search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கடை"

    • மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த 4-ந் தேதி தொடங்கியது.

    விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஏராளமானவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தவர்கள் மட்டுமின்றி ஆந்திராவை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்ப படிவம் மூலம் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் வழங்கிய போது 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதன் மூலம் ரூ.1.370 கோடி வசூலானது. கடை உரிமை கட்டணம் மூலம் ரூ.3,500 கோடி வருவாய் கிடைத்தது.

    தற்போது தலைநகர் ஐதராபாத்தில் மட்டும் 615 கடைகள் உள்ளது. ஐ.டி கார்டரில் உள்ள செரிலிங்கம், விமான நிலையம் அமைந்துள்ள ஷம்ஷாபாத் பகுதியில் உள்ள கடைகளுக்கு கடும் கிராக்கி நிலவியது.

    சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் ரூ.2,639 கோடி அள்ளியுள்ளனர்.

    வேப்பம்பட்டில் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுபான கடை திறக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முதல் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் மதுக்கடை திறக்க வேண்டாம் என்று வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு வரை கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.

    இந்தநிலையில் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுபான கடை திறக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதுக்கடையை மூட வலியுறுத்தியும் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பதாகைகளுடன் மறியலில் ஈடுபட அங்கு குவிந்தனர்.

    தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் சதாசிவம், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் அங்கு மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
    ×