search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Struggle"

    • மர்மவிலங்குகள் கடித்தும் சில ஆடுகளை இழுத்து சென்றும் விடுகின்றது.
    • பொதுமக்கள் உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆடு மாடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ஆடுகளை மர்மவிலங்குகள் கடித்தும் சில ஆடுகளை இழுத்து சென்றும் விடுகின்றது. ஜமாபந்தியில் இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்மவிலங்குகள் கடித்து கொன்றுள்ளன.

    இந்தநிலையில் நேற்று இரவு 2 விவசாயிகளின் நிலங்களில் உள்ள ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றுள்ளன. சில ஆடுகளை இழுத்தும் சென்றுள்ளது. இதையடுத்து மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்
    • போலீசார் வராததால் பொதுமக்கள் தானாக கலைந்து சென்றனர்.

    ஆரணி:

    ஆரணி அருகே வேதாஜிபுரம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஊராட்சியில் பல முறைகேடுகள் ஈடுபட்டுள்ளதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா ரங்கநாதன் ஆரணி ஒன்றிய அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சித்ரா அருள்நாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி வேதாஜிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

    உடனடியாக ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் டேங்க் ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆரணி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    போலீசார் யாரும் வராததால் பொதுமக்கள் தானாக முன்வந்து கலைந்து சென்றனர்.

    விருத்தாசலம் அருகே நள்ளிரவில் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள நேமம் கிராமத்தை சேர்ந்தவர் தில்லை காந்தி (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் மணல் கடத்தியதாக கருவேப்பிலங்குறிச்சி போலீசாரால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த நேமம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று நள்ளிரவு கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தில்லை காந்தியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியதாக தான் தில்லைகாந்தியை பிடித்து வந்து வழக்குப் பதிவு செய்து கைது செய்ய உள்ளோம். அவரை விட முடியாது என்று போலீசார் கூறினர். இதனால் பொதுமக்கள் நள்ளிரவு 12 மணி வரை போலீஸ் நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் நள்ளிரவு 1 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வீட்டு வரி ரசீது கேட்டு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூர் ஊராட்சி மரவநத்தம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் கொட்டகை மற்றும் வீடுகள் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் பிம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று வீட்டு வரி ரசீது கேட்டபோது, வீட்டு வரி ரசீது வழங்கப்படவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திடீரென வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் வீட்டு வரி ரசீது வழங்கப்படும் என கூறினர். இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
    புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட இருசன்கொட்டாய் கிராமத்தில் புதிய மதுக்கடை அமைக்கப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் பரவியது. இதையடுத்து நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த கடை முன்பு திரண்டனர். அவர்கள் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இருசன்கொட்டாய் கிராமத்தைச் சுற்றி பாலஜங்கமனஅள்ளி, அட்டப்பள்ளம், கூன்மாரிக்கொட்டாய், வெத்தலஆத்துக்கொட்டாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள் உள்ளன. மதுக்கடை வழியாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு மதுபிரியர்களால் இடையூறு ஏற்படும். எனவே இந்த பகுதியில் மதுக்கடை அமைக்கக் கூடாது. மீறி அமைத்தால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை போல் கெயில் நிறுவனமும் புயல் நிவாரணம் வழங்க கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே செட்டிச்சிமிழி கிராமத்தில் கெயில் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் எரிவாயு, வெள்ளக்குடி பகுதிக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த அலுவலகம் முன்பு நேற்று திடீரென திரண்ட பெருமாளகரம், கொடிமங்கலம், நீலனூர், மேலதிருமதிகுன்னம், அத்திசோழமங்கலம், மழையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிறுவனத்தின் கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், கெயில் நிறுவனம் நிவாரண உதவிகளை வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மேலதிருமதிகுன்னம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீரையன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தின்போது கெயில் நிறுவனத்தின் சார்பில் புயல் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். கிராம மக்களின் திடீர் போராட்டத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டம் நடத்திய கிராம மக்கள் நிவாரண உதவி செய்யாவிட்டால் நிறுவனத்தின் வாசலில் சமைத்து சாப்பிட போவதாக கூறி, பாத்திரங்களையும், கியாஸ் அடுப்பையும் எடுத்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கெயில் நிறுவன பொறுப்பு மேலாளர் கோடீஸ்வரன், கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திங்கட்கிழமைக்குள் நிவாரண உதவிகள் குறித்து முடிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

    நாமக்கல்லில் காலை நேரத்தில் நகருக்குள் இயக்கிய சரக்கு லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில்களில் வரும் பொருட்கள் லாரிகள் மூலம் ராமாபுரம்புதூர் வழியாக முதலைப்பட்டி புறவழிச்சாலையை அடைந்து, அங்கிருந்து தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்த லாரிகள் காலை, மாலை நேரத்தில் செல்வதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. மேலும் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. அவற்றை கருத்தில் கொண்டு காலை 10 மணிக்கு மேல் மாலை 4 மணிக்குள் மட்டுமே ராமாபுரம்புதூர் வழியாக லாரிகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து உள்ளனர். அதற்கு லாரி உரிமையாளர்களும் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு சரக்கு ஏற்றிய லாரிகள் ராமாபுரம்புதூர் வழியாக சென்றன. அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒரு லாரியை சிறைபிடித்தனர். ஒப்புகொண்டபடி இல்லாமல் தொடர்ந்து லாரிகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சிறைபிடிப்பு போராட்டம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் காலை, மாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவது இல்லை என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சரக்கு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரக்கு ஏற்றிச்சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 8-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    திருவாரூர்:

    கஜா புயல் தாக்கி ஒருவாரமாகியும் இதுவரை மின்சாரம், குடிநீர் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகளும் வந்து சேதங்களை பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நிவாரண பணிகளும் பாதிப்பு அடைந்துள்ளது.

