search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பஸ் மீது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி
    X

    சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பஸ் மீது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

    • மின் கம்பி ஒன்று உரசியதால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் ராமர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தார்.
    • பஸ்சில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதன்பிறகு இந்த சம்பவம் சின்னசேலம் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 36). இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவரகா பணியாற்றி வந்தார்.

    நேற்று மாலையில் ராமர் பஸ்சில் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து கல்லாநத்தம் கிராமத்தில் இறக்கி விட்டார். பின்னர் அந்த பஸ்சை டிரைவர் ராமர் ஒரு மேடான பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தலாம் என நினைத்து ஓட்டி சென்றார்.

    அப்போது பஸ் மீது அந்த வழியாக சென்ற மின் கம்பி ஒன்று உரசியது. இதனால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் ராமர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தார்.

    பஸ்சில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதன்பிறகு இந்த சம்பவம் சின்னசேலம் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ராமரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×