என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுபாக்கம் அருகே காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
Byமாலை மலர்25 Sep 2018 4:47 PM GMT (Updated: 25 Sep 2018 4:47 PM GMT)
சிறுபாக்கம் அருகே காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
சிறுப்பாக்கம் பகுதியில் கள்ள சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக விருத்தாச்சலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மணமல்லிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுப்பாக்கம் அடுத்த வடபாதி ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த வட பாதியை சேர்ந்த சரத்குமார் (வயது 28). திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த முரளி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 550 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் மணமல்லி கூறும் போது, திண்டிவனத்தை சேர்ந்த முரளி, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் எரிசாராயம் வாங்கி அதனை சரத்குமார் என்பவர் மூலம் கடத்திச் சென்று சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.
இதுகுறித்து வந்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 லிட்டர் சாராயத்துடன் ஒரு காரையும், 2 வாலிபர்களையும் கைது செய்தோம். அதில் சரத்குமார் என்பவர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவரைத் தேடி வந்தோம்.
இந்நிலையில் ஏழுமலையை போலீஸார் கைது செய்து விட்டதால் தற்போது காஞ்சிபுரம் மலைப்பகுதியிலிருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து சரத்குமாரும், முரளியும் சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர். அவர்களை தற்போது கைது செய்து 550 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தார். பகுதியில் கள்ள சாராயம் மற்றும் எரிசாராயம் விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முழுமையாகத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
சிறுப்பாக்கம் பகுதியில் கள்ள சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக விருத்தாச்சலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மணமல்லிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுப்பாக்கம் அடுத்த வடபாதி ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த வட பாதியை சேர்ந்த சரத்குமார் (வயது 28). திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த முரளி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 550 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் மணமல்லி கூறும் போது, திண்டிவனத்தை சேர்ந்த முரளி, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் எரிசாராயம் வாங்கி அதனை சரத்குமார் என்பவர் மூலம் கடத்திச் சென்று சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.
இதுகுறித்து வந்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 லிட்டர் சாராயத்துடன் ஒரு காரையும், 2 வாலிபர்களையும் கைது செய்தோம். அதில் சரத்குமார் என்பவர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவரைத் தேடி வந்தோம்.
இந்நிலையில் ஏழுமலையை போலீஸார் கைது செய்து விட்டதால் தற்போது காஞ்சிபுரம் மலைப்பகுதியிலிருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து சரத்குமாரும், முரளியும் சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர். அவர்களை தற்போது கைது செய்து 550 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தார். பகுதியில் கள்ள சாராயம் மற்றும் எரிசாராயம் விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முழுமையாகத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X