    முத்துப்பேட்டை பகுதியில் விரைவில் மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் நிவாரண பொருட்கள் செல்லாத பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும். கட்டிடங்கள் பள்ளி சேதமாகி இருப்பதால் பள்ளிகளை திறக்கக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஏராளமானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

    6 வழிசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். Publicprotest

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ. 3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணை, பருத்திமெனிகுப்பம், காக்க வாக்கம், பேரண்டூர், பனபாக்கம், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. சாலை அமைக்க நிலம் அளவிடும் பணிகள் தொடங்கபட்டுள்ளன.

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம், சென்னங்காரணை, பருத்தி மேனி குப்பம், காக்கவாக்கம், பேரண்டூர், பனபாக்கம், மாம்பாக்கம் உட்பட 10 கிராமங்கள் வழியாக சாலை அமைத்தால் ஆயிரக்கனக்கான ஏக்கர் நிலபரப்பில் விவசாய விளை நிலங்கள், நூற்றுக்கனக்கான வீடுகள் பாதிக்கபடும் சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாற்று பாதையில் சாலை அமைக்க கோரி 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

    என்றாலும், அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டித்தும், மாற்று பாதையில் சாலை அமைக்க கோரியும் 10 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் 3 லாரிகளில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர். மாற்று பாதையில் சாலையை அமைக்காவிட்டால் தற்கொலை செய்த கொள்வோம் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பய்யாவிடம் வழங்கினர். தற்கொலை செய்வோம் என்று 10 கிராம பொது மக்கள் கோ‌ஷங்கள் எழுப்பியதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. Publicprotest

    புதுவாயல்-பழவேற்காடு 4 வழிச் சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னக்காவனம் பகுதியில் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். #Publicprotest

    பொன்னேரி:

    புதுவாயல் முதல் பழவேற்காடு வரை நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை பொன்னேரி அருகே உள்ள சின்னக்காவனம் கிராமம் வழியே செல்கிறது.

    இந்த சாலையில் சின்னக் காவனம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், பழமையான 6 கோவில் இடிக்கப்படும் நிலை உள்ளது.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கிராம மக்களிடம் கருத்து கேட்காமல் சாலை விரிவாக்கப்பணி நடைபெறுவதாக குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் 4 வழிச் சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னக்காவனம் பகுதியில் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் வியாபாரிகள் அடைத்து உள்ளனர்.

    இதனால் சின்னக் காவனம் பகுதி வெறிச் சோடி காணப்படுகிறது. கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ளது.

    4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுபாக்கம் அருகே பழமை வாய்ந்த கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிறுபாக்கம்:

    சிறுபாக்கம் அருகே உள்ளது பொயனப்பாடி கிராமம். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஆண்டவர் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருச்செங்கோடு, திருச்சி, அரியலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

    அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக கோவிலின் மேற்கூரைகள், சுவர்கள், தரைதளத்தில் விரிசல் ஏற்பட்டும், கான்கிரீட் பெயர்ந்து விழுந்தும் சேதமடைந்து காணப்படுகிறது.

    இதனால் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவில் வளாகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி கோ‌ஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
    கன்னியாகுமரி அருகே 100 ஆண்டு பழமையான மாதா சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பஸ் நிலையத்தை அடுத்த முக்கிய சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Mathastatue
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் சன்செட் பாயின்டு அருகே கடற்கரையையொட்டி மாதா குருசடி ஒன்று உள்ளது.

    இந்த குருசடியில் 100 ஆண்டு பழமையான மாதா சிலை உள்ளது. கன்னியாகுமரி, கோவளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த குருசடிக்குச் சென்று மாதா சிலையை வணங்கிச் செல்வது வழக்கம். மேலும் இங்கு வழிபாடுகளும் நடக்கும்.

    கோவளம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் முன்பு இக்குருசடியில் மாதா சிலையை வழிபட்டு செல்வார்கள்.

    இன்று காலையிலும் மாதா சிலையை வழிபட அப்பகுதி மீனவர்கள் குருசடிக்கு சென்றனர். அப்போது குருசடியில் இருந்த மாதா சிலையின் மார்புக்கு மேல் பகுதி உடைந்து கீழே கிடந்தது. தலைப்பகுதி தனியாக உடைக்கப்பட்டு இருந்தது.

    இதைக்கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் குருசடிக்கு வந்து மாதா சிலை உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் சிலையை உடைத்திருக்க வேண்டும் என்று கருதினர்.

    சிறிது நேரத்தில் இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஏராளமான மீனவர்கள், பெண்கள் குருசடி முன்பு திரண்டனர். அவர்கள் மாதா சிலையை உடைத்தவர்கள் யார்? என்பதை கண்டு பிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி பஸ் நிலையத்தை அடுத்த முக்கிய சாலையில் இந்த மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் மாதா சிலையை உடைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    கோவளம் வழியாக கன்னியாகுமரிக்கு வந்த 3 அரசு பஸ்களும் போராட்டக்காரர்களால் சிறை பிடிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் செல்லாமல் இருக்க ரோட்டில் தடைகளையும் ஏற்படுத்தினர். இதனால் அந்த வழியாக வந்த தனியார் பஸ்கள், சுற்றுலா வாகனங்களும் சாலையில் வரிசையாக நின்றன.

    இப்போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    மாதா சிலை உடைப்பு, பொதுமக்கள் மறியல் குறித்த தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி டி.எஸ்.பி. முத்துப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர்.

    போராட்டக்காரர்களுடன் போலீசார் தொடர்ந்து சமரச பேச்சு நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Mathastatue

    ×