search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli Accident"

    • வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது.
    • லாரியில் கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் சாலைகளில் உருண்டு ஓடின.

    நெல்லை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஈரோட்டில் இருந்து லாரியில் தேங்காய் ஏற்றிக் கொண்டு வந்து நெல்லையில் இறக்கிவிட்டு செல்வது வழக்கம்.

    அதன்படி நேற்றிரவு ஈரோட்டில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு அவர் புறப்பட்டார். இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலையில் போலீஸ் சோதனை சாவடி அருகே லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்குள்ள வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தங்கராஜ் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    நடு சாலையில் லாரி கவிழ்ந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டன. இதில் லாரியில் கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் சாலைகளில் உருண்டு ஓடின.

    இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலையின் நடுவே கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
    • விபத்து குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ரமேஷ் (வயது 30). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு காரில் பாபநாசத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

    பின்னர் நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர். காரை ரமேஷ் ஓட்டி வந்துள்ளார்.

    பாபநாசத்தை அடுத்த வடமலை சமுத்திரம் பகுதியில் இருந்து கருத்தப்பிள்ளையூர் கிராமம் வழியாக அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்தது.

    தொடர்ந்து அந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் 2 ஆக உடைந்தது. அதன் பின்னரும் கட்டுக்குள் வராத அந்த கார் அடுத்ததாக இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் ஜான் பால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
    • விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஜெருசலேம் தர்மா நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் ஜான் பால் (வயது 37). இவரது மனைவி கனிஷ்கா.

    ஜான்பால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4-ந்தேதி நெல்லையில் இருந்து இவர், மோட்டார் சைக்கிளில் மணிமுத்தாறுக்கு சென்று கொண்டிருந்தார். முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஒருவர் வந்ததால் திடீரென ஜான்பால் பிரேக் பிடித்துள்ளார்.

    இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் ஜான் பால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜான்பால் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஜான்பால் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கிருந்து அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பொருத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை டீன் ரேவதி தலைமையில் மருத்துவமனை டாக்டர்கள் செய்து வருகின்றனர்.

    • கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் இடது புறத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடை கோட்டார் பகுதியை சேர்ந்தவர் காதர் (வயது44). இவரது மனைவி பவினா (42). இவர்களுக்கு அப்ரா (21) என்ற மகளும், அப்துல்லாகான் (19) என்ற மகனும் உள்ளனர்.

    இவர்கள் குடும்பத்துடன் நேற்று நெல்லைக்கு காரில் வந்திருந்தனர். பின்னர் இரவில் மீண்டும் அவர்கள் 4 பேரும் காரில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். காரை அப்துல்லாகான் ஓட்டிச்சென்றார். நள்ளிரவு நேரத்தில் நாங்குநேரி டோல்கேட்டை கடந்து தனியார் உணவகம் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் இடது புறத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் சென்ற வேகத்தில் கவிழ்ந்து பின்னர் நேராக மாறியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் 4 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் காதர் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், பவினா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதையடுத்து அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பவினாவின் குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே பவினா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரின் உடலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • விபத்து தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சேதுராயர்புரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி(வயது 34). இவரது உறவினர் களக்காடு அருகே சிதம்பரபுரத்தை சேர்ந்த ரகுவரன்(26).

    கட்டிட தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை நாங்குநேரியில் இருந்து நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை ரகுவரன் ஓட்டிச் சென்றுள்ளார். மந்திரமூர்த்தி பின்னர் அமர்ந்திருந்தார்.

    நாங்குநேரியை கடந்து நான்குவழிச்சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரகுவரன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுதொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுவரன் மற்றும் பலியான மந்திர மூர்த்தி ஆகியோரை ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் ரகுவரன் பரிதாபமாக இறந்தார்.

    தொடர்ந்து 2 பேரின் உடலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் உள்ளது. இந்த ஆம்புலன்சை ஆலங்குளத்தை சேர்ந்த அன்னராஜ்(வயது 29) என்பவர் ஓட்டி வருகிறார்.

    இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் நோயாளியை கொண்டு சென்று இறக்கிவிட்டு மீண்டும் இன்று அதிகாலையில் முக்கூடலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது திடீரென அதன் ஆக்சில் துண்டானது.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த சுத்தமல்லி கோமதிநகரை சேர்ந்த சுப்பிரமணியன்(62) என்பவர் மீது மோதி அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    நெல்லையில் இன்று அதிகாலையில் நான்கு வழி சாலையில் தடுப்பு சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் வேளாண் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லை:

    குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் குருசடி தெற்கு தெருவை சேர்ந்தவர் லூர்து ராயப்பன் (வயது 51). இவருக்கு லீமா என்ற மனைவியும், ஜாய்ஸ் ஏஞ்சல் என்ற மகளும் உள்ளனர்.

    லூர்து ராயப்பன் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்ததால் அங்கு மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் நாகர்கோவில் பகுதியில் நடந்த உறவினர் வீட்டு விழாவிற்காக லீமா தனது மகளுடன் வந்துள்ளார்.

    அவர்களை புதுக்கோட்டைக்கு அழைத்து செல்வதற்காக லூர்து ராயப்பன் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சிங்கராயர் மகன் விமல் (26) என்பவரது காரில் அகஸ்தீஸ்வரத்திற்கு சென்றுள்ளார்.

    இன்று அதிகாலை நெல்லை ரெட்டியார்பட்டி 4 சாலையில் வந்தபோது கார் எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் லூர்து ராயப்பன் மற்றும் விமல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனைப் பார்த்தவர்கள் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே லூர்து ராயப்பன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 4 பெண்கள் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி பிரேமா(வயது 48).

    இவர் நேற்று இரவு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு காற்று வாங்குவதற்காக வெளியே வந்தார். அப்போது அதே தெருவில் வசித்து வரும் கல்யாணி, காளீஸ்வரி, ஜோதி ஆகிய 3 பெண்களும் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

    உடனே பிரேமாவும் அங்கு சென்றார். பின்னர் 4 பேரும் முடவன்குளம்-சீலாத்திகுளம் ரோட்டின் ஓரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த வழியாக ராதாபுரம் அருகே உள்ள மகேந்திரபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ, சாலையோரத்தில் அமர்ந்திருந்த பிரேமா உள்பட 4 பெண்கள் மீதும் மோதியது. இதில் பிரேமா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த ராதாபுரம் போலீசார் 3 பேரையும் மீட்டு நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்த பிரேமா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து டிரைவர் குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
    பாளை அருகே கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பாளை அருகே உள்ள கீழநத்தம் வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). இவர் கீழநத்தம் பஞ்சாயத்தில் தூய்மை தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை ஆறுமுகம், நான்கு வழிச்சாலை வழியாக கீழநத்தம் செல்வதற்கு மொபட்டில் சென்றார். நான்கு வழிச்சாலை விலக்கில் திரும்பும்போது, பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த சிவகாசியை சேர்ந்த நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை அருகே பஸ் மோதியதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லை:

    கங்கைகொண்டான் நான்கு வழி சாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் விபத்தில் பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செய்துங்கநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் மதன் (வயது 30). இவர் தனது மனைவின் தங்கையான மேகலா (18) என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திருநகரியில் இருந்து சாம்பவர் வடகரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பாளை கிருஷ்ணாபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகில் வந்த போது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து அம்பை வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மேகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் உள்ளிட்ட போலீசார் படுகாயமடைந்த மதனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பலியான மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வேன் டிரைவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த 1 மாதத்தில் சுமார் 3 விபத்து நடந்துள்ளது. எனவே இவ்விடத்தில் பயணிகள் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×