search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister srinivasan"

    என் விவசாய நிலத்தை அபகரிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முயற்சி செய்கிறார் என்று தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். #thapandian #ministerSrinivasan

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.

    மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு தா.பாண்டியன் ஈரோடு மூலக்கரையில் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.

    அப்போது தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்று அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்களை ஒடுக்க நினைத்து அவர்கள் மீது வழக்கு போடுவது, கைது செய்வது என்று நடவடிக்கையை எடுப்பதன் மூலம் விவசாயிகளை ஒடுக்க முடியாது. அடக்க முடியாது. ஆகவே உடனடியாக அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    நானும் ஒரு விவசாயி என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எனக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை அபகரிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முயற்சி செய்து வருகிறார். அவரது மருமகனுக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களையும் அவர் பட்டா போட்டு கொடுக்கட்டும். அத்து மீறி என் சொந்த நிலத்தில் நுழைந்தால் சும்மா இருக்க மாட்டோம். காவல் துறையையும் சந்திப்போம். அமைச்சரையையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.

    மேலும் தனியார் நிலத்தை பங்கு போடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய வேண்டும்.

    ஜெயலலிதாவை “மெதுவாக கொல்லும் ஸ்லோ பாய்சன் கொடுத்து” கொன்று விட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார். இதை அவர் தெளிவாக சொல்ல வேண்டும். ஸ்லோபாய்சன் கொடுத்தது யார்? கொலையாளி யார்? யார்-யார் உடந்தை? என்பதை அவர் சொல்ல வேண்டும். அவரிடம் ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்த வேண்டும். அப்படி அவரிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியாகும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு தா.பாண்டியன் கூறினார். #thapandian #ministerSrinivasan

    பல அரிய நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மட்டுமே மருந்து உள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #ministersrinivasan

    திண்டுக்கல்:

    சித்த மருத்துவர்களுக்கு தலைவராக விளங்கும் அகஸ்தியர் பிறந்ததினம் சித்தமருத்துவ தினவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் தேசிய சித்தமருத்துவ தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் விஜயா வரவேற்புரையாற்றினார். மாவட்ட கலெக்டர் வினய் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    உலகில் நம்முன்னோர்கள் சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து உள்ளனர். தற்போது கூட டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலுக்கு சித்தமருத்துவ முறையே சிறந்ததாக உள்ளது. இதுபோல பல அரியநோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மட்டுமே மருந்து உள்ளது.

    வீடுகளில் பிரசவம் பார்த்த சமயங்களில் தாயும், சேயும் நலமாக காப்பாற்றப்பட்டனர். எனவே சித்தமருத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் போற்றி மதிக்கவேண்டும். தமிழகஅரசு சித்தமருத்துவத்திற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சென்னையில் தனியாக ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணிநேரமும் செயல்படும் 6 ரத்த சுத்திகரிப்பு மையங்கள், பழனியில் ஒரு மையம் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அதனால்தான் பல பகுதிகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் மேயர் மருதராஜ், நலப்பணிகள் இணைஇயக்குனர் டாக்டர் மாலதிபிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு மூலிகை கண்காட்சியை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். #ministersrinivasan

    கஜா புயல் காரணமாக கொடைக்கானல் பகுதியில் பயிர்கள் சேதம் அடைந்தது. இதனை பார்வையிடுவதற்காக வந்த அமைச்சர் மற்றும் எம்பி காரை மலை கிராம மக்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #gajayclone

    பெரும்பாறை:

    கஜா புயல் காரணமாக கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி, பெரியூர், பாச்சலூர், மஞ்சள்பரப்பு, தாண்டிக்குடி, காமனூர், பண்ணைக்காடு, ஆடலூர், சோலைக்காடு, பன்றிமலை, பூலத்தூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிட்டிருந்த காபி, மிளகு, வாழை, அவக்கோடா, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது.

    இதனை பார்வையிடுவதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் உதயகுமார் எம்.பி., கலெக்டர் வினய் மற்றும் அதிகாரிகள் கொடைக்கானல் பகுதிக்கு சென்றனர். கே.சி.பட்டி பகுதியில் சென்ற போது மலை கிராம மக்கள் திடீர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் எம்.பி. காரை மறித்தனர்.

    அப்போது மக்கள் ஆவேசமாக எங்களது பகுதியில் கஜா புயலால் கடும் பாதிப்பு அடைந்தோம். எங்களை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை போல் எங்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் உதவவில்லை என்று கூறினர்.

    உடனே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காரை விட்டு கீழே இறங்கி மக்களை சந்தித்து குறைகேட்டார். அப்போது மலை கிராம மக்கள் அவரிடம் மனுக்களை அளித்தனர்.

