என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Firefighter"

    • கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகத் தீ வேகமாகப் பரவி உள்ளது.
    • 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிஸியான எம்.ஏ.ஜின்னா சாலையில் 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.

    இங்கு நேற்று 10:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்த நிலையில், இன்று மதியம் வரை மீட்புப் பணிகள் தொடர்ந்தன.

    இந்த விபத்தில் இதுவரை 1 தீயணைப்பு வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

    மேலும் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

    கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகத் தீ வேகமாகப் பரவி உள்ளது.

    சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

    • மரத்தினை கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • அவரின் 2 கால்களிலும் 4 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் டிரைவராக பணிபுரிபவர் குமார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவையில் பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்தது. புதுவையில் சுமார் 100-டன் மரக்கழிவுகள் வெட்டி அகற்றப்பட்டது.

    இந்த பணியில் புதுவை உள்ளாட்சி, தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக பணியாற்றினர்.

    புதுவை ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியிலிருந்த பெரிய மரம் சாய்ந்து பின்பக்கம் சுப்பையா நகரில் உள்ள குடியிருப்பில் வீடுகளின் மேல் விழுந்தது. இந்த மரத்தினை கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்களுக்கு துணையாக தீயணைப்பு வாகன டிரைவர் குமாரும் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பெரிய மரக்கிளை அவரின் மீது விழுந்தது.

    இதில் குமார் படுகாய மடைந்தார். உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்தில் அவரின் 2 கால்களிலும் 4 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை அரசு தலைமை ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கேள்விப்பட்ட அமைச்சர் சாய் சரவணக்குமார், அங்காளன் எம்.எல்.ஏ., அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அவர் குணமடைய பல மாதம் ஆகும் என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    படுகாயமடைந்த குமார் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    ×