search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலை
    X
    அண்ணாமலை

    அடுத்த வாரம் ஆதாரங்களுடன் 2 அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடுவேன்- அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வள்ளுவர் கோட்டம் அருகே 31-ந் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் போராட்டத்துக்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் 2 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் தனக்கு கிடைத்து இருப்பதாகவும் கூறி உள்ளார். இது தொடர்பாக 2 ஊழல்கள் பற்றிய விபரங்களை ஆதாரங்களுடன் அடுத்த வாரம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

    அண்ணாமலையின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த துறை? எந்த அமைச்சர்கள்? என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.

    இதற்கிடையில் வருகிற 31-ந்தேதி சென்னையில் கோட்டை நோக்கி நடை பயணம் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளனர்.

    பட்ஜெட்டில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை தரவில்லை என்று குறிப்பிட்டனர். ஆனால் தவறான தகவலை தெரிவித்ததாக கூறி இந்த கோட்டை நோக்கிய போராட்டத்தை பா.ஜனதா நடத்துகிறது.

    வள்ளுவர் கோட்டம் அருகே 31-ந் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்துக்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×