    அந்த மனுவில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் எம்.பி. இதுவரை தங்களது பகுதிக்கு வரவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எந்த பணியும் மேற்கொள்ள வில்லை.

    எங்களது பகுதியில் யானைகள் வாழையை அழித்து விட்டு செல்கின்றன. கஜா புயல் காபி தோட்டங்களை முற்றிலும் அழித்து விட்டது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தனர்.

    மனுக்களை வாங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். #gajayclone

    திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கஜா புயலால் ரூ.250 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். #gajacyclone #ministersrinivasan

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் சீனிவாசன் இன்று வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 3 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அதில் 62 குடும்பத்தினருக்கு தலா ரூ.8500 மதிப்பிலான நிவாரண பொருட்களும் அரிசி, வேஷ்டி-சேலை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் 1,098 உயர் அழுத்த மின் கம்பிகளும், 4,096 குறைந்த அழுத்த மின் கம்பிகளும் சேதமாகின. இதில் 1,127 மின் கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளன. புயல் தாக்குதலுக்கு பிறகு மின் வாரிய ஊழியர்களின் பணி மிகவும் பராட்டுக்குரியது. ஏனெனில் அவர்கள் இன்னும் தங்கள் பணியை 24 மணி நேரமும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக கிடைக்க லாரிகள் மூலமும், ஜெனரேட்டர் கொண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் 836.6 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் தாங்கள் எதிர்பார்த்ததை விட சேத மதிப்பு அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளனர். நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் நானே நேரடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து வந்துள்ளேன். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர முதல்-அமைச்சரும், அனைத்து அமைச்சர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் புயலால் ரூ.250 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய குழுவினரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #ministersrinivasan 

    ஜெயலலிதாவுக்கு ராஜதுரோகம் செய்தவர் டி.டி.வி.தினகரன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.#TTVDhinakaran #Jayalalitha

    மதுரை:

    காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் பேசினர்.

    தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. எங்களுக்குத் தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையமே கூறி விட்டது. ஆனால் ஒரு நபர் எப்படியாவது அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் அபகரிப்பேன் என்கிறார். அவர் வேறுயாருமல்ல ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.வி.தினகரன்தான்.

    அவரது நடவடிக்கைகளை கடந்த 32 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். ஜெயலலிதா மீது தி.மு.க. வினர் தொடர்ந்த லண்டன் ஓட்டல் வழக்கில் தினகரனும் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் அவர் தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு வைத்து தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவித்துக்கொண்டார்.

    இதனை அறிந்த ஜெயலலிதா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய், இனி நான் சாகும்வரை என் முகத்தில் விழிக்கக்கூடாது என்று கட்சியை விட்டு தினகரனை தூக்கி எறிந்தார். ஜெயலலிதாவுக்கு தினகரன் ராஜதுரோகம் செய்த காரணத்தால் அவர் விரட்டப்பட்டார்.

     


     

    அதன் பிறகு பாண்டிச் சேரியில் தினகரன் பதுங்கி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று தொண்டர்களையும், மக்களையும் ஏமாற்றி வருகிறார். அவரது மாய வலையில் தொண்டர்கள் விழ வேண்டாம்.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்று எல்லோருக்கும் தெரியும். 20 ரூபாய் நோட்டை காட்டி தினகரனை தொகுதி மக்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் நெல்லை, விருதுநகர் என்று சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய தினகரனை இப்போது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மோசடி நபர் அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என்கிறார்.

    தினகரனை நம்பி சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் சகதியில் காலை விட்டவர் கதைபோல இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தொகுதியிலும் வளர்ச்சி பணிகள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.

    ஏனென்றால் அந்த எம்.எல்.ஏ.க்களுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன் ரத்தத்தை சிந்தி வெற்றியை பெற்று தந்தார். ஜெயலலிதாவுக்காக மக்கள் வாக்களித்தனர்.

    எனவே தான் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து வளர்ச்சி பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

    தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. மீது வீண்பழிகளை சுமத்தி வருகிறார்கள். அது மக்கள் மன்றத்தில் எடுபடாது.

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, சேலம் 8 வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மக்களை தூண்டிவிட்டு சிலர் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். பொதுமக்களை குழப்பி வரும் சமூக விரோதிகள் மீது அ.தி.மு.க. அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அ.தி.மு.க. மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். எனவே மக்களின் நல்வாழ்வுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்துள்ளது. தற்போது நாம் அனைவரும் பெருமைப்படும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கிடைத்துள்ளது. இது அ.தி.மு.க.அரசு செய்த மகத்தான சாதனையாகும். இதன் மூலம் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #Jayalalitha

    ×