search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திண்டுக்கல் அருகே மினி வேன் மீது லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி

    திண்டுக்கல் அருகே மினி வேன் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    திண்டுக்கல்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அன்னமார்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி செல்லாயி. (வயது 45). இவரது மகள் பிரியா, சடச்சிபட்டியைச் சேர்ந்த பெரியாண்டி ஆகிய 4 பேரும் திருப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

    தற்போது அங்கு தொடர்மழை பெய்து வருவதால் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என நினைத்து தங்கள் உடைமைகளை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தும்மலக்குண்டுவைச் சேர்ந்த கோட்டைச்சாமி (31) என்பவர் வேனை ஓட்டி வந்தார். இந்த வேன் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள வீரசிக்கம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி பயங்கரமாக வேன் மீது மோதியது. இதில் கோட்டைச்சாமி மற்றும் செல்லாயி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    பிரியா மற்றும் பெரியபாண்டி ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் செம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்தவர்கள் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×