search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public opposition"

    • வனத் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
    • அதிகாரிகள் பணியைத் தொடங்காமல் திரும்பிச் சென்றனா்

    ஊட்டி,

    ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் விவசாய நிலப்பரப்பு அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கையில் வனத்துறை இறங்கியுள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் வனப்பகுதியில் கண்காணிப்பு கோபுரத்தை அமைக்கவேண்டும்.

    விவசாய நிலப்பரப்பில் அமைக்கக்கூடாது என்று தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

    இந்நிலையில் விவசாயப் பகுதியில் வனத் துறையினா் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி பணியைத் தொடங்க வந்த வனத் துறையினரை தடுத்து நிறுத்தினா்.

    இதையடுத்து அப்பகுதியில் வனத் துறையினா் குவிக்கப்பட்டனா்.

    இருப்பினும் விவசாயிகள் எதிா்ப்பால் பணியைத் தொடங்காமல் வனத்துறையினா் திரும்பிச் சென்றனா்.

    • திருச்சி மாநகராட்சி 2 இடங்களில் புதிதாக மின் தகனமேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
    • சுடுகாட்டில் எரியும் பிணங்களில் துர்நாற்றம் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து காற்றை மாசுபடுத்தும். மேலும் அதிகமான பொது மக்கள் அடிக்கடி வந்து செல்வார்கள். தொடர்ந்து சுகாதாரம் பாதிக்கும்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒருசில திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருந்தாலும் ஒரு சில திட்டங்கள் பொதுமக்களின் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் மாநகர பகுதிகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் திருச்சி பஞ்சப்பூர் மற்றும் அரியமங்கலம் பகுதிகளில் எரியூட்டும் மையம் அதாவது சுடுகாடு அமைக்க திட்டமிட்டுள்ளனர். அந்த திட்டமானது தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.

    அதற்காக பஞ்சப்பூர் மற்றும் அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாநகராட்சி அதிகாரிகள் இடங்களை ஆய்வு செய்து வந்தனர்.

    அப்போது பஞ்சப்பூர் பகுதி பொது மக்கள் எங்கள் பகுதியில் எரியூட்டும் மையமான சுடுகாடு அமைக்க வேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பஞ்சப்பூர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறுகையில், ஏற்கனவே பஞ்சப்பூர் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வருகின்றது.

    அதன் மூலமாகவே ஒரு சிலர் பாதிப்படைகிறார்கள். இந்தநிலையில் எரியூட்டும் மையமான சுடுகாடு பஞ்சப்பூரில் அமைத்தால் அந்த பகுதியில் முதலில் சுகாதாரம் சீர்கேடு நடக்கும்.

    பின்னர் சுடுகாட்டில் எரியும் பிணங்களில் துர்நாற்றம் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து காற்றை மாசுபடுத்தும். மேலும் அதிகமான பொது மக்கள் அடிக்கடி வந்து செல்வார்கள். தொடர்ந்து சுகாதாரம் பாதிக்கும். ஆகவே எங்கள் பகுதியில் புதிதாக எரியூட்டும் மையம் அமைக்க வேண்டாம் என்றனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, திருச்சி மாநகர் பகுதியில் தற்போது ஓயாமாரி, கோணக்கரை, கருமண்டபம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 இடங்களில் எரியூட்டும் மையங்கள் செயல்பட்டு வருகின்றது.

    இருந்த போதிலும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 உயிரிழப்புகள் எற்பட்டு தகனம் செய்வதற்காக வருகிறார்கள்.

    இதனால் இடப்பற்றாக்குறையும், எரியூட்ட தாமதமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் தான் புதிதாக பஞ்சப்பூர் மற்றும் அரியமங்கலம் பகுதியில் சுடுகாடு அமைக்கும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. மேலும் பஞ்சப்பூர் பொது மக்கள் இதற்கு அச்சப்பட வேண்டாம்.

    எதிர்ப்பு தெரிவிக்கவும் வேண்டாம் என அவர்களுக்கு புரியும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தையும் அவர்களிடம் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. இந்த கிணறு கடலூர் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட உள்ளதாக கூறி, அரங்கூர் பொதுமக்கள் நேற்று காலை ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். 

    இது குறித்து தகவலறிந்து வந்த ராமநத்தம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இந்நிலையில் பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், ஏற்கனவே அதே பகுதியில் இரண்டு ஆழ்துளை கிணறு உள்ளதாகவும், மீண்டும் 3-வது முறையாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
    தஞ்சையில் அதிகாலையில் மதுக்கடையை திறந்து கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் பாலாஜி நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்தக்கடை சாலையோரமாக, குடியிருப்பு பகுதிகளின் அருகாமையில் செயல்பட்டு வருகிறது.

    நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த கடை அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய மதுக்கடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கடையில் தினமும் காலையில் உள்ளே சிலர் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தனர்.இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் . அந்த வழியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது,

    இந்த மதுக்கடையில் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். அதிகாலை நேரத்தில் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    உயிர்காக்கும் தலைக்கவசம் அணிவது அனிச்சை செயலாக மாற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #Helmet #HC

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், மகிழுந்துகளில் பயணிப்பவர்கள் கட்டாயம் இருக்கைப்பட்டை அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

    சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் உயர் நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணை புதிதல்ல. மோட்டார் வாகனச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் பிரிவைத் தான் செயல்படுத்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

    தமிழகத்தில் 1985ஆம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட உள்துறை (போக்குவரத்து) அரசாணை மூலம் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் 1989-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அதே துறையின் அரசாணை மூலம் தலைக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டது. எனினும் நீதிமன்ற ஆணைகளின்படி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய 6 நகரங்களில் 1.6.2007 முதலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 1.7.2007 முதலும் தலைக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது.

    ஆனால், இது முறையாக நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாகவே சென்னை உயர்நீதிமன்றம் இப்போது தலையிட்டு இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.


    இரு சக்கர வாகனங்களில் செல்வோரில் பெரும்பான்மையினர் தலைக்கவசம் அணிவதை தலையாயக் கடமையாக கருதி பின்பற்றுவதையும், குறைந்த எண்ணிக்கையிலானவர்களிடையே தலைக்கவசம் அணிவதற்கு எதிரான முணுமுணுப்புகள் இருப்பதையும் நான் அறிவேன்.

    ஆனால், அவை ஏற்கத்தக்கதல்ல. இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணிவதில் சிரமங்கள் உள்ளன; வாகனமே ஓட்டத் தெரியாதோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் அளவுக்கு போக்குவரத்துத் துறையில் தலைவிரித்தாடும் ஊழலை சரி செய்யாமல் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதால் என்ன பயன்? சாலைகளில் உள்ள குண்டு குழிகளை சரி செய்ய ஆணையிடாத நீதிமன்றங்கள் அப்பாவி மக்கள் மீது தலைக்கவசத்தை திணிப்பது நியாயமா? என எதிர்ப்புக் குரல்கள் எழுவது எனது செவிகளுக்கும் கேட்கிறது. இந்த வினாக்களில் நியாயம் இருக்கலாம்... ஆனால், தர்க்கம் இல்லை என்பதே உண்மை.

    சாலைகளில் உள்ள குண்டு குழிகள் சரி செய்யப்பட வேண்டும்; ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் நடக்கும் ஊழல்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் சரி தான். ஆனால், இவையெல்லாம் சரி செய்யப்பட்ட பிறகு தான் தலைக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறுவது நமது உயிருக்கு நாமே வைத்துக் கொள்ளும் வேட்டு ஆகும்.

    மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் சரி செய்யப்படாத வரை சாலைகளில் நடக்கும் விபத்துகளில் தலையில் அடிபடாது என்றோ, அடிபட்டாலும் உயிரிழப்பு ஏற்படாது என்றோ யாரால் உத்தரவாதம் அளிக்க முடியும்? யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாது எனும் போது அத்தகைய எதிர்ப்புக் குரல்கள் வாதத்திற்கு வேண்டுமானால் உதவும்; வாழ்க்கைக்கு உதவவே உதவாது. மகிழுந்துகளில் இருக்கைப்பட்டை அணிவதற்கு எதிரான கருத்துகளுக்கும் இந்த விளக்கம் பொருந்தும்.

    சாலை விபத்துகளில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைக்கவசம் அணிவதிலும், இருக்கைப்பட்டை அணிவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2016-ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் 4091 பேர் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டதால் இது 2956 ஆக குறைந்தது. இதை மேலும் குறைக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் தலைக் கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.

    அதேபோல், மகிழுந்து விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு இருக்கைப்பட்டை அணியாதது தான் மிக முக்கியக் காரணம் ஆகும். கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி ஆந்திராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் அம்மாநில முன்னாள் முதல்-அமைச்சர் என்.டி.ராமராவின் புதல்வர் பாலகிருஷ்ணா உயிரிழந்தார். அனைத்து வசதிகளும் கொண்ட மகிழுந்தில் அவர் பயணித்தாலும் இருக்கைப்பட்டை அணியாததால் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் செயல்படவில்லை. அதனால் அவர் உடல் நசுங்கி உயிரிழக்க நேர்ந்தது.

