search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul Accident"

    • நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் கோழிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    வடமதுரை:

    திருச்சியை சேர்ந்த பிலால்முகமது மகன் ராஜா (வயது25). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். இவர் திருச்சியில் இருந்து வத்தலக்குண்டுவிற்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அவருடன் லோடுமேன்களாக திருச்சியை சேர்ந்த சபீர்முகமது (20), திருவெறும்பூரை சேர்ந்த லோகநாதன் ஆகியோரும் வந்தனர்.

    திண்டுக்கல்-திருச்சி ரோடு மூணாண்டிபட்டி அருகே இன்று காலை வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பின்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோழிகளும் உடல் நசுங்கி பலியானது. அப்போது நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் கோழிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.
    • விபத்து குறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்(28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது திண்டுக்கல் திரும்பினார். இவரது நண்பர் செட்டிநாயக்கன்பட்டி கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலசந்தர்(41). இவர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்தார். 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    வேடசந்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டீசல் நிரப்பிக்கொண்டு அரசு பஸ் வெளியே வந்தது. அப்போது பைக்கில் வந்தவர்கள் அதனை கவனிக்காமல் சென்றதால் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.

    ராஜேஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாலசந்தரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறிதுநேரத்திலேயே பாலசந்தரும் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் மகுடீஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் சோகம் நிலவியது.

    திண்டுக்கல் அருகே கொசவபட்டி உத்திரிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருளானந்த்(48). பால்வியாபாரி. இவர் கொசவபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.
    • பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    விருதுநகர் அருகே உள்ள சத்திரப்பட்டி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 45). இவர் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.

    நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது பக்தர்கள் கூட்டத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் புகுந்தது. இதில் அவர்கள் அனைவரும் சிதறி ஓடினர். ரெங்கராஜன் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரெங்கராஜன் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.

    இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பக்தர்கள் ஆபத்தான முறையில் பாத யாத்திரை செல்கின்றனர். போலீசார் இது போன்ற விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு ரோடு வீரசிக்கம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.
    • பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சுக்குள் லாரி புகுந்தது. இதில் பஸ்சில பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

    செம்பட்டி:

    சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ், சுமார் 40 பயணிகளுடன் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை கம்பம் அனுமந்தபட்டியைச் சேர்ந்த டிரைவர் மணி என்பவர் ஓட்டி வந்தார். அதேபோல், வத்தலகுண்டுவில் இருந்து லாரியில் செங்கல்களை ஏற்றி கொண்டு, தென்காசி அருகே இடைகால் பகுதியை சேர்ந்த டிரைவர் மாடசாமி (47) என்பவர் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த வத்தலகுண்டு ரோடு வீரசிக்கம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே லாரியும், ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சுக்குள் லாரி புகுந்தது. இதில் பஸ்சில பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி லாரி டிரைவர் மாடசாமி படுகாயமடைந்தார். சுமார் 1 மணநேரத்திற்கும் மேலாக போராடி அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பஸ்சில் பயணம் செய்த தேனி, பெரியகுளம், கம்பம் பகுதிகளை சேர்ந்த டிரைவர்கள் மணி, சிவக்குமார், ரபீக், கிறிஸ்டோபர், சண்முகவள்ளி, சுரேந்திரன், பரமசிவன், முத்துமணி உள்பட 10 பேர் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சொக்கலிங்கபுரம், சித்தையன்கோட்டை வழியாக மாற்றுவழியில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

    திண்டுக்கல் அருகே மினி வேன் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    திண்டுக்கல்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அன்னமார்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி செல்லாயி. (வயது 45). இவரது மகள் பிரியா, சடச்சிபட்டியைச் சேர்ந்த பெரியாண்டி ஆகிய 4 பேரும் திருப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

    தற்போது அங்கு தொடர்மழை பெய்து வருவதால் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என நினைத்து தங்கள் உடைமைகளை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தும்மலக்குண்டுவைச் சேர்ந்த கோட்டைச்சாமி (31) என்பவர் வேனை ஓட்டி வந்தார். இந்த வேன் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள வீரசிக்கம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி பயங்கரமாக வேன் மீது மோதியது. இதில் கோட்டைச்சாமி மற்றும் செல்லாயி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    பிரியா மற்றும் பெரியபாண்டி ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் செம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்தவர்கள் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் இன்று அதிகாலை நின்ற லாரி மீது வேன் மோதி விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நரியூத்து காலத்துகோட்டம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் நிர்மல் (வயது32) சரக்கு வாகன டிரைவர்.

