என் மலர்

    நீங்கள் தேடியது "அண்ணாமலை"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பறையர்குடியை இழிவுபடுத்தும் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும், என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியிருந்தார்.
    சென்னை:

    பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், பறையரில் இருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் (From a pariah to a ViswaGuru) என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். பறையர் என்ற சொல்லை அண்ணாமலை பயன்படுத்தியது கடும் சர்ச்சையானது. 

    அண்ணாமலையின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரித்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எச்சரிக்கை என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தார். 

    “பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை-வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட  மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி  @annamalai_k மன்னிப்பு கேட்கவேண்டும்” என வன்னி அரசு கூறியிருந்தார். 

    வன்னி அரசு

    இதற்கு அண்ணாமலை பதில் அளித்து ட்வீட் செய்திருந்தார். அதில், “அண்ணா வணக்கம்! கத்தியை விட நம் புத்தி கூர்மை  என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி  வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும். வாழ்க வளமுடன்!’ என குறிப்பிட்டு மேக்மிலன் அகராதியின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பியிருந்தார்.

    இதற்கும் வன்னி அரசு விளக்கம் அளித்தார். ‘பறையா என்பது இழிவுபடுத்த (offensive) பயன்படுத்தப்படும் பெயர் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மேலும்,பறையா எனும் சொல் அவமதிக்கும் சொல்லாக தென்னிந்தியாவில் பார்க்கப்படுகிறது என்று ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி குறிப்பிடுகிறது. நீக்ரோ என்று அமெரிக்காவில் பயன்படுத்தினால் அது அவமதிப்பு. பறையாவும் அப்படிதான். மேலும்,பறையா என்பது வரலாற்று அடிப்படையில் தென்னிந்தியாவில் உள்ள தொல்குடி பறையர் சமூகத்தை சேர்ந்தோரை குறிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறையா என்று சொன்னால்  தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது சட்டம்’ என வன்னி அரசு குறிப்பிட்டார். 

    இந்த விவகாரம் தொடர்ந்து விவாதப் பொருளாகி வரும் நிலையில், அண்ணாமலை  தனது கருத்து தொடர்பாக மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கை சகோதர சகோதரிகள் நான் ஒரு பதிவில் பயன்படுத்திய 'pariah’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டிருந்தார்கள்! 

    நான் ‘Pariah' எனும் பதத்தை பயன்படுத்தினேனே அன்றி Pariar எனும் பதத்தை அன்று. பின்னது ஹிந்து சமுதாயத்தின் மிகவும் மதிக்கப்படும் அங்கமான சிவ சாம்பவ சமுதாயத்தைக் குறிக்கும் என்பதை அறிவேன். அவர்கள் ஆனையேறும் பெரும் பறையர் என்றே ஹிந்து சனாதன சமயத்தில் அழைக்கப்படுகிறார்கள்

    இதை அறிந்த நான் Pariah என்பதை சமூக இழுக்காக பயன்படுத்தினேன் என சொல்வது விஷமத்தனமானது உள்நோக்கம் கொண்டது. சத்யமேவ ஜெயதே!

    இவ்வாறு அண்ணாமலை  கூறி உள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தடையை மீறி போராட்டம் நடத்திய அண்ணாமலை உள்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோட்டை நோக்கி பா.ஜனதா கட்சி பேரணி நடத்தியது.

    இதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திரண்டு அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் சென்னையில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் நேற்று காலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை தலைமையில் திரண்டு கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய பாரதிய ஜனதாவினர் பின்னர் கலைந்து சென்றனர்.

    தடையை மீறி போராட்டம் நடத்திய அண்ணாமலை உள்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஆண்கள், 1000 பேர் பெண்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பால்கனகராஜ் உள்ளிட்ட 10 மாநில நிர்வாகிகளின் பெயரை குறிப்பிட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    143 ஐ.பி.சி. (அனுமதியின்றி கும்பலாக கூடுதல்), 188 ஐ.பி.சி. (போலீசார் விதித்துள்ள தடையை மதிக்காமல் போராட்டம் நடத்துவது), 41-6 (144 தடை உத்தரவை மீறுதல் ஆகிய 3 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, சென்னையில் 144 தடை உத்தரவு கொரோனா பரவலுக்கு பிறகு தொடர்ந்து அமலில் இருப்பதாகவும், போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு யாருக்கும் அனுமதி இல்லை. தடையை மீறி போராட்டம் நடத்தியதால் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    8 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்த சாதனையும் கடந்த ஓராண்டில் தி.மு.க. அரசின் வேதனையும் மக்களுக்கு புரியதான் செய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்காதது மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் இன்று கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

    அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே திரண்டு அங்கிருந்து பேரணியாக கோட்டை நோக்கி செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 11 கட்சி மாவட்டங்களை சேர்ந்த கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.

    காலை 9 மணி முதல் புறநகர் மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்து குவிய தெடங்கினார்கள். 11 மணியளவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

    இதையொட்டி பாந்தியன் சாலை முனையில் இருந்து ராணி மெய்யம்மை அரங்கம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த சாலை முழுவதும் தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.

    12 மணி அளவில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை போராட்ட மேடைக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அண்ணாமலை வாழ்க, மோடி வாழ்க, பாரத் மாதாகி ஜே என கோஷங்கள் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    தி.மு.க. அரசை சொல்லாததை செய்ய சொல்லவில்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைதான் செய்ய சொல்கிறோம்.

    கடந்த 6 மாதத்தில் மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.17-ம் குறைத்து இருக்கிறது. ஆனால் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போல பெட்ரோல்-டீசல் விலையை குறைத்ததா? கடந்த 4 நாட்களுக்கு முன்பு தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு பற்றி தளபதியிடம் கேட்காதீர்கள், தேர்தல் அறிக்கை தயாரித்தது டி.ஆர்.பாலுதான் என்கிறார்.

    அப்படியானால் அவரை தானே முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும். கடந்த 3 நாட்களாக தி.மு.க. அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகிகளும், மாவட்டம் தோறும் கூட்டம் போட்டு பட்டத்து இளவரசருக்கு முடி சூட்ட தீர்மானம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

    ஆனால் பிரதமர் மோடி கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் வாழ்க்கைக்கு மாதம் ரூ.4 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்து கொண்டு இருக்கிறார்.

    8 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்த சாதனையும் கடந்த ஓராண்டில் தி.மு.க. அரசின் வேதனையும் மக்களுக்கு புரியதான் செய்யும்.

    இப்போது தமிழகத்தில் கஞ்சா ஆபரேஷன்-1 செய்து கொண்டு இருக்கிறார்கள். கஞ்சா ஆபரேசன்-2 என்று நடத்தி கொண்டு இருக்கிறார்கள். கஞ்சாவின் தலைநகரமாக தமிழகம் இருக்கிறது.

    இன்னும் 4 நாட்களில் விஞ்ஞானப்பூர்வமாக கண்ணுக்கு தெரியாத காற்றிலும், மின்சாரத்திலும் அமைச்சர்கள் செய்து இருக்கிற 2 மிகப்பெரிய ஊழல் பட்டியலை வெளியிட போகிறேன். அப்போது இந்த அரசின் முறைகேடுகள் வெளியே தெரிய வரும்.

    பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர்கள் அதை மீட்க வேண்டும் என்று பேசுகிறார்கள். கொடுத்த உங்களால் அதை மீட்க முடியாது. இப்போது பா.ஜனதா களத்தில் இறங்கி இருக்கிறது. அதை செய்து காட்டுவோம்.

    தமிழகத்தில் இருந்து செலுத்தும் வரி, மத்திய அரசு வழங்கிய நிதி பற்றிய தவறான தகவல்களை முதல்-அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

    இப்போது இங்கு திரண்டு இருக்கிற கூட்டம் சாமானிய மக்களால் நிரம்பி இருக்கிறது.

    இதுதான் அரசியல் எழுச்சியாக மாறும். மீடியா என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டு பா.ஜனதாவுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் மீடியாக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள். அதே நேரம் ஏசு பிரான் சொன்னது போல ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை நாங்கள் திருப்பி காட்ட மாட்டோம். திருப்பி அடிப்போம். மீடியாக்களை சிவப்பு விளக்கு என்று விமர்சித்தவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

    இந்த போராட்டத்தின் வாயிலாக அரசுக்கு நான் சொல்வது உடனடி யாக நீங்கள் சொன்னதை செய்யுங்கள். இல்லா விட்டால் இன்னும் 20 நாட்கள் கழித்து மாவட்டம் தோறும் உண்ணாவிரதம் இருப்போம். அப்போதும் செய்யவில்லை என்றால் 30 நாட்கள் கழித்து திருச்சியில் 10 லட்சம் பேரை திரட்டி மிகப்பெரிய பேரணி நடத்துவோம். அது ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சிதான். தமிழகத்திலும் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

    தி.மு.க. அரசு கைது செய்யலாம். பொய் வழக்கு போடலாம். பா.ஜனதா தொண்டர்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

    சில தியாகங்கள் மூலம்தான் வெற்றி பெற முடியும். தி.மு.க.வா? பா.ஜனதாவா? வெற்றி பெற போவது யார்? என்று பார்த்து விடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அண்ணாமலை தலைமையில் அவர்கள் கோட்டையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்கள் கைகளில் பா.ஜனதா கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர்.

    இந்த பேரணியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில நிர்வாகிகள் கருப்பு முருகா னந்தம், கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, டால்பின் ஸ்ரீதர், கராத்தே தியாக ராஜன், சசிக்குமார், ரமேஷ், திருப்பதி நாராய ணன், வக்கீல் பால் கனகராஜ், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், தனசேகர், செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தீவுத்திடலில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், நேப்பியர் பாலம் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
    சென்னை:

    தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டு எழும்பூரில் திரண்டனர்.

    எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கூடிய பா.ஜனதாவினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். அவர்கள் கோட்டை நோக்கி தடையை மீறி பேரணியாக செல்ல முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திரண்டு அங்கிருந்து கோட்டை நோக்கி செல்வதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்த போதிலும் தலைமை செயலகம் அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் சென்று விடக்கூடாது என்பதில் போலீசார் இன்று மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனர். தலைமை செயலகத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    தீவுத்திடலில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், நேப்பியர் பாலம் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் பாரிமுனை, ஐகோர்ட்டு அருகில் இருந்து கோட்டையை நோக்கி வரும் சாலைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. தலைமை செயலகம் எதிரில் உள்ள பூங்கா பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வள்ளுவர் கோட்டம் அருகே 31-ந் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் போராட்டத்துக்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் 2 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் தனக்கு கிடைத்து இருப்பதாகவும் கூறி உள்ளார். இது தொடர்பாக 2 ஊழல்கள் பற்றிய விபரங்களை ஆதாரங்களுடன் அடுத்த வாரம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

    அண்ணாமலையின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த துறை? எந்த அமைச்சர்கள்? என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.

    இதற்கிடையில் வருகிற 31-ந்தேதி சென்னையில் கோட்டை நோக்கி நடை பயணம் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளனர்.

    பட்ஜெட்டில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை தரவில்லை என்று குறிப்பிட்டனர். ஆனால் தவறான தகவலை தெரிவித்ததாக கூறி இந்த கோட்டை நோக்கிய போராட்டத்தை பா.ஜனதா நடத்துகிறது.

    வள்ளுவர் கோட்டம் அருகே 31-ந் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்துக்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகத்தில் தனக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை பார்த்து கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
    பிரதமர் மோடி நேற்று சென்னை வந்து ரூ.31,500 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் சென்னை வருகை பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகை குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

    இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:-

    பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பேசியது கட்சி கூட்டத்தில் பேசியது போல் இருந்தது. நேரு உள்விளையாட்டரங்க நிகழ்ச்சியில் தமிழை உயர்த்திப் பிடித்திருக்கிறார் பிதரமர் மோடி.

    தமிழகத்தில் தனக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை பார்த்து கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முதலமைச்சரின் நடத்தையால்,வெட்கப்படுகிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரையும் உள்ளடக்கிய தமிழகத்தின் வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார். 

    மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,  கச்சத் தீவை மீட்டுத் தர வேண்டும்,  தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். அதுவே உண்மையான கூட்டாட்சியாக அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

    நரேந்திர மோடி பிரதமராக வந்திருப்பது பாஜக நிகழ்ச்சிக்காக அல்ல.
    பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதலமைச்சர் அரசியல் செய்துள்ளார்.  

    எங்கள் முதல்வர் கருணை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது,  இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகனாகவும், பெருமை வாய்ந்த தமிழனாகவும், தமிழக முதலமைச்சரின் மோசமான நடத்தையால் நான் வெட்கப்படுகிறேன். 

    கச்சத்தீவு பற்றி பேச விரும்பினாலும், 1974ல் இந்திரா காந்தியினால் இலங்கைக்கு இந்த தீவை பரிசாக வழங்கியதை முதலமைச்சர் மறந்து விட்டார். ஏன் இந்த திடீர் விழிப்பு? 1974 முதல் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து மக்களை சூறையாடின. 

    ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் எப்பொழுதும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக அதிகரித்து, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பயனடைகின்றன. 

    கூட்டாட்சி முறையைப் பற்றி தொடர்ந்து பேசுகிறார், ஆனால் ஜி.எஸ்.டி. 
    கவுன்சிலை அவமதிக்கிறார், இது கூட்டாட்சியின் எடுத்துக்காட்டு. 

    கூட்டாக உருவாக்கப்பட்ட சூத்திரத்தின்படி நிலுவைத் தொகை செலுத்தப்படுகிறது. முதல்வர் அவரது விருப்பங்கள் மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறார். திமுக எப்போதாவது உண்மைகளை கவனிக்கிறதா? அவர்களுக்கு அரசியலில் மட்டுமே ஆர்வம்.

    இவ்வாறு தமது டுவிட்டர் பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரதமர் டெல்லி செல்வதற்கு முன்பாக பாஜக தலைவர்கள் கண்டிப்பாக சந்திப்போம், சிறிது நேரம் உரையாடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

    பிரதமர் நநேர்திர மோடி அவர்கள் 31,600 கோடி மதிப்பில் மத்திய அரசின் நிறைவடைந்த முக்கியத் திட்டங்களை திறந்து வைப்பதற்காக நாளை சென்னை வருகிறார்.

    நாளை மாலை 5.10 மணிக்கு வந்து நேரு ஸ்டேடியத்தில் ஒரே இடத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

    3 மணிநேர பயணத்தில் மிக முக்கியமாக தமிழகத்தில் சென்னை எழும்பூர் உள்பட 5 ரெயில்வே நிலையங்களில் மேம்படுத்துதல் பணி நடைபெறுகிறது. பிறகு, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் லாஜிஸ்டிக் நோடல் பார்க்கை சென்னை துறைமுகம் பகுதியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 1162 பேருக்கு லைட் அவுஸ் மாடல் வீடுகள் வழங்கப்படுகிறது.

    மிக முக்கியமான விஷயங்கள் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், பிரதமர் டெல்லி செல்வதற்கு முன்பாக பாஜக தலைவர்கள் கண்டிப்பாக சந்திப்போம், சிறிது நேரம் உரையாடுவோம். தமிழகத்தின் அரசியல் நிலை, கட்சியின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. சென்னைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க 50 ஆயிரம் பேர் திரள்கிறார்கள்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாஜக நிர்வாகி பாலச்சந்திரன் கொலையில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எதோ ஒரு காரணத்திற்காக பகையை வைத்துக்கொண்டு இதுபோல் செய்கிறார்கள். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், காவல்துறை தன்னுடைய கண்ணியத்தை கம்பீரத்தை இழந்திருக்கிறது. காவல்துறை சுதந்திரமாக சட்டம்-ஒழுங்கை கையில் எடுத்து செயல்பட வேண்டும்.

    தமிழக காவல்துறைக்கு என இந்திய அளவில் பெயர் இருக்கிறது. அரசியல் தலையீட்டால் அது இப்போது குறைந்துள்ளது.
    அதன் வெளிப்பாடுதான் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை. இதுபோன்று சமீப காலமாக பல சம்பவங்கள் நடந்துள்ளன. 

    எனவே, முதலமைச்சர் உடனடியாக கவனம் கொடுத்து, ரவுடிகளை அடக்கி ஒடுக்க வேண்டும். மக்களுக்கு மிக முக்கியம் பாதுகாப்புதான். பாதுகாப்பே இல்லாத நிலையில் சாதாரண மனிதன் தன்னுடைய வேலையை செய்வான்.

    பாஜக நிர்வாகி பாலச்சந்திரன் கொலையில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். காவல்துறை கைது செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களை சட்டப்படி தண்டிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

    கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் குடும்பத்தை பார்த்துக்கொள்வது கட்சியின் பொறுப்பு. அவர்களின் குடும்பம் எங்களுடைய குடும்பம்போன்றது. 

    இப்போதாவது காவல்துறை விழித்துக்கொள்ளட்டும். முதல்வர் அவர்கள் இப்போதாவது கட்சியின் பிடியில் இருந்து காவல்துறையை விடுவிக்கட்டும். அதை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    தொடர் கொலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனரிடம் கூறியிருக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவேண்டும். 3 நாட்களுக்கு முன்பு காவல்துறை கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் இந்த கொலையை தடுத்திருக்கலாம். 3 நாட்களுக்கு முன்பு போலீஸ் நிலையததில் புகார் அளித்திருக்கிறார்கள். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறை பாலச்சந்தரை குற்றவாளிபோல் சித்தரிப்பதற்கு காட்டும் வேகத்தை, குற்றம் செய்தவர்களை பிடிப்பதற்கு ஏன் காட்டவில்லை?

    இவ்வாறு அவர் கூறினார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிரும், அடிப்படைக் கலால் வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை .

    சென்னை:

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் சுமைகளை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை 2-வது முறையாக குறைத்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது.

    மத்திய அரசின் எரிபொருளின் மீதான கலால் வரியை விட அதிகமாக மாநிலம் கூடுதலாக வரியை வசூலிக்கும் போது வருவாய் இழப்பு எப்படி ஏற்படும்.

    கடந்த தேர்தலில் சொன்ன தி.மு.க.வின் வாக்குறுதியை மறந்து, பெட்ரோல் மீது 5 ரூபாய்க்கு பதிலாக வெறும் 3 ரூபாய் குறைத்து விட்டு டீசலுக்கு வாக்களித்த 4 ரூபாயில் ஒரு பைசா கூட குறைக்காமல் அறிவாலயம் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது.

    தமிழகம் தவிர்த்த இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை அடுத்து மாநில அரசும் விலையை குறைத்து மக்கள் நலனில் அக்கறை காட்டியது.

    முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிரும், அடிப்படைக் கலால் வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை .

    அதைத்தான் மாநில அரசுடன் பகிர்ந்து வருகிறது. ஆனால் கூடுதல் கலால் வரி விவசாய கட்டமைப்புக்கும், மற்றும் சாலை மேம்பாட்டுக்குமான வரித் தொகுப்புகள் திட்ட ஒதுக்கீடு நிதியாகக் கருதப்படுவதால், அதை மாநிலங்களின் திட்டங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது.

    ஆகவே மாநிலங்களுடன் நேரடியாகப் பகிராத திட்ட ஒதுக்கீடு வரியில் மத்திய அரசு வரிக்குறைப்பு செய்துள்ளது.

    தி.மு.க. அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைப்பதன் மூலம் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட வேண்டும். மே 2020-ல் நிறைவேற்றப்பட்ட ஜிஓவை மாற்றியமைத்து, மாநில மதிப்புக் கூட்டு வரியை அடிப்படை விலையின் சதவீதமாக அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.