search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து- 11 பேர் படுகாயம்
    X

    வேலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து- 11 பேர் படுகாயம்

    வேலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேலூர்:

    சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று அதிகாலை 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை பெங்களூரை சேர்ந்த முகமதுதன்வீர் டிரைவர் ஓட்டிச் சென்றார். வேலூர் அடுத்த மோட்டூர் என்ற இடத்தில் பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் பஸ் டிரைவர் முகமதுதன்வீர், கோவையை சேர்ந்த பிரகாஷ், குமரேசன், பாஸ்கர், ராஜேஷ், சத்தியநாதன், விஷ்ணுஹாசன், ஹரிகா, அன்னபூர்ணா உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்பூலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×