search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பஸ் நிலையத்தில்  உயர் மின்கோபுர விளக்கு சீரமைப்பு
    X

    சீரமைக்கப்பட்ட விளக்குகளை படத்தில் காணலாம்

    உடன்குடி பஸ் நிலையத்தில் உயர் மின்கோபுர விளக்கு சீரமைப்பு

    • உடன்குடி பஸ் நிலையத்தில் ஒரு வாரமாக உயர் மின்கோபுர விளக்கு எரியவில்லை.
    • தற்காலிகமாக 3- எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்டு, உயர் கோபுர மின்விளக்கு சரி செய்து எரியவிடப்பட்டது

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட உடன்குடி பஸ் நிலையத்தில் ஒரு வாரமாக உயர் மின்கோபுர விளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத காரணத்தினால், பஸ்நிலையம் வரும் பயணிகள்அவதிபட்டனர்.

    இதுபற்றி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் புகார் கூறினர். தற்காலிகமாக 3- எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்டு, உயர் கோபுர மின்விளக்கு சரி செய்து எரியவிடப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப்கல்லாசி, செயல் அலுவலர் பாபு, வார்டு கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், அன்புராணி, சரஸ்வதிபங்காளன், மற்றும் சிவா, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு நடவடிக்கை எடுத்த தலைவர், செயல் அலுவலர், கவுன்சிலர்கள் ஆகியோரை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாராட்டினர்.

    Next Story
    ×