என் மலர்
நீங்கள் தேடியது "இளம் பெண் சாவு"
- வயிற்று வலி அதிகமானதால் செடியை பதபடுத்த பயன்படுத்தும் மாத்திரையை வயிற்று வலி மாத்திரை என நினைத்து சாப்பிட்டார்.
- சிகிச்சை பலனின்றி பிரவீனா உயிரிழ்ந்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியனஅள்ளி கிராமத்தில் உள்ள அம்பேத்கார் காலணியில் வசித்து வந்தவர் பிரவீனா (25). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியது. இவரது கனவர் சக்திவேல் 4 ஆண்டுகளுக்கு முன்னர் வாகன விபத்தில் இறந்து விட்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பிரவீனா உடல் நல பிரச்சனையால் அவதிபட்டு வந்தார், இந்நிலையில் நேற்று காலை வயிற்று வலி அதிகமானதால் செடியை பதபடுத்த பயன்படுத்தும் மாத்திரையை வயிற்று வலி மாத்திரை என நினைத்து சாப்பிட்டார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்ததால் குடும்பத்தார் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழ்ந்தார். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கமலநாதன். இவரது மனைவி சுலோச்சனா (28). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது.
- இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள கோராத்துப்பட்டி சத்யா காலனி பகுதியை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மனைவி சுலோச்சனா (28). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சுலோச்சனா வீட்டில் இருந்த மண் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த சுலோச்சனாவை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.