    இன்று அதிகாலை இவர் சரக்கு வாகனத்தில் திண்டுக்கல்லை அடுத்த பித்தளைபட்டி பகுதிக்கு தென்னைநார் லோடு ஏற்ற வந்தார். லோடு ஏற்றியதும் ஊருக்கு திரும்பினார். திண்டுக்கல் ரெயில்வே பாலம் இறக்கத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற லாரி மீது வாகனம் மோதியது.

    இதில் வாகனத்தின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் டேவிட் நிர்மல் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லாரி மீது மோதிய வாகனத்தை மீட்க தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் போராடி வாகனத்தையும், டேவிட் நிர்மல் உடலையும் மீட்டனர்.

    பின்னர் டேவிட்நிர்மல் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பலியான டேவிட் நிர்மலுக்கு திருணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் ரெயில்வே பாலம் மிகவும் குறுகலாகவே அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் நத்தம், சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள், வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப்பகுதி மக்கள் வர்த்தக ரீதியாக பொருட்கள் வாங்க இந்த பாதையில்தான் திண்டுக்கல்லுக்கு வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதியில் இருந்து கருவேல மரங்கள் லோடு ஏற்றி செல்லும் லாரிகளும், ரெயில் நிலையத்தில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் கொண்டு செல்லும் லாரிகளும் இந்த பகுதி வழியாகத்தான் செல்கின்றன.

    சில நேரங்களில் இந்த லாரிகளை டிரைவர்கள் சாலை ஓரமாக நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் சாலையோரம் லாரிகளை நிறுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதையும் மீறி லாரிகள் நிறுத்தப்படுவதால் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு இளம்பெண் பலியானார். இறந்தவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள மொட்டணம்பட்டி ரெயில்வே கேட் தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை. சுடிதார் அணிந்திருந்தார். திருமணம் ஆகாதவர் போல் இருந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே ஆள் இல்லா கேட்டை கடந்த ஜே.சி.பி. வாகனம் மீது ரெயில் மோதியது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சத்திரப்பட்டி:

    திருவனந்தபுரத்தில் இருந்து பழனி வழியாக அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் இன்று காலை திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி மாட்டுப்பாதை என்ற இடத்தில் வந்தது. இந்த இடத்தில் ஆள் இல்லா கேட் உள்ளது. இதனை ஜே.சி.பி. வாகனம் கடக்க முயன்றது. சத்திரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஹரீஸ் அந்த வாகனத்தை ஓட்டினார். அவருடன் அதேபகுதியை சேர்ந்த ராஜ் என்பவரும் வந்தார்.

    இவர்கள் காதுகளில் ஹெட்செட் அணிந்து பாட்டு கேட்டபடி வந்தனர். இதனால் ரெயில்வரும் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை.

    கண்ணிமைக்கும் நேரத்தில் ஜே.சி.பி. வாகனம் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஜே.சி.பி. வாகனம் அருகில் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதனை ஓட்டிவந்த ஹரீஸ், ராஜ் ஆகிய 2 பேரும் ஜே.சி.பி. வாகனத்தில் சிக்கி அலறினர்.

    சத்தம் கேட்டு உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு வந்தனர். அவர்கள் விபத்தில்சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 10 நிமிடம் தாமதத்துக்கு பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.
    திண்டுக்கல் அருகே இன்று மினிபஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள குட்டியபட்டியில் இருந்து அனுமந்தராயன் கோட்டைக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை அந்த பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. பஸ்சை தர்மத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் தங்கவேல் (வயது25) என்பவர் ஓட்டி வந்தார். கருப்பையா என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    கொட்டப்பட்டி அருகே பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர்.

    படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் வழியிலேயே பொன் மாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த இன்னாசி மகன் மார்க்ராஜா (19) என்பவர் உயிரிழந்தார். இவர் திருஇருதய கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த விபத்தில் அபிநயா (13), பிரியதர்ஷினி (17), செல்லாயி (42), தங்கத்துரை (59), மைதிலி (15), ராமசாமி (32), செல்வி (40), சவுந்தர் (20), தமிழ்ச்செல்வன் (14), பிரகாஷ் (16), சுவேதா (17), ஜெயந்தி (20) உள்பட 25 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகள் ஆவார்கள். இதனால் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு டிரைவர் தங்கவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×