    அலுவல் மற்றும் வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வாகனங்களில் புறப்படுவோர் தங்களுக்காக வீட்டில் காத்திருக்கும் மனைவி, குழந்தைகளை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் தலைக்கவசம் அணிவதும், இருக்கைப் பட்டை அணிவதும் அனிச்சை செயலாக மாறி விடும்.

    இந்த வி‌ஷயங்களில் இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் கூட இனி வெளியில் செல்லும் போது காலனி கைக் கடிகாரம் அணிவது போன்று தலைக் கவசம், இருக்கைப் பட்டை அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Ramadoss #Helmet #HC

    உளுந்தூர்பேட்டை அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்று பகுதிகளில் ஏற்கனவே 8 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பன் நகர் முனியப்பன்கோவில் எதிரே புதிதாக டாஸ்மாக்கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அங்குள்ள கட்டிடத்தில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இன்று அந்த கடைக்கு லாரியில் மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டு இறக்கிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து பச்சையப்பன் நகர் பகுதிக்கு தி.மு.க., விடுதலை சிறுத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்பு அவர்கள் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக்கடையை முற்றுகையிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு டாஸ்மாக் கடை முன்பு நின்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்கள் பகுதியில் டாஸ்மாக்கடையை திறக்கக்கூடாது. உடனே கடையை மூட வேண்டும் என்றனர்.

    புதிதாக டாஸ்மாக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை மூடும்படி அங்கிருந்த ஊழியர்களிடம் போலீசார் கூறினர். இதனைத்தொடர்ந்து கடையில் இறக்கப்பட்ட மதுபாட்டில்களை மீண்டும் லாரியில் ஏற்றி கடையை பூட்டினர்.

    பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளம்பியுள்ளது. #helmet
    சென்னை:

    தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது. இதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

    கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர் சுரேஷ் கூறியதாவது:-

    ஹெல்மெட் அணியாததால் காலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதாக அரசு கூறுகிறது. உயிர் மீது அக்கறை கொள்வது நல்ல வி‌ஷயம் தான். ஆனால் சாலையில் குண்டும் குழியுமாக இருப்பது தான் விபத்துக்கு காரணம். போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிப்பது இல்லை.

    முதலில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் இல்லை. எழும்பூர் நாயர் பாலம் சாலையில் இருந்து பூந்தமல்லி சாலை இணையும் இடத்திலும் புரசைவாக்கம் லாடர்ஸ் செட்டில் இருந்து மோட்சம் தியேட்டர் வரையிலும் சாதாரண நேரத்தில் கூட போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    சாலைகள், பிளாட்பாரங்கள் ஆக்கிரமிப்புகளால் தான் வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. விபத்துக்கு மூல காரணமே இது தான். அதை சீர் செய்யாமல் ஹெல்மெட்டில் கெடுபிடி காட்டுவது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுகிறது.

    பெண்கள், குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எப்படி அனைவரும் ஹெல்மெட் அணிய முடியும். பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கி ஊழியர் நந்தினி கூறும்போது, செல்போனில் பேசிக்கொண்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களாலும் தான் விபத்து ஏற்படுகிறது. பிளாட்பாரம் ஆக்கிரமிப்பு, மோசமான சாலைகளால் ஹெல்மெட் அணிந்தால் கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றார்.

    கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து மதுரை உள்பட சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இணைய தளத்திலும் கண்டனம் தெரிவித்தும், கேலி-கிண்டல் செய்தும் வறுத்தெடுக்கிறார்கள்.

    கருவடிகுப்பத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
    புதுச்சேரி:

    கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில் அருகில் கள்ளுக்கடை, சாராயக்கடை இயங்கி வருகிறது.

    இந்த கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் மதுபான கடை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ராஜா, பாண்டி ஆகியோர் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சபாநாயகர் வைத்திலிங்கம், கலால்துறை ஆணையாளர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    கருவடிகுப்பம் சித்தானந்தா கோவிலை சுற்றி கென்னடி கார்டன், தவமணிநகர், ஜெகராஜ் நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், ஓம்சக்திநகர், சாமிபிள்ளை தோட்டம், அனுக்கிரஹா குடியிருப்பு உள்ளிட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் உள்ளது.

    இங்கு ஏற்கனவே கள்ளுக்கடை, சாராயக்கடை உள்ளது. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் புகார் அளித்து வருகிறோம்.

    இந்நிலையில் புதிதாக மதுபான கடை அமைக்க கலால்துறை அனுமதித்துள்ளது. இதனால் இங்கு பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.

    எனவே கலால்துறை ஆய்வு செய்து மக்களுக்கு இடையூறாக உள்ள இந்த கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    ×