search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two people arrest"

    ஓசூர் டோல்கேட் அருகே எரிசாராயம் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தையும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டோல்கேட் அருகே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரியை மதுவிலக்கு பிரிவு போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் 530 கேனில் எரிசாராயம் கடத்தப்பட்டது தெரியவந்தது.

    அந்த லாரியை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குட்டறைப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் திண்டிவனம் வேலகம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் உடன் வந்திருந்தார்.

    2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் டெல்லியில் இருந்து வேலூருக்கு 530 கேன்களில் எரிசாராயம் கடத்தி வந்ததை ஒப்பு கொண்டனர். ஒரு கேனில் 35 லிட்டர் வீதம் 530 கேன்களில் 18 ஆயிரத்து 150 லிட்டர் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதன் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தையும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். #tamilnews
    குடியாத்தம் அருகே மானை வேட்டையாடிய 2 பேரை கைது செய்து வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட வனஅலுவலர் முருகன் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர் ரவி, வனக்காப்பாளர்கள் பிச்சாண்டி, வெங்கடேசன், பூபதி மற்றும் வனத்துறையினர் பரதராமியை அடுத்த வீரிசெட்டிபல்லி காப்புக்காடுகள் கன்னிங்பாறை பகுதியில் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகமான முறையில் நடமாடிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தபோது பரதராமியை அடுத்த பூசாரிவலசை கிராமத்தை சேர்ந்த மணி (வயது 40), கோபி (32) என்பதும், அவர்கள் கம்பிவலை மூலம் பெண் மானை வேட்டையாடி கொன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து மான் தலை மற்றும் தோலை கைப்பற்றினர். மேலும் மணி, கோபி ஆகியோரை வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சிறுபாக்கம் அருகே காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    சிறுப்பாக்கம் பகுதியில் கள்ள சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக விருத்தாச்சலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மணமல்லிக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுப்பாக்கம் அடுத்த வடபாதி ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த வட பாதியை சேர்ந்த சரத்குமார் (வயது 28). திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த முரளி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 550 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் மணமல்லி கூறும் போது, திண்டிவனத்தை சேர்ந்த முரளி, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் எரிசாராயம் வாங்கி அதனை சரத்குமார் என்பவர் மூலம் கடத்திச் சென்று சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.

    இதுகுறித்து வந்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 லிட்டர் சாராயத்துடன் ஒரு காரையும், 2 வாலிபர்களையும் கைது செய்தோம். அதில் சரத்குமார் என்பவர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவரைத் தேடி வந்தோம்.

    இந்நிலையில் ஏழுமலையை போலீஸார் கைது செய்து விட்டதால் தற்போது காஞ்சிபுரம் மலைப்பகுதியிலிருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து சரத்குமாரும், முரளியும் சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர். அவர்களை தற்போது கைது செய்து 550 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவ்வாறு தெரிவித்தார். பகுதியில் கள்ள சாராயம் மற்றும் எரிசாராயம் விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முழுமையாகத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    பல்லடம் அருகே முயல்வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த பல்லடம் கே.அய்யம்பாளையம் அருகே புத்தாண்டிபாளையம் பகுதியில் சிலர் வலை வைத்து முயல் வேட்டையாடுவதாக திருப்பூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட வன அதிகாரி மாரிமுத்து உத்தரவின்பேரில் திருப்பூர் வன சரக அதிகாரி மகேஷ் தலைமையில் வனவர் சுப்பையா மற்றும் ஊழியர்கள் புத்தாண்டிபாளையம் பகுதியில் அதிரடியாக நேற்றுமுன்தினம் மாலை ரோந்துப்பணியை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு 2 வாலிபர்கள் வலை மற்றும் சுருக்கு கம்பிகளை வைத்து முயல் வேட்டையாட முயன்றது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி(வயது 30), பிரபு(24) என்பதும், இவர்கள் இருவரும் புத்தாண்டிபாளையத்தில் உள்ள செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் தங்கியிருந்து தொழிலாளர்களாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து வலையை கைப்பற்றி வெள்ளைச்சாமி, பிரபு ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். 2 பேருக்கும் தலா ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. 
    ×