search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman dies"

    • கமலநாதன். இவரது மனைவி சுலோச்சனா (28). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள கோராத்துப்பட்டி சத்யா காலனி பகுதியை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மனைவி சுலோச்சனா (28). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சுலோச்சனா வீட்டில் இருந்த மண் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த சுலோச்சனாவை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த சோழிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி அமுதா (வயது36). கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் சோழவரம் மார்க்கெட் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றனர். இதில் மோட்டார் சைக்கிள் மீது லாரி உரசியதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா கணவர் கண்முன்பே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து கணவர் முருகன் கதறி துடித்தார். அவரும் மோட்டார் சைக்கிளோடு விழுந்ததில் காயம் அடைந்தார். அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
    • திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கீர்த்தனா (வயது30).

    இவர் துணி துவைத்து விட்டு அதனை வீட்டின் வெளியே காய வைத்தார். அருகில் இருந்த கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

    இதுபற்றி அறிந்ததும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதித்தனர். ஆனால் கீர்த்தனா ஏற்கனவே மின்சாரம் தாக்கியதில் இறந்து இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செய்துங்கநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் மதன் (வயது 30). இவர் தனது மனைவின் தங்கையான மேகலா (18) என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திருநகரியில் இருந்து சாம்பவர் வடகரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பாளை கிருஷ்ணாபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகில் வந்த போது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து அம்பை வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மேகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் உள்ளிட்ட போலீசார் படுகாயமடைந்த மதனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பலியான மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வேன் டிரைவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த 1 மாதத்தில் சுமார் 3 விபத்து நடந்துள்ளது. எனவே இவ்விடத்தில் பயணிகள் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கோவை கணபதி டெக்ஸ்டூல்ஸ் பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கணபதி டெக்ஸ்டூல்ஸ் பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று ரெயிலில் அடிபட்டு இறந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிப்பட்டு இறந்த இளம்பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு இளம்பெண் பலியானார். இறந்தவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள மொட்டணம்பட்டி ரெயில்வே கேட் தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை. சுடிதார் அணிந்திருந்தார். திருமணம் ஆகாதவர் போல் இருந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம் மாவட்டம் ஆத்தூரில் பிரசவத்தின் போது இளம்பெண் திடீரென்று உயிரிழந்ததை கண்டித்து மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உப்புவாடை பகுதியை சேர்ந்தவர் மாது. கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்சவள்ளி (வயது 28). இவர் ஆத்தூர் ராணிப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.

    இந்த நிலையில் அம்சவள்ளி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். இதனால் அவர் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று பரிசோதித்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா? என கேட்டறிந்து வந்தார். டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் தேவையான ஊட்டச்சத்துக்களும் எடுத்து வந்தார்.

    இந்த நிலையில் அம்சவள்ளிக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. காலை 9 மணிக்கு அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உறவினர்கள் அழைத்து சென்று ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து வலியால் அலறி துடித்தார். இரவு 11 மணி அளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அம்சவள்ளிக்கு ரத்தபோக்கு அதிகம் ஏற்பட்டு, மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த கணவர் மற்றும் உறவினர்கள் பதறியபடி ஆஸ்பத்திரியில் இருந்த நர்சுகளிடம் அம்சவள்ளிக்கு ரத்தபோக்கு அதிகமாகி மயங்கி கிடக்கிறார். எனவே அவருக்கு உடனடியாக சிகிச்சை அளியுங்கள் என்று தெரிவித்தனர்.

    ஆனால், பணியில் இருந்த அந்த நர்சுகள், அலட்சியமாக எங்களுக்கு எல்லாம் தெரியும். இங்கு கூட்டம் கூடக்கூடாது. நீங்கள் அனைவரும் இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறி வெளியே அனுப்பினர்.

    இதனால் ஆஸ்பத்திரி வெளியே வரண்டா பகுதியில் கணவரும் மற்றும் அம்சவள்ளியின் பெற்றோரும், உறவினர்களும் சோகத்துடன் இருந்தனர்.

    இந்த நிலையில் அம்சவள்ளியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை அறிந்ததும் அதிகாலை 3 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அம்சவள்ளியை ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள், அவரை பரிசோதித்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இது குறித்து டாக்டர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அம்சவள்ளி ஏற்கனவே இறந்து விட்டார். எனவே அவரது உடலை உங்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறி சேலத்தில் இருந்து இலவச அமரர் ஊர்தி வாகனத்தில் அம்சவள்ளி உடல் ஆத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையறிந்த கணவர் மாது மற்றும் பெற்றோர் கதறி அழுதனர். ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு வாகனம் வந்ததும், அதன் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முடியாமல் பிணத்துடன் அமரர் ஊர்தி வாகனம் அங்கேயே நின்றது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாது கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனது மனைவி சாவுக்கு பணியில் இருந்த டாக்டர்களும், ஊழியர்களும் தான் காரணம். அவர்களது அலட்சிய போக்கினால் தான் எனது மனைவி இறந்துள்ளார். உடனடியாக கவனித்து, உரிய சிகிச்சை அளித்திருந்தால், காப்பாற்றப்பட்டு இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார், விசாரணை நடத்தி யார் மீது தவறு உள்ளதோ? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இருப்பினும் தொடர்ந்து பிணத்துடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஓட்டல் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பலியானார்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நியூ திருப்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது.

    இந்த நிறுவனத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி (22), சுனிதா (24) விழுப்புரம் மாவட்டம் டி. குன்னத்தூரை சேர்ந்த ரம்யா (19), உளுந்தூர்பேட்டை பிரியா ஆகிய 4 பேரும் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 பேரும் அவினாசி வந்தனர். அங்கு கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள்.

    பின்னர் அவினாசி பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில் உள்ள அமிர்தம் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அந்த ஓட்டலின் முகப்பு பகுதி மேற்கூரை இரும்பு ஷெட்டால் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த மேற்கூரையின் கீழ் சரஸ்வதி, சுனிதா, ரம்யா, பிரியா ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டலின் மேற்கூரை ஷெட் மொத்தமாக இடிந்து விழுந்தது.

    இதில் 4 பேரும் சிக்கி கொண்டனர். அவர்கள் அலறினார்கள். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து மேற்கூரை ஷெட்டை தூக்கி காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் முடியவில்லை. இதனை தொடர்ந்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மேற்கூரையை அப்புறப்படுத்தினார்கள்.

    ஆனால் சரஸ்வதி இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகி இருந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலத்த காயம் அடைந்த சுனிதா, ரம்யா, பிரியா ஆகியோர் மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இளம்பெண் ரம்யா இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    பல்லடத்தில் நேற்று முன்தினம் இரவு பஸ்நிலைய கழிவறை ஷெட் இடிந்து கொத்தனார் பலியான சம்பவம் நடைபெற்றது. தற்போது மேலும் 2 பெண்கள் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×