என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓவேலி பகுதியில் வேட்டை தடுப்பு கண்காணிப்பு கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    ஓவேலி பகுதியில் வேட்டை தடுப்பு கண்காணிப்பு கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    • வனத் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
    • அதிகாரிகள் பணியைத் தொடங்காமல் திரும்பிச் சென்றனா்

    ஊட்டி,

    ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் விவசாய நிலப்பரப்பு அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் நடவடிக்கையில் வனத்துறை இறங்கியுள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் வனப்பகுதியில் கண்காணிப்பு கோபுரத்தை அமைக்கவேண்டும்.

    விவசாய நிலப்பரப்பில் அமைக்கக்கூடாது என்று தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

    இந்நிலையில் விவசாயப் பகுதியில் வனத் துறையினா் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி பணியைத் தொடங்க வந்த வனத் துறையினரை தடுத்து நிறுத்தினா்.

    இதையடுத்து அப்பகுதியில் வனத் துறையினா் குவிக்கப்பட்டனா்.

    இருப்பினும் விவசாயிகள் எதிா்ப்பால் பணியைத் தொடங்காமல் வனத்துறையினா் திரும்பிச் சென்றனா்.

    Next Story
    ×