search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur Railway Station"

    • கழுத்து அறுக்கப்பட்டதில் அமுதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • ரகளையில் ஈடுபட்டு அமுதாவின் கழுத்தை அறுத்து தப்பிய வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை சேர்ந்தவர் அமுதா(43). பூவியாபாரி. இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், பொம்மை நாயக்கன்பாளையம் ஆகும். இவர் திருவள்ளூர் ரெயில் நிலையம் மற்றும் ரெயிலில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அமுதா பூ வியாபாரம் முடித்து வீட்டு திரும்பினார். அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உறவுக்காரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் நடைமேடை 4-ல் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென அமுதாவிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை அமுதா கண்டித்து தன்னிடம் பூ அறுக்க வைத்திருந்த கத்தியை காட்டி எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் திடீரென அந்த கத்தியை பறித்து அமுதாவின் கழுத்தை அறுத்தார். மேலும் அவரது கை, மற்றும் இடுப்பில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கழுத்து அறுக்கப்பட்டதில் அமுதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ரகளையில் ஈடுபட்டு அமுதாவின் கழுத்தை அறுத்து தப்பிய வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவரை பிடிக்க போலுசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் நிலையத்தில் பெண்பூவியாபாரியின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    ×