என் மலர்

    நீங்கள் தேடியது "renovation"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • மற்ற நேரங்களில் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் நகரி சாலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான டெலிபோன் மற்றும் இணைய சேவை இணைப்புகள் வழங்கப்பட்டு பரபரப்பாக இயங்கி வந்தது. 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துவந்தனர். ஆனால் தற்போது இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்போது ஒரே ஒரு பணியாளர் வாரம் ஒருமுறை மட்டும் வந்து செல்லும் நிலை உள்ளது. மற்ற நேரங்களில் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பிஎஸ்என்எல் சிம்கார்டு மற்றும் இணைய இணைப்புகளை பெறுவது இப்பகுதி மக்களுக்கு சிரமமாக உள்ளது. இதனால் இந்த அலுவலகத்தை மீண்டும் முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    இது குறித்து ஓய்வு பெற்ற தொலைதொடர்பு துறை பணியாளர் மகாராஜன் கூறுகையில், ஆரம்பகாலங்களில் லேண்ட்லைனுக்குரிய எக்ஸ்சேன்ச் மட்டுமே செயல்பட்டு வந்தநிலையில், பின்னர் 2ஜி மற்றும் 3ஜி அலைகற்றை கூடுதல் வசதிகள் பெற்று டவர் மூலம் தொலைதொடர்பு சேவையை அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனத்தினர் மற்றும் பயனீட்டாளர்கள் என பலர் பெற்று வந்தனர். இந்த நிலையில் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை உரிமம் கிடைக்காத நிலை தொடர்வதால் பயன்பாட்டாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்கி சோழவந்தான் பி.எஸ்.என்.எல். அலுவலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முடுவார்பட்டி ஊராட்சி மயானம் சீரமைப்பு பணி நடந்தது.
    • மயானத்தின் உட்பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டது.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சி மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதுகுறித்த செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியானது. அதன் பேரில் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் மயானத்தை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கியது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி அசோகன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் முன்னிலையில் முடுவார்பட்டி மயானத்தின் முன்பகுதி, புதர் மண்டி காட்சியளித்த நிலையில் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.

    மயானத்தின் உட்பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
    • கோரவலசை பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் மாரந்தை ஊராட்சி தளிர்தலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மழையால் முழுமையாக சேதமடைந்தது.

    இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிரமம் உள்ளதாகவும், மழை காலம் ஆரம்பித்துவிட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் பொதுமக்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதனிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் மாரந்தை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். சேதமடைந்த தளிர்தலை தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல் கோரவலசை பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
    • தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் கடந்த 2010-11-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டு 2013-ம் ஆண்டுபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    தற்போதுதஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.

    அதை சீரமைத்து அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்படுவது குறித்து எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் அரங்கத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் நிருபர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், சீரமைக்க நிதி எவ்வளவு குறித்து ஆலோசனை நடத்தபட்டது. உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.

    அதேபோல், தஞ்சையில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணியிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

    அப்போது, தஞ்சை விமான படை தளத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு இடமா ற்றம் செய்வது குறித்து பிரச்சினை இருந்தது. தற்போது இதுகுறித்து, தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்தி ராவிடம் ஆலோசனை நடத்தினோம்.

    அவர் நில மாற்றம் குறித்து இரண்டு அமைச்சகமும், ஏற்றுக்கொண்டால் விரைவில் தீர்க்கப்பட்டு விமான சேவை தொடங்கப்படும் என்றார்.

    மேலும், தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்தவும், கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியா ளர் கார்த்திகேயன், மண்டல குழுத்தலைவர் நீலகண்டன், மாநகர நல அலுவலர் (பொ) அசோகன் ஆகியோர் உடன் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடன்குடி பஸ் நிலையத்தில் ஒரு வாரமாக உயர் மின்கோபுர விளக்கு எரியவில்லை.
    • தற்காலிகமாக 3- எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்டு, உயர் கோபுர மின்விளக்கு சரி செய்து எரியவிடப்பட்டது

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட உடன்குடி பஸ் நிலையத்தில் ஒரு வாரமாக உயர் மின்கோபுர விளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத காரணத்தினால், பஸ்நிலையம் வரும் பயணிகள்அவதிபட்டனர்.

    இதுபற்றி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் புகார் கூறினர். தற்காலிகமாக 3- எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்டு, உயர் கோபுர மின்விளக்கு சரி செய்து எரியவிடப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப்கல்லாசி, செயல் அலுவலர் பாபு, வார்டு கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், அன்புராணி, சரஸ்வதிபங்காளன், மற்றும் சிவா, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு நடவடிக்கை எடுத்த தலைவர், செயல் அலுவலர், கவுன்சிலர்கள் ஆகியோரை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.
    • இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும் இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிபேர் இருக்கையிலும் மீதி பேர் தரையில் அமர்ந்தும் படித்து வருவதாகவும்,பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் ஒரு கட்டிடத்தின் முகப்பு இடிபாடுகளுடன் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்வதாகவும் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லை என்றும், எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை பராமரித்தும்,சத்துணவு திட்டத்திற்கு தரமான அரிசி வழங்கவேண்டும். இவ்வாறு கரைப்புதூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் கூளாப் பாடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளிக்கூட சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் சேரும் சகயுதிகமாக உள்ளது. இந்த வழியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த சாலை கடந்த 2009 ஆண்டுகளில் போடப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பூரின் மிக முக்கிய ஜூவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் ஜூவல்லரி மாறி இருக்கிறது.
    • தங்க மாங்கல்யம் எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியது.

    திருப்பூர் :

    தங்கமயில் ஜூவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை பதித்துள்ளது. ஆடை உலகம் திருப்பூர் விரும்பும் ஆபரண உலகமாக திகழும் தங்கமயில் ஜூவல்லரி மிகச்சிறந்த நகைகளை மிகக்குறைந்த சேதாரத்தில் வழங்கி வருகிறது.

    ஆகையால் திருப்பூரின் மிக முக்கிய ஜூவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் ஜூவல்லரி மாறி இருக்கிறது. தற்போது திருப்பூர் தங்கமயில் ஜூவல்லரி முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜுவல்லரி திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    விழாவிற்கு தங்கமயில் ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்த தாஸ், இணை நிர்வாக இயக்குனர்கள் பா.ரமேஷ், என்.பி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தொழில் அதிபர் பாண்டீஸ்வரன் ரத்தினம்மாள் திறந்து வைத்தார். தொழிலதிபர்கள் ரமணி ரமேஷ், சோபியா பரமேஸ்வரன், திவ்யா ரமேஷ், ரஜினிகாந்த், கிராம நிர்வாக அதிகாரி சித்ரா விஜயராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

    திறப்பு விழாவின் மிக முக்கிய அம்சமாக தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் தங்க மாங்கல்யம் எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜூலை 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது.
    • பள்ளியில் பயின்ற 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13-ந் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி ஜூலை 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வளாகங்கள் முழுவதும் சேதமடைந்தது 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களும், காவல்துறை வாகனங்களும், தீயில் கருகி சாம்பலாகி போனது. பள்ளியில் உள்ள அலுவலகம் வகுப்பறைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு சேதம் அடைந்தது. பிறகு போராட்டக்காரர்களை விரட்டி அடித்து பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. பின்னர் இந்த வழக்கு சி பி சி ஐ டி மாற்றப்பட்டது.

    பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை தனிப்படை அமைத்து 350 -க்கும் மேற்பட்டவர்களை இதுவரை கைது செய்துள்ளனர். இந்த கலவரத்தால் பள்ளியில் பயின்ற 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது மாணவர்களின் பெற்றோர் தரப்பில் பள்ளியை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் பத்து நாட்களுக்குள் சக்தி மெட்ரிக் பள்ளியை சீரமைத்து திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிப்பிரிவு அதிகாரியை நியமனம் செய்து அவர் தலைமையில் பள்ளியை 45 நாட்களுக்குள் சீர் அமைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் 68 நாட்களுக்குப் பிறகு பள்ளி சீரமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதலே சீரமைக்கும் பணி தொடங்கியது பள்ளி கட்டிடங்கள், சேதம் அடைந்த பேருந்துகள், சேதமடைந்த மரங்கள், பள்ளியில் உள்ள சேதமடைந்த பொருள்கள், என அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேவதானம் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. 4 வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள தேவதானம் சொக்கநாதன்புத்தூர் முகவூர் போன்ற பல்வேறு கிராமமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பெரியகோவில் தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. 4 வருடங்களாக தொடர்முயற்சி மேற்கொண்டார்.

    இதையடுத்து தெப்பத்தை சீரமைக்க ரூ. 3.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கோவில் குளத்தை சீரமைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் தனுஷ் குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் மற்றும் மிசா நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print