search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land issue"

    • செல்வ அரசி பிரச்சினைக்குரிய இடத்தில் சாணம் தட்டியதாக கூறப்படுகிறது.
    • அன்னக்கிளி, அவரது மகன்கள் ராபின், சுபின் ஆகியோர் சேர்ந்து செல்வ அரசியை கம்பால் தாக்கினர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள ஆவரந்தலை, மேலத்தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை மனைவி அன்னக்கிளி என்ற லெட்சுமி (வயது 58). இவருக்கும்,அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வ அரசிக்கும் (53) இடப்பிரச்சினை இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று செல்வ அரசி பிரச்சினைக்குரிய இடத்தில் சாணம் தட்டியதாக கூறப்படுகிறது. இதனை அன்னக்கிளி தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, மோதல் உருவானது. செல்வ அரசி, அவரது கணவர் கிருஷ்ணன் (61), அவரது மகன் மார்ஸ் நிக்ஸ் கோல்டன் (27) ஆகியோர் சேர்ந்து அன்னக்கிளியை தாக்கினர். அதனை தடுக்க வந்த அன்னக்கிளியின் மகன்கள் ராபின் (36), சுபின் (31) ஆகியோரையும் தாக்கினர். இதுபோல அன்னக்கிளி, அவரது மகன்கள் ராபின், சுபின் ஆகியோர் சேர்ந்து செல்வ அரசியை கம்பால் தாக்கினர். இந்த மோதலில் பெண்கள் உட்பட 4 பேர் காய மடைந்த னர். இதுபற்றி இரு தரப்பி னரும் திருக்குறுங்குடி போலீசில் தனித்தனியாக புகார் செய்த னர். போலீசார் இது தொடர்பாக இரு தரப்பை யும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமர்த்யா சென், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகமான விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருக்கிறார்.
    • நோட்டீஸ், அமர்த்யா சென் வீட்டு கதவிலும் ஒட்டப்பட்டுள்ளது. மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா:

    நோபல் பரிசு பெற்ற பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகமான விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருக்கிறார்.

    இந்நிலையில், 89 வயதான அவருக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம், வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் அமர்த்யா சென்னுக்கு சட்டப்படி பாத்தியப்பட்ட 1.25 ஏக்கருக்கு பதிலாக, அவர் 1.38 ஏக்கர் நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதன்மூலம் 13 சென்ட் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார். அந்த நிலத்தை விட்டு அவர் வெளியேற வேண்டும்.

    இவ்விவகாரத்தில் 19-ந் தேதி பகல் 12 மணிக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அப்போது, அமர்த்யா சென்னோ அல்லது அவருடைய வக்கீல்களோ ஆஜராக வேண்டும்.

    எழுத்துப்பூர்வமான பதிலை, 18-ந் தேதி மாலை 6 மணிக்குள் தெரிவிக்கலாம். சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸ், அமர்த்யா சென் வீட்டு கதவிலும் ஒட்டப்பட்டுள்ளது. மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். நோட்டீசுக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை.

    இந்நிலையில், விஸ்வபாரதி பல்கலைக்கழக செய்தித்தொடர்பாளர் மஹுவா பானர்ஜி கூறியதாவது:-

    அமர்த்யா சென், இன்னும் நோட்டீசுக்கு பதில் அளிக்கவில்லை. இ்ன்னும் சில நாட்கள் காத்திருப்போம். 19-ந் தேதிக்குள் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். 19-ந் தேதி, இறுதி தீர்ப்பு மூலம் இப்பிரச்சினை முடித்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழகாலனியை சேர்ந்தவர் கணேசன் மனைவி முத்துசெல்வி . இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார்
    • மாரியப்பனின் தந்தை சண்முகவேல் பிரச்சினைக்குரிய இடத்தில் எம்.சாண்ட் மணலை கொட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழகாலனியை சேர்ந்தவர் கணேசன் மனைவி முத்துசெல்வி (வயது 35). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார்.

    முத்துசெல்விக்கும், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் மாரியப்பனுக்கும் (42) கடந்த 5 ஆண்டுகளாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் முத்துசெல்வி தனது வீட்டில் கழிப்பறை கட்ட ஏற்பாடு செய்தார். இதையடுத்து டிப்பர் லாரியில் எம், சாண்ட் மணல் கொண்டு வரப்பட்டு, வீட்டின் அருகே கொட்டப்பட்டது.

    இதற்கு மாரியப்பனின் தந்தை சண்முகவேல் பிரச்சினைக்குரிய இடத்தில் எம்.சாண்ட் மணலை கொட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், அவரது தந்தை சண்முகவேல், மாரியப்பன் மகன் சதீஸ், மகள் சுதா ஆகியோர் சேர்ந்து, முத்துசெல்வியை தாக்கினர். இதுபோல முத்துசெல்வி, அவரது மகன்கள் ஆனந்த், சுரேஷ், முனிஸ் மற்றும் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் சேர்ந்து மாரியப்பனையும், அவரது தந்தை சண்முகவேலையும் தாக்கினர். அத்துடன் மாரியப்பன் தனது வீட்டின் கழிவறை கதவு, கோப்பை, கூரைகளையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    மோதலில் காயமடைந்த முத்து செல்வி நெல்லை அரசு மருத்துவமனையிலும், சண்முகவேல், மாரியப்பன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இதுதொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த மாரியப்பன், சண்முகவேல், சதீஸ், சுதா, முத்துசெல்வி, ஆனந்த், சுரேஷ், முனிஸ் மற்றும் சுப்பிரமணி ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பகண்டை கூட்டுரோடு அருகே நிலத்தகராறில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ரமேஷ் மனைவி அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

    கள்ளச்குறிச்சி:

    கள்ளச்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் ராஜவேல். அவரது மனைவி மாலா. இவர் சம்பவத்தன்று தனது நிலத்தை டிராக்டர் மூலம் உழுவதற்கு சென்றார். அவரை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். நிலப்பிரச்சினையால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த தகராறு நடந்தது. இது குறித்து இரு தரப்பினரும் பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் மாலா கொடுத்த புகாரின் பேரில் அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் மீதும், ரமேஷ் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் ராஜவேல், மாலா, அமுதா, சண்முகப்பிரியா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    என் விவசாய நிலத்தை அபகரிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முயற்சி செய்கிறார் என்று தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். #thapandian #ministerSrinivasan

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.

    மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு தா.பாண்டியன் ஈரோடு மூலக்கரையில் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.

    அப்போது தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்று அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்களை ஒடுக்க நினைத்து அவர்கள் மீது வழக்கு போடுவது, கைது செய்வது என்று நடவடிக்கையை எடுப்பதன் மூலம் விவசாயிகளை ஒடுக்க முடியாது. அடக்க முடியாது. ஆகவே உடனடியாக அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    நானும் ஒரு விவசாயி என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எனக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை அபகரிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முயற்சி செய்து வருகிறார். அவரது மருமகனுக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களையும் அவர் பட்டா போட்டு கொடுக்கட்டும். அத்து மீறி என் சொந்த நிலத்தில் நுழைந்தால் சும்மா இருக்க மாட்டோம். காவல் துறையையும் சந்திப்போம். அமைச்சரையையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.

    மேலும் தனியார் நிலத்தை பங்கு போடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய வேண்டும்.

    ஜெயலலிதாவை “மெதுவாக கொல்லும் ஸ்லோ பாய்சன் கொடுத்து” கொன்று விட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார். இதை அவர் தெளிவாக சொல்ல வேண்டும். ஸ்லோபாய்சன் கொடுத்தது யார்? கொலையாளி யார்? யார்-யார் உடந்தை? என்பதை அவர் சொல்ல வேண்டும். அவரிடம் ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்த வேண்டும். அப்படி அவரிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியாகும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு தா.பாண்டியன் கூறினார். #thapandian #ministerSrinivasan

